ஒரு உலக மகா பிரச்சனை குறித்து
நித்தியானந்தா என்ற ஒரு போலி சாமியார் மதுரை ஆதினத்தால் ஆதரிக்கப்பட்டமை பரவலான விவாதத்துக்கும் உள்ளாகி இருக்கிறது ஆனால் இது நமது தலைக்கு மேல் இருக்கும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதுவது மிகவும் அபத்தமானது என கருதுகிறேன் .
ஏனெனில் இந்த மதுரை ஆதினத்தின் மேல்
இவர் இளவலாக இருந்தபோது பெரிய ஆதினத்தின் சாப்பாட்டில் விசம் வைத்து கொல்ல முயன்றார் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது (கிட்ட தட்ட நித்தி மேல்இருக்கும் குற்றசாட்டுக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை இது)
பாலும் விசமும் :
----------------
மதுரை ஆதினம் திருவாடுதுறை ஆதினம் மற்றும் வடக்கே ஜீயர் மடங்கள் எல்லாம் குறிப்பிட்ட சாதியினரின் சொத்துக்களை பாதுகாக்கவும் வழிவழியாக ஏற்படுத்தபட்டவை மற்றபடி ஆன்மிக தொண்டு என்பது எல்லாம் மேலோட்டமான ஒரு எஜெண்டா மட்டுமே.
சாதி அமைப்பின் மிக கெட்டி பட்ட வடிவ முகமையாக இந்த ஆதினங்கள் இருப்பதால்
ஆறுமுக சாமி போன்றோரின் போராட்டங்களை கண்டும் காணாதது போல இருந்தார்
மதுரை ஆதினம் .
சமயத்தொண்டும் மக்கள் தொண்டுமே உயிர் மூச்சாக கொண்டு வாழும் மகான்களை
கொண்டதில்லை இந்த மடங்கள் இவைகள் சொத்துகளை பாதுகாக்க எல்லா தெள்ளவாரித்தனமும் செய்யும் மிக சிறிய புத்தி மனிதர்களை தலைவர்களாக
கொண்டவையே ஆகவே இந்த புதிய உறவு பாலுடன் விசம் கலந்ததாக கொள்ள
இயலாது
காமமும் கடவுளும் துறவும்:
----------------------
மதம் மக்களை மயக்கும் அபினி என்றார் மார்க்ஸ் மதத்துடைய தூதர்கள் மட்டும்
மக்களை மயகத்தில் இருந்து தெளிய வைக்கப்போவதில்லை என்பது உறுதி
காமம் நிதர்சனமானது மீதி இரண்டும் கற்பனையானது என்பதை அன்றாட
வாழ்வில் உணரும் நாம் காமத்தின் வடிகால்களை முறையே அமைத்து கொண்டுவாழ்க்கையில் பயணிக்கிறோம் .
காமம் பொய்யானது என சொல்லும் மடாதிபதிகளே கடவுளும் துறவும் நிதர்சனமானதுன்னு சொல்வதன் மூலம் காமத்தின் வலையில் இருந்து மீள இயலாதவர்களாகி விட்டார்கள்பரிதாபம்.
எது முக்கிய பிரச்சனை:
-------------------
சமகாலத்தில் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் ஈழத்தமிழர்களின் துயரம்
விலைவாசி உயர்வு ஆகிய எல்லா பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளும் படியான மிக முக்கியமான பிரச்சனை அல்ல நித்தியானந்தா மடாதிபதியானது ஆனால் எது முக்கியமற்றதோ அதை குறித்து நாம் பேசும்படி ஆக்கப்படுவது உள்நோக்கம்
உடையதல்ல என்றாலும் நமது சக்தியை விரயம் செய்யவே பயன்படும்
இத்தோடு இதை நிறுத்தி கொள்வோம் இணைய வாசிகளே
நித்தியானந்தா என்ற ஒரு போலி சாமியார் மதுரை ஆதினத்தால் ஆதரிக்கப்பட்டமை பரவலான விவாதத்துக்கும் உள்ளாகி இருக்கிறது ஆனால் இது நமது தலைக்கு மேல் இருக்கும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதுவது மிகவும் அபத்தமானது என கருதுகிறேன் .
ஏனெனில் இந்த மதுரை ஆதினத்தின் மேல்
இவர் இளவலாக இருந்தபோது பெரிய ஆதினத்தின் சாப்பாட்டில் விசம் வைத்து கொல்ல முயன்றார் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது (கிட்ட தட்ட நித்தி மேல்இருக்கும் குற்றசாட்டுக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை இது)
பாலும் விசமும் :
----------------
மதுரை ஆதினம் திருவாடுதுறை ஆதினம் மற்றும் வடக்கே ஜீயர் மடங்கள் எல்லாம் குறிப்பிட்ட சாதியினரின் சொத்துக்களை பாதுகாக்கவும் வழிவழியாக ஏற்படுத்தபட்டவை மற்றபடி ஆன்மிக தொண்டு என்பது எல்லாம் மேலோட்டமான ஒரு எஜெண்டா மட்டுமே.
சாதி அமைப்பின் மிக கெட்டி பட்ட வடிவ முகமையாக இந்த ஆதினங்கள் இருப்பதால்
ஆறுமுக சாமி போன்றோரின் போராட்டங்களை கண்டும் காணாதது போல இருந்தார்
மதுரை ஆதினம் .
சமயத்தொண்டும் மக்கள் தொண்டுமே உயிர் மூச்சாக கொண்டு வாழும் மகான்களை
கொண்டதில்லை இந்த மடங்கள் இவைகள் சொத்துகளை பாதுகாக்க எல்லா தெள்ளவாரித்தனமும் செய்யும் மிக சிறிய புத்தி மனிதர்களை தலைவர்களாக
கொண்டவையே ஆகவே இந்த புதிய உறவு பாலுடன் விசம் கலந்ததாக கொள்ள
இயலாது
காமமும் கடவுளும் துறவும்:
----------------------
மதம் மக்களை மயக்கும் அபினி என்றார் மார்க்ஸ் மதத்துடைய தூதர்கள் மட்டும்
மக்களை மயகத்தில் இருந்து தெளிய வைக்கப்போவதில்லை என்பது உறுதி
காமம் நிதர்சனமானது மீதி இரண்டும் கற்பனையானது என்பதை அன்றாட
வாழ்வில் உணரும் நாம் காமத்தின் வடிகால்களை முறையே அமைத்து கொண்டுவாழ்க்கையில் பயணிக்கிறோம் .
காமம் பொய்யானது என சொல்லும் மடாதிபதிகளே கடவுளும் துறவும் நிதர்சனமானதுன்னு சொல்வதன் மூலம் காமத்தின் வலையில் இருந்து மீள இயலாதவர்களாகி விட்டார்கள்பரிதாபம்.
எது முக்கிய பிரச்சனை:
-------------------
சமகாலத்தில் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் ஈழத்தமிழர்களின் துயரம்
விலைவாசி உயர்வு ஆகிய எல்லா பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளும் படியான மிக முக்கியமான பிரச்சனை அல்ல நித்தியானந்தா மடாதிபதியானது ஆனால் எது முக்கியமற்றதோ அதை குறித்து நாம் பேசும்படி ஆக்கப்படுவது உள்நோக்கம்
உடையதல்ல என்றாலும் நமது சக்தியை விரயம் செய்யவே பயன்படும்
இத்தோடு இதை நிறுத்தி கொள்வோம் இணைய வாசிகளே
நன்றி சதுக்க பூதம்
--------------
ஐசிஇ.... யூக வணிகத்தின் கோரப் பிடியில் உலகம்!-சதுக்கபூதம்
அமெரிக்காவை உலக அதிகார மையமாக உலகமே பார்க்கிறது. அமெரிக்காவைவிட ஒரு பெரிய அதிகார மையம் உருவாகி இருப்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது.
உலகிலேயே பணக்கார நாடாக இருக்கும் அமெரிக்காவின் ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) மதிப்பு 15 ட்ரில்லியன் டாலர்கள். ஆனால் 700 ட்ரில்லியன் டாலர் பெருமான வர்த்தகங்களை உலகின் டாப் 9 வங்கிகள் மட்டும், வெளி உலகத்துக்குத் தெரியாதபடி செய்கின்றன என்றால் அந்த வங்கிகள் எவ்வளவு வலிமையானவை என்பதை யூகித்து கொள்ளுங்கள்.
தற்போது உலகிலேயே அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பது வங்கித் துறை தான் (பொருளாதார சரிவின்போது பெரிய வீழ்ச்சி ஏற்பட இருந்தாலும் அரசாங்கத்தை மிரட்டி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது தொடர்கதையாகத் தான் இருந்து வருகிறது). கடன் கொடுப்பது, கடன் அட்டை கொடுப்பது, பெரிய அளவில் பணத்தை பல வகையில் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பது போன்ற வழி முறை தான் அதிக பணம் சம்பாதிக்கும் முறையாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம்.
ஆனால் அதை விட அதிகமாக பணம் சம்பாதிக்கும் முறை ஒன்று உண்டு. அது தான் பங்குகளைச் சார்ந்த வர்த்தகம். ஆங்கிலத்தில் derivatives என்று கூறுவார்கள்.
எந்தத் தொழிலிலும் ஏற்படக்கூடிய அபாயத்தை குறைக்க காப்பீடு எடுப்பது போல், இதுவும் ஒரு அபாயத்தைக் குறைக்க ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வழி முறை தான். நாம் தற்போது அதிகம் கேள்விப்படும் Commodity Tradingம் இதில் ஒரு வகையில் அடக்கம்.
கடந்த பத்தாண்டுகளில் இந்த derivative வர்த்தகத்தின் மதிப்பு $700 டிரில்லியனைத் தாண்டி விட்டது. இது ஒட்டு மொத்த உலக GDP மதிப்பை விட ($59 டிரில்லியன்) பல மடங்கு அதிகம்!.
உதாரணமாக அரிசி சார்ந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம், உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டில் ஏற்படும் இயற்கை சீரழிவு காரணமாக 6 மாதம் கழித்து கடுமையான விலை ஏற்றம் ஏற்படும் என்று அனுமானித்து அந்த விலை ஏற்றத்திலிருந்து தன்னை காத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார் என்று வைத்து கொள்வோம்.
மறுபுறம் பெரிய அளவில் நெல் விளைவிக்கும் நிறுவனம் அல்லது அரிசி கொள்முதல் செய்து விற்கும் நிறுவனம் 6 மாதத்திற்குப் பிறகு ஓரளவு லாபம் தரகூடிய விலையில் அரிசியை விற்றால் லாபகரமானதாக இருக்கும் என நினைக்கிறது என்று கொள்வோம்.
உணவுப் பொருளை விற்கும் நிறுவனம் 6 மாதத்திற்குப் பிறகு சந்தை நிலவரத்தின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கணித்து குறிப்பிட்ட விலைக்கு வாங்க பத்திரம் கொடுப்பார். அதே போல் நெல்லை விளைவிக்கும் நிறுவனம் 6 மாதம் கழித்து அரிசியை குறிபிட்ட விலைக்கு விற்க பத்திரம் கொடுக்கும்.
இந்தப் பத்திரத்தை உற்பத்தியாளர், வங்கிகள் மூலம் வாங்குபவர்களுக்கு விற்பார்.
ஆறு மாதத்துக்குப் பின் அரிசியின் விலை, பத்திரத்தை விற்ற விலைக்குக் குறைவாக வந்தால் விற்பவருக்கு லாபம். வாங்கியவருக்கும் அவரால் தாக்குப் பிடிக்க முடிந்த விலையில் வாங்கி இருப்பதால் நஷ்டம் ஏற்று கொள்ளக் கூடிய அளவில் தான் இருக்கும்.
அதே நேரம் 6 மாதத்துக்குப் பின் அரிசியின் விலை பத்திரத்தை விற்ற விலையை விட அதிகமானால் வாங்கியவருக்கு லாபம். விற்பவரும் கட்டுப்படியாகும் விலையில் விற்றதால் அவருக்கு நஷ்டம் அதிகமில்லை.
உற்பத்தியாளர் மற்றும் வாங்கியவர் இருவருக்குமே இந்த ஏற்பாடு நல்லதுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இந்த வியாபாரத்தில் விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டும் இருந்தால் பரவாயில்லை.
ஆனால் இடையில் தரகர்களாக வரும் பெரிய வங்கிகளால் தான் பிரச்சனையே!
விவசாயப் பொருட்கள், பெட்ரோல் என்றில்லை, அமெரிக்க வீட்டுக் கடன்கள் கூட இம்முறையில் தான் பெருமளவில் நடை பெருகிறது.
உலக அளவில் உணவு பொருட்கள், பெட்ரோல், அமெரிக்க வீட்டு கடன் பத்திர வர்த்தகம் போன்றவற்றின் derivative வர்த்தகத்தின் பெரும்பான்மையான பகுதி நடைபெறுவது Inter Continental Exchange (ICE) என்ற அமைப்பின் மூலம் தான். இந்த வர்த்தகத்தை முழுமையாகக் கட்டுபடுத்துவது JPMorgan Chase, Goldman Sachs, Morgan Stanley, Citigroup, UBS, Barclays, Credit Suisse, Bank of America போன்ற வங்கிகள் மட்டும் தான்.
பங்குச் சந்தையில் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட கணிணிமயமாக்கப்பட்டு விட்டதால் பங்கு வர்த்தகத்தில் அந்த நிமிடத்தில் நடக்கும் வர்த்தகம் அனைவருக்கும் தெரியும். ஆனால் derivativeல் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் ரகசியமாகவே நடக்கிறது.
அதாவது தற்போது அரிசிக்கு 6 மாதத்துக்குப் பின் derivative மூலம் விற்கும் விலை வெளி உலகத்துக்கு சரியாக தெரியாது. அது போல் இந்த வர்த்தகத்தில் வங்கிகள் வாங்கும் கட்டணமும் யாருக்கும் தெரியாது.
அதன் விளைவு வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் சந்தையின் உண்மை நிலவரம் தெரியாது.
வாங்குபவர்களின் விலைக்கும் விற்பவர்களின் விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் வங்கிகள் கைக்கு லாபமாக சென்றடையும்.
இதன் மொத்த மதிப்பு மாபெரும் அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சில கணக்குகள்படி பெரிய வங்கிகள் வாங்கும் கட்டணம் மட்டும் $700 பில்லியன் தாண்டக்கூடும் என்று கருதப்படுகிறது.
இத்தகைய வர்த்தகத்தை கணிணிமயமாக்கி பங்கு வர்த்தகம் போல் திறந்த நிலையில் செயல்படவும், பிற வங்கிகளை இந்த வர்த்தகத்தின் உள் நுழைய அனுமதிக்கவோ அல்லது கூடுதல் அரசு கட்டுப்பாட்டை கொண்டு வரவோ இந்த வங்கிகள் அனுமதிப்பதில்லை.
அதற்கு சர்வதேச அளவில் பல நாடுகளும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இன்னொரு முக்கிய செய்தி: இது போன்ற வர்த்தகத்தில் derivativeயை வாங்குபவர்கள் கட்டாயம் அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் அந்தப் பொருளை கையில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கு derivative ஆகவே விற்று விடலாம். அதன் விளைவு, யூக வர்த்தகர்கள் (Speculative Traders) பொருளின் விலையைத் தாறுமாறாக ஏற்றிவிடலாம் (அது தான் இப்போது நடந்து கொண்டுள்ளது. இதனால் தான் உணவுப் பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் காது கிழிய கத்தி வருகின்றனர்).
அது மட்டுமல்ல ஒரு வங்கி ஒரு derivativeயை மற்றொரு வங்கிக்கு ஒரு குறிபிட்ட விலைக்கு விற்கும். மீண்டும் அதே வங்கி விற்ற வங்கியிடமிருந்து அதே derivativeயை வாங்கிக் கொள்ளும். இதனால் ஒட்டு மொத்த வர்த்தக மதிப்பு அதிகரித்துக் காட்டப்படும். (வங்கியின் வருமானமும் அதிமாக காட்டப்படும்). இந்த அளவை வைத்தும் பொருளின் விலையை உயர்த்தலாம்.
அது மட்டுமன்றி இந்த வர்த்தகத்துக்கு கட்டணத்தையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளும். அதனால் ஏற்படும் விலை ஏற்றத்தை பொருளை கடைசியாக வாங்கும் சாதாரண மனிதன் தான் கொடுக்க வேண்டும். அதாவது செல்வம் சாதாரண மனிதர்களிடமிருந்து வங்கிக்கு இடம் பெயர்கிறது. இதை 'சுற்று வட்ட வர்த்தகம்' (round trip trade) என்று கூறுவார்கள். (தலை சுற்றுகிறதா?)
இதற்கு சிறந்த உதாரணமாக பெட்ரோல் விலை ஏற்றத்தை கூறலாம். 5 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஒவ்வொரு மாதமும் அமெரிக்காவில் இது போல் deravative மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளிச் சந்தை கணக்குப்படி 40 மில்லியன் பேரல் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 99.2% கச்சா எண்ணெய் விற்பனை வெறும் புத்தகத்தில் தான் நடந்துள்ளது. அதில் வசூலிக்கப்படும் கட்டணம் அனைத்தும் நுகர்வோர் தலையில் தான் விடிந்துள்ளது.
இது ஒரு புறமிருக்க தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் எண்ணெய் விலை ஏற்றம் குறைவாக இருப்பதால், அது மேலும் குறையாமல் இருக்க பெரிய எண்ணெய் நிறுவனங்களும், வங்கிகளும் சேர்ந்து கொண்டு நடுக்கடலில் ஏராளமான கப்பல்களில் சுமார் 100-120 மில்லியன் பேரல் அளவுக்கு எண்ணெய்யை சேமித்து (பதுக்கி), நிறுத்தி வைத்துள்ளனர்.
மேற்சொன்ன speculative Trading மூலம் எண்ணெய் விலையை உயர்த்தி சில மாதம் கழித்து கொள்ளை லாபத்துக்கு விற்பதற்கான வழி முறை இது!. அதுவரை இந்தக் கப்பல்களை கடலிலேயே நிறுத்தி வைத்திருப்பார்கள்.
உலகின் பெரும்பான்மையான நுகர்வுப் பொருட்களின் ஒட்டு மொத்த வர்த்தகம் ஒரு சில வங்கிகளின் வசம் சென்றுள்ளது. அதன் மதிப்பு உலகின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பை விட பல மடங்கு அதிகம். பெரிய வங்கிகளின் வளர்ச்சியும் அளப்பறியதாக உள்ளது. மேலை நாடுகளின் அரசின் கடன் சுமையும் தற்போது அதிகரித்து வருகிறது.
மேலை நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்போது இந்த வங்கிகளின் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். அதன் விளைவு விரைவில் அதிகாரங்கள் மற்றும் அரசாங்கம் எடுக்கும்; முடிவுகளைக் கட்டுப்படுத்தும் திறன் அரசிடமிருந்து இந்த வங்கிகளுக்கு இடம் பெயர அதிக வாய்ப்புள்ளது.
[ Read More ]
--------------
ஐசிஇ.... யூக வணிகத்தின் கோரப் பிடியில் உலகம்!-சதுக்கபூதம்
அமெரிக்காவை உலக அதிகார மையமாக உலகமே பார்க்கிறது. அமெரிக்காவைவிட ஒரு பெரிய அதிகார மையம் உருவாகி இருப்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது.
உலகிலேயே பணக்கார நாடாக இருக்கும் அமெரிக்காவின் ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) மதிப்பு 15 ட்ரில்லியன் டாலர்கள். ஆனால் 700 ட்ரில்லியன் டாலர் பெருமான வர்த்தகங்களை உலகின் டாப் 9 வங்கிகள் மட்டும், வெளி உலகத்துக்குத் தெரியாதபடி செய்கின்றன என்றால் அந்த வங்கிகள் எவ்வளவு வலிமையானவை என்பதை யூகித்து கொள்ளுங்கள்.
தற்போது உலகிலேயே அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பது வங்கித் துறை தான் (பொருளாதார சரிவின்போது பெரிய வீழ்ச்சி ஏற்பட இருந்தாலும் அரசாங்கத்தை மிரட்டி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது தொடர்கதையாகத் தான் இருந்து வருகிறது). கடன் கொடுப்பது, கடன் அட்டை கொடுப்பது, பெரிய அளவில் பணத்தை பல வகையில் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பது போன்ற வழி முறை தான் அதிக பணம் சம்பாதிக்கும் முறையாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம்.
ஆனால் அதை விட அதிகமாக பணம் சம்பாதிக்கும் முறை ஒன்று உண்டு. அது தான் பங்குகளைச் சார்ந்த வர்த்தகம். ஆங்கிலத்தில் derivatives என்று கூறுவார்கள்.
எந்தத் தொழிலிலும் ஏற்படக்கூடிய அபாயத்தை குறைக்க காப்பீடு எடுப்பது போல், இதுவும் ஒரு அபாயத்தைக் குறைக்க ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வழி முறை தான். நாம் தற்போது அதிகம் கேள்விப்படும் Commodity Tradingம் இதில் ஒரு வகையில் அடக்கம்.
கடந்த பத்தாண்டுகளில் இந்த derivative வர்த்தகத்தின் மதிப்பு $700 டிரில்லியனைத் தாண்டி விட்டது. இது ஒட்டு மொத்த உலக GDP மதிப்பை விட ($59 டிரில்லியன்) பல மடங்கு அதிகம்!.
உதாரணமாக அரிசி சார்ந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம், உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டில் ஏற்படும் இயற்கை சீரழிவு காரணமாக 6 மாதம் கழித்து கடுமையான விலை ஏற்றம் ஏற்படும் என்று அனுமானித்து அந்த விலை ஏற்றத்திலிருந்து தன்னை காத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார் என்று வைத்து கொள்வோம்.
மறுபுறம் பெரிய அளவில் நெல் விளைவிக்கும் நிறுவனம் அல்லது அரிசி கொள்முதல் செய்து விற்கும் நிறுவனம் 6 மாதத்திற்குப் பிறகு ஓரளவு லாபம் தரகூடிய விலையில் அரிசியை விற்றால் லாபகரமானதாக இருக்கும் என நினைக்கிறது என்று கொள்வோம்.
உணவுப் பொருளை விற்கும் நிறுவனம் 6 மாதத்திற்குப் பிறகு சந்தை நிலவரத்தின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கணித்து குறிப்பிட்ட விலைக்கு வாங்க பத்திரம் கொடுப்பார். அதே போல் நெல்லை விளைவிக்கும் நிறுவனம் 6 மாதம் கழித்து அரிசியை குறிபிட்ட விலைக்கு விற்க பத்திரம் கொடுக்கும்.
இந்தப் பத்திரத்தை உற்பத்தியாளர், வங்கிகள் மூலம் வாங்குபவர்களுக்கு விற்பார்.
ஆறு மாதத்துக்குப் பின் அரிசியின் விலை, பத்திரத்தை விற்ற விலைக்குக் குறைவாக வந்தால் விற்பவருக்கு லாபம். வாங்கியவருக்கும் அவரால் தாக்குப் பிடிக்க முடிந்த விலையில் வாங்கி இருப்பதால் நஷ்டம் ஏற்று கொள்ளக் கூடிய அளவில் தான் இருக்கும்.
அதே நேரம் 6 மாதத்துக்குப் பின் அரிசியின் விலை பத்திரத்தை விற்ற விலையை விட அதிகமானால் வாங்கியவருக்கு லாபம். விற்பவரும் கட்டுப்படியாகும் விலையில் விற்றதால் அவருக்கு நஷ்டம் அதிகமில்லை.
உற்பத்தியாளர் மற்றும் வாங்கியவர் இருவருக்குமே இந்த ஏற்பாடு நல்லதுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இந்த வியாபாரத்தில் விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டும் இருந்தால் பரவாயில்லை.
ஆனால் இடையில் தரகர்களாக வரும் பெரிய வங்கிகளால் தான் பிரச்சனையே!
விவசாயப் பொருட்கள், பெட்ரோல் என்றில்லை, அமெரிக்க வீட்டுக் கடன்கள் கூட இம்முறையில் தான் பெருமளவில் நடை பெருகிறது.
உலக அளவில் உணவு பொருட்கள், பெட்ரோல், அமெரிக்க வீட்டு கடன் பத்திர வர்த்தகம் போன்றவற்றின் derivative வர்த்தகத்தின் பெரும்பான்மையான பகுதி நடைபெறுவது Inter Continental Exchange (ICE) என்ற அமைப்பின் மூலம் தான். இந்த வர்த்தகத்தை முழுமையாகக் கட்டுபடுத்துவது JPMorgan Chase, Goldman Sachs, Morgan Stanley, Citigroup, UBS, Barclays, Credit Suisse, Bank of America போன்ற வங்கிகள் மட்டும் தான்.
பங்குச் சந்தையில் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட கணிணிமயமாக்கப்பட்டு விட்டதால் பங்கு வர்த்தகத்தில் அந்த நிமிடத்தில் நடக்கும் வர்த்தகம் அனைவருக்கும் தெரியும். ஆனால் derivativeல் நடக்கும் வர்த்தகம் அனைத்தும் ரகசியமாகவே நடக்கிறது.
அதாவது தற்போது அரிசிக்கு 6 மாதத்துக்குப் பின் derivative மூலம் விற்கும் விலை வெளி உலகத்துக்கு சரியாக தெரியாது. அது போல் இந்த வர்த்தகத்தில் வங்கிகள் வாங்கும் கட்டணமும் யாருக்கும் தெரியாது.
அதன் விளைவு வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் சந்தையின் உண்மை நிலவரம் தெரியாது.
வாங்குபவர்களின் விலைக்கும் விற்பவர்களின் விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் வங்கிகள் கைக்கு லாபமாக சென்றடையும்.
இதன் மொத்த மதிப்பு மாபெரும் அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சில கணக்குகள்படி பெரிய வங்கிகள் வாங்கும் கட்டணம் மட்டும் $700 பில்லியன் தாண்டக்கூடும் என்று கருதப்படுகிறது.
இத்தகைய வர்த்தகத்தை கணிணிமயமாக்கி பங்கு வர்த்தகம் போல் திறந்த நிலையில் செயல்படவும், பிற வங்கிகளை இந்த வர்த்தகத்தின் உள் நுழைய அனுமதிக்கவோ அல்லது கூடுதல் அரசு கட்டுப்பாட்டை கொண்டு வரவோ இந்த வங்கிகள் அனுமதிப்பதில்லை.
அதற்கு சர்வதேச அளவில் பல நாடுகளும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இன்னொரு முக்கிய செய்தி: இது போன்ற வர்த்தகத்தில் derivativeயை வாங்குபவர்கள் கட்டாயம் அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் அந்தப் பொருளை கையில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கு derivative ஆகவே விற்று விடலாம். அதன் விளைவு, யூக வர்த்தகர்கள் (Speculative Traders) பொருளின் விலையைத் தாறுமாறாக ஏற்றிவிடலாம் (அது தான் இப்போது நடந்து கொண்டுள்ளது. இதனால் தான் உணவுப் பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் காது கிழிய கத்தி வருகின்றனர்).
அது மட்டுமல்ல ஒரு வங்கி ஒரு derivativeயை மற்றொரு வங்கிக்கு ஒரு குறிபிட்ட விலைக்கு விற்கும். மீண்டும் அதே வங்கி விற்ற வங்கியிடமிருந்து அதே derivativeயை வாங்கிக் கொள்ளும். இதனால் ஒட்டு மொத்த வர்த்தக மதிப்பு அதிகரித்துக் காட்டப்படும். (வங்கியின் வருமானமும் அதிமாக காட்டப்படும்). இந்த அளவை வைத்தும் பொருளின் விலையை உயர்த்தலாம்.
அது மட்டுமன்றி இந்த வர்த்தகத்துக்கு கட்டணத்தையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளும். அதனால் ஏற்படும் விலை ஏற்றத்தை பொருளை கடைசியாக வாங்கும் சாதாரண மனிதன் தான் கொடுக்க வேண்டும். அதாவது செல்வம் சாதாரண மனிதர்களிடமிருந்து வங்கிக்கு இடம் பெயர்கிறது. இதை 'சுற்று வட்ட வர்த்தகம்' (round trip trade) என்று கூறுவார்கள். (தலை சுற்றுகிறதா?)
இதற்கு சிறந்த உதாரணமாக பெட்ரோல் விலை ஏற்றத்தை கூறலாம். 5 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஒவ்வொரு மாதமும் அமெரிக்காவில் இது போல் deravative மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளிச் சந்தை கணக்குப்படி 40 மில்லியன் பேரல் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 99.2% கச்சா எண்ணெய் விற்பனை வெறும் புத்தகத்தில் தான் நடந்துள்ளது. அதில் வசூலிக்கப்படும் கட்டணம் அனைத்தும் நுகர்வோர் தலையில் தான் விடிந்துள்ளது.
இது ஒரு புறமிருக்க தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் எண்ணெய் விலை ஏற்றம் குறைவாக இருப்பதால், அது மேலும் குறையாமல் இருக்க பெரிய எண்ணெய் நிறுவனங்களும், வங்கிகளும் சேர்ந்து கொண்டு நடுக்கடலில் ஏராளமான கப்பல்களில் சுமார் 100-120 மில்லியன் பேரல் அளவுக்கு எண்ணெய்யை சேமித்து (பதுக்கி), நிறுத்தி வைத்துள்ளனர்.
மேற்சொன்ன speculative Trading மூலம் எண்ணெய் விலையை உயர்த்தி சில மாதம் கழித்து கொள்ளை லாபத்துக்கு விற்பதற்கான வழி முறை இது!. அதுவரை இந்தக் கப்பல்களை கடலிலேயே நிறுத்தி வைத்திருப்பார்கள்.
உலகின் பெரும்பான்மையான நுகர்வுப் பொருட்களின் ஒட்டு மொத்த வர்த்தகம் ஒரு சில வங்கிகளின் வசம் சென்றுள்ளது. அதன் மதிப்பு உலகின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பை விட பல மடங்கு அதிகம். பெரிய வங்கிகளின் வளர்ச்சியும் அளப்பறியதாக உள்ளது. மேலை நாடுகளின் அரசின் கடன் சுமையும் தற்போது அதிகரித்து வருகிறது.
மேலை நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்போது இந்த வங்கிகளின் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். அதன் விளைவு விரைவில் அதிகாரங்கள் மற்றும் அரசாங்கம் எடுக்கும்; முடிவுகளைக் கட்டுப்படுத்தும் திறன் அரசிடமிருந்து இந்த வங்கிகளுக்கு இடம் பெயர அதிக வாய்ப்புள்ளது.
அரசு மூலதனமும் தனியார் மூலதனமும்:
-------------------------------------------------------
தனியார் மயம் தாராள மயம் உலகமயம் தான் பிரச்சனைகளுக்கு காரணம் என சொல்வது நிஜத்தை விடுத்து நிழலை சொல்வதாகும் முதலாளித்துவம் தான் சமூக சுரண்டல் ஒடுக்குமுறைக்கு ஆதார காரணம் என சொல்லாமல் வேறு ஒரு காரணத்தை கற்பிப்பதாகும்.இதன் மூலம் அரசுடமை ஆகிவிட்டால் தனியார் சுரண்டலில் இருந்தும் ஒடுக்குமுறையில் இருந்தும் தப்பி நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்லலாம் என கருதுவது தவறான கருத்துஆகும் .(அரசு உடமை வேறு சமூக உடமை வேறு)
தனியார் மயத்தை தடுப்போம் அரசே ஏற்று நடத்த சொல்லி போராடுவோம் என கொந்தளிப்பதால் எந்த நன்மையும் மாற்றமும் ஏற்பட போவதில்லை உண்மையில் அரசு மூலதனமும் தனியார் மூலதனமும் அண்ணன் தம்பிகள் தானே தவிர வேறல்ல.
மேலும் சிபிஐ சிபிஎம் சொல்வதுபோல அரசு மயம் தேசியமயம்என்பது ஒரு தங்க தொட்டிலும் அல்ல.
அரசு என்பது வர்க்கத்திற்கு அப்பாற்பட்டதல்ல வர்க்க நலன் சாராத அரசு அல்லது அரசு இயந்திரம் இருக்க முடியாது எனவே அரசு மூலதனமும் ஒரு தனியார் மூலதனமும் வடிவத்தில் மட்டுமே சிறிது மாற்றமுடையது மேலும் எந்தவகையிலும் அரசு மூலதனம் சமூகத்துக்கு சேவை செய்ய உருவாக்கப்படவில்லை.
அதே நேரத்தில் ஒடுக்குமுறை என வந்துவிட்டால் அரசு துறை ஊழியர்களை ஒடுக்க ராணுவத்தையே கொண்டு வந்து நிறுத்தும் தன்மை கொண்டதுதான் அரசு மூலதனம்.
எனவே அரசு மூலதனமும் வர்க்கசார்பானதுதான். இப்போது கேள்வி எழுகிறது அரசு மூலதனம் ஏன் வருகிறது தனியார் மூலதனம் ஏன் வருகிறது அதெப்படி அரசு துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் ஒன்றாகும் என்ற பெருத்த கேள்வியேஅது
அரசுமூலதனம் தனியார் மூலதனத்துக்கு வேர்:
எப்போதுமே ஆதார தொழில்களில் எல்லாம் அரசு மூலதனம் இருக்கவே செய்யும் பிற்பாடு அந்த தொழில்களில் தனியார் மூலதனம் வளர்ந்து விடும்போது அந்த துறைகளை தனியாருக்கு கொடுத்துவிட்டுஅரசு ஒதுங்கி கொள்ளும் தற்போதைய உதாரணம் இரயில்வேயில் கேண்டீன்களில் ஆரம்பித்து கேரேச்களை வாடகைக்கு விடுவதுவரை
தனியாருக்கு வந்துள்ளது அரசு மூலதனம்
தனியார் மூலதனம் தனக்கு போதிய லாபம் கிடைக்காதபோது அந்த துறைகளில் தன்னால் முதலீடு செய்ய முடியாமல் இருக்கும் போதுஅரசு மூலதனம் வருகிறது .இவை இரண்டும் பங்காளிகளே தவிர பகையாளிகள் அல்ல
அரசுபணிகளில் சுணக்கம் :
----------------------------------
ஒரு தனியார் வங்கியில் இருந்து வரும் அழைப்பை கவனித்து இருக்கிறீர்களா அந்த குரல் அதில் இருக்கும் ஒரு போலியான பணிவு குறிப்பிட்ட தகவல்களைமட்டுமே தரும் நுட்பம் தங்களது காரியத்தில் மட்டுமே கவனமாக இருக்கும் பேச்சு நமது கேள்விகளை தவிர்க்கும் சாமர்த்தியம்.
ஒரு அரசு வங்கியில் இருந்து இத்தகைய அழைப்புகள் ஏதும் வராது ஆனால் நேரில் சென்று பேசும்போது கவனித்து இருப்பீர்கள் எதெற்கெடுத்தாலும் ஒரு கடுகடுப்பு வேலையில் ஒரு சுணக்கம் எதிரில் இருப்பவரை ஒரு புழுவை போல பார்த்தல்.
பேச்சில் மட்டுமே பணிவும் காரியத்தில் விரைவும் ஆனால் சுரண்டலில் முதல்தரமானதாகவும் உள்ள தனியார் சேவையோ அல்லது பேச்சில் சிடு சிடுப்பும் சுரண்டல் குறைவான ஆனா சேவையில் பிந்தங்கிய அரசு மூலதனமோ யதார்த்தத்தில் முதலாளிவர்க்கத்தை பாதுகாக்கவும் இந்த முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கவுமே ஏற்படுத்த பட்டவை.
அரசு துறைகளின் வேலை சுணக்கம் எகத்தாளம் இழுத்தடிப்புக்கு காரணம் அரசு துறைகளில் இருக்கும் தொழிற்சங்கங்களும் தற்போது வளர்ந்துவரும் தனியார் மற்றும் கார்பரேட் நிருவனங்களில் இல்லாமல் போன சங்க உரிமையும் காரணம் .
அரசு பணிகளில் ஊழல் :
அரசு துறைகள் மட்டும் நட்டமாவதற்கு காரணம் அதிகாரிகளின் ஊழலே “பணி சுணக்கம்” மட்டுமே கடை நிலை ஊழியர்களின் பொறுப்பு ஆனால் பெரும் அளவில் லஞ்ச ஊழலில்
அரசு துறை அதிகாரிகள் ஈடுபடுவதால் இங்கே அரசு துறைகள் அனைத்தும் நட்டமடைகிறது
உதாரணம் ( பஸ்போக்கு வரத்து , பால் உற்பத்தி நிலையங்கள் நட்டம் )
ஒரு அரசு ஊழியனுக்கு வேலையை செய்யாவிட்டால் கூட பணி பாதுகாப்பு இருக்கிறது அதே நேரம் ஒரு தனியார் ஊழியனுக்கு பணியை செவ்வனே செய்தாலும் பணிப்பாதுகாப்பு போதிய ஊதியம் தேவையான ஓய்வு விடுப்புஆகியவை இல்லை .
1.அரசுமூலதனம் வளர்ச்சியை நோக்கி செல்லாதது ஏன்
2.தனியார் மூலதனம் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொள்வது ஏன்?
மேற்கண்ட இரு கேள்விகளும் மிக முக்கியமானது
மக்களுக்கான சேவை மக்களுக்கான உற்பத்தி மக்களின் நுகர்வு ஆகியவற்றை மைய்யமாக கொண்ட ஒரு அரசை மக்களே அமைக்க வேண்டும் என்றால் அது பாட்டாளி வர்க்க சார்புள்ள ஒரு அரசு அமைந்து உடமைகள் அனைத்தும் சமூக உடமையாக மாறும்போது மட்டுமே நிகழ முடியும் .
1.அரசு மூலதனம் வளர்ச்சியை நோக்கி செல்லாதது ஏன்:
---------------------------------------------------------------------------
முதலாளித்துவ உற்பத்தி நடக்கும் ஒரு நாட்டில் எல்லா பொருளும் சரக்காகவே செய்கிறது எனவே சரக்கு பரிவர்த்தனையின் விளைவான லாபமே முதலாளித்துவத்துடைய உந்து சக்தி ஆனால் சில குறிப்பிட்ட தேவைக்கான அல்லது அடிப்படை சேவைக்கான தொழில்களில் அரசு மூலதனம் என்பது சமூக உணர்வற்ற அதிகார படிநிலைகளால் வழங்கப்படும் சேவை என்பது அது தேவைக்கானதாக இருப்பினும் அதில் ஒரு வித கவனமின்மை அசட்டை வந்துவிடுகிறது.தனியார் மூலதனத்தின் உந்து சக்தி அதன் மூலதனமே அப்படி பட்ட
ஒரு உந்து சக்தியாக அரசு மூலதனத்தில் (உதாரணம் அரசு பெல் போன்ற அரசு உற்பத்தி தொழிற்சாலைகள், அரசின் தொலைபேசி சேவை ) மக்களுக்கான சேவை என்கிற விசயமே
மூலதனத்துக்கு பதிலியான உந்துசக்தி என அமைக்கப்படாவிட்டால் தோல்விதான் மிஞ்சுகிறது.
2.தனியார் மூலதனம் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொள்வது ஏன்?
----------------------------------------------------------------------------------------------------
வளர்ச்சி அடையாவிட்டால் தன்னால் தொடர்ந்து ஜீவித்திருக்க முடியாது என்கிற சந்தை போட்டி
நிபந்தனையே முதல் நிபந்தனையாக தனியார் மூலதனத்தை இயக்குகிறது.லாபம் ஒன்றே நோக்கமாக கொண்டிருப்பதால் அதற்காக தனியார் மூலதனமானது என்னவேண்டுமானாலும் செய்ய சித்தமாக இருக்கிறது
கூலியை குறைக்க அல்லது இடுபொருள்களை குறைக்கவோ அல்லது குறைவான விலையில் கிடைக்கும்
இடுபொருளை பெறவோ அல்லது வேறு எந்தெந்த முறைகளில் லாபம் அடைய முடியுமோ அந்த வகையில்
எல்லாம் செயல்படுகிறது
மூலதனங்களின் வகைபாடும் பாட்டாளிவர்க்கத்தின் பார்வையும் :
-----------------------------------------------------------------------------------------
ஒரு மூலதனத்தில் இருந்து இன்னொரு மூலதனத்தின் அடிமையாக மாறுவதல்ல நமது கோரிக்கை
எல்லா மூலதனத்தின் நுகத்தடியில் இருந்தும் விடுபடுவதும் .சந்தை உற்பத்தி முறையை தூக்கி எறிவதும்
மூலதனத்தின் பிடிக்குள் இருந்து விடுபடவும் திட்டமிட்ட சமூக பொருளுற்பத்தி முறையை உருவாக்குவதன்
மூலம் மனிதனை “பண்டம் “ என்கிற நிலையில் இருந்து மீட்கவும் போராடவேண்டுமே அல்லாது
குறுக்கு வழியை கண்டறிவதல்ல.
a)அரசு மூலதனத்தின் பணியாட்களாக இருப்பினும்
B) தனியார் மூலதனத்தின் தொழிலாளர்களாக இருந்தாலும்
பாட்டாளி வர்க்கம் என்ற அடிப்படையில் திரட்டப்படாத தொழிலாளர்கள் தங்களுக்கு
தொழிற்சங்கம் இருப்பதே வேலையில் இருந்து தப்பித்து கொள்ளவும் கடமையில் இருந்து நழுவினாலும்
யாரும் கேட்கமுடியாது என்கிற தனிமனித வாதத்தை வளர்த்து கொள்ளவே அரசு துறையில்
தொழிற்சங்கம் பயன்பட்டு இருக்கிறது .
சித்தாந்த பிழை:
---------------------
தனியார் மயத்தை எதிப்போம் உலகமயத்தை எதிப்போம் தனிதனியாக பிரச்சனை எதிப்பது என்று எதாவது இருக்கிறதா அல்லது இப்படி சொல்வதன் மூலம் இந்தியாவில் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை இல்லை என சொல்லாமல் சொல்வதா ?
இந்தியாவில் முதலாளித்துவம் பொருள் உற்பத்தி முறைதான் நடைமுறையில் உள்ளது என சொல்லிவிட்டால் சோசலிச புரட்சிதான் தீர்வாக முடியும் ஆனால் நக்சல்பாரிகளும் அதி இடதுசாரிகளும் இன்னும் இந்தியாவுக்குபுதியஜனநாயக புரட்சிதான் சரி என சொல்லிவருவதால் அந்த சட்டைக்குள் இந்த உடலை பொருத்த பார்க்கிறார்கள் .
இந்த முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையை உடைப்போம் முதலாளித்துவத்தை எதிர்ப்போம்
என்பதே மிக சரியான சித்தாந்தமாகும் .
[ Read More ]
-------------------------------------------------------
தனியார் மயம் தாராள மயம் உலகமயம் தான் பிரச்சனைகளுக்கு காரணம் என சொல்வது நிஜத்தை விடுத்து நிழலை சொல்வதாகும் முதலாளித்துவம் தான் சமூக சுரண்டல் ஒடுக்குமுறைக்கு ஆதார காரணம் என சொல்லாமல் வேறு ஒரு காரணத்தை கற்பிப்பதாகும்.இதன் மூலம் அரசுடமை ஆகிவிட்டால் தனியார் சுரண்டலில் இருந்தும் ஒடுக்குமுறையில் இருந்தும் தப்பி நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்லலாம் என கருதுவது தவறான கருத்துஆகும் .(அரசு உடமை வேறு சமூக உடமை வேறு)
தனியார் மயத்தை தடுப்போம் அரசே ஏற்று நடத்த சொல்லி போராடுவோம் என கொந்தளிப்பதால் எந்த நன்மையும் மாற்றமும் ஏற்பட போவதில்லை உண்மையில் அரசு மூலதனமும் தனியார் மூலதனமும் அண்ணன் தம்பிகள் தானே தவிர வேறல்ல.
மேலும் சிபிஐ சிபிஎம் சொல்வதுபோல அரசு மயம் தேசியமயம்என்பது ஒரு தங்க தொட்டிலும் அல்ல.
அரசு என்பது வர்க்கத்திற்கு அப்பாற்பட்டதல்ல வர்க்க நலன் சாராத அரசு அல்லது அரசு இயந்திரம் இருக்க முடியாது எனவே அரசு மூலதனமும் ஒரு தனியார் மூலதனமும் வடிவத்தில் மட்டுமே சிறிது மாற்றமுடையது மேலும் எந்தவகையிலும் அரசு மூலதனம் சமூகத்துக்கு சேவை செய்ய உருவாக்கப்படவில்லை.
அதே நேரத்தில் ஒடுக்குமுறை என வந்துவிட்டால் அரசு துறை ஊழியர்களை ஒடுக்க ராணுவத்தையே கொண்டு வந்து நிறுத்தும் தன்மை கொண்டதுதான் அரசு மூலதனம்.
எனவே அரசு மூலதனமும் வர்க்கசார்பானதுதான். இப்போது கேள்வி எழுகிறது அரசு மூலதனம் ஏன் வருகிறது தனியார் மூலதனம் ஏன் வருகிறது அதெப்படி அரசு துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் ஒன்றாகும் என்ற பெருத்த கேள்வியேஅது
அரசுமூலதனம் தனியார் மூலதனத்துக்கு வேர்:
எப்போதுமே ஆதார தொழில்களில் எல்லாம் அரசு மூலதனம் இருக்கவே செய்யும் பிற்பாடு அந்த தொழில்களில் தனியார் மூலதனம் வளர்ந்து விடும்போது அந்த துறைகளை தனியாருக்கு கொடுத்துவிட்டுஅரசு ஒதுங்கி கொள்ளும் தற்போதைய உதாரணம் இரயில்வேயில் கேண்டீன்களில் ஆரம்பித்து கேரேச்களை வாடகைக்கு விடுவதுவரை
தனியாருக்கு வந்துள்ளது அரசு மூலதனம்
தனியார் மூலதனம் தனக்கு போதிய லாபம் கிடைக்காதபோது அந்த துறைகளில் தன்னால் முதலீடு செய்ய முடியாமல் இருக்கும் போதுஅரசு மூலதனம் வருகிறது .இவை இரண்டும் பங்காளிகளே தவிர பகையாளிகள் அல்ல
அரசுபணிகளில் சுணக்கம் :
----------------------------------
ஒரு தனியார் வங்கியில் இருந்து வரும் அழைப்பை கவனித்து இருக்கிறீர்களா அந்த குரல் அதில் இருக்கும் ஒரு போலியான பணிவு குறிப்பிட்ட தகவல்களைமட்டுமே தரும் நுட்பம் தங்களது காரியத்தில் மட்டுமே கவனமாக இருக்கும் பேச்சு நமது கேள்விகளை தவிர்க்கும் சாமர்த்தியம்.
ஒரு அரசு வங்கியில் இருந்து இத்தகைய அழைப்புகள் ஏதும் வராது ஆனால் நேரில் சென்று பேசும்போது கவனித்து இருப்பீர்கள் எதெற்கெடுத்தாலும் ஒரு கடுகடுப்பு வேலையில் ஒரு சுணக்கம் எதிரில் இருப்பவரை ஒரு புழுவை போல பார்த்தல்.
பேச்சில் மட்டுமே பணிவும் காரியத்தில் விரைவும் ஆனால் சுரண்டலில் முதல்தரமானதாகவும் உள்ள தனியார் சேவையோ அல்லது பேச்சில் சிடு சிடுப்பும் சுரண்டல் குறைவான ஆனா சேவையில் பிந்தங்கிய அரசு மூலதனமோ யதார்த்தத்தில் முதலாளிவர்க்கத்தை பாதுகாக்கவும் இந்த முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கவுமே ஏற்படுத்த பட்டவை.
அரசு துறைகளின் வேலை சுணக்கம் எகத்தாளம் இழுத்தடிப்புக்கு காரணம் அரசு துறைகளில் இருக்கும் தொழிற்சங்கங்களும் தற்போது வளர்ந்துவரும் தனியார் மற்றும் கார்பரேட் நிருவனங்களில் இல்லாமல் போன சங்க உரிமையும் காரணம் .
அரசு பணிகளில் ஊழல் :
அரசு துறைகள் மட்டும் நட்டமாவதற்கு காரணம் அதிகாரிகளின் ஊழலே “பணி சுணக்கம்” மட்டுமே கடை நிலை ஊழியர்களின் பொறுப்பு ஆனால் பெரும் அளவில் லஞ்ச ஊழலில்
அரசு துறை அதிகாரிகள் ஈடுபடுவதால் இங்கே அரசு துறைகள் அனைத்தும் நட்டமடைகிறது
உதாரணம் ( பஸ்போக்கு வரத்து , பால் உற்பத்தி நிலையங்கள் நட்டம் )
ஒரு அரசு ஊழியனுக்கு வேலையை செய்யாவிட்டால் கூட பணி பாதுகாப்பு இருக்கிறது அதே நேரம் ஒரு தனியார் ஊழியனுக்கு பணியை செவ்வனே செய்தாலும் பணிப்பாதுகாப்பு போதிய ஊதியம் தேவையான ஓய்வு விடுப்புஆகியவை இல்லை .
1.அரசுமூலதனம் வளர்ச்சியை நோக்கி செல்லாதது ஏன்
2.தனியார் மூலதனம் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொள்வது ஏன்?
மேற்கண்ட இரு கேள்விகளும் மிக முக்கியமானது
மக்களுக்கான சேவை மக்களுக்கான உற்பத்தி மக்களின் நுகர்வு ஆகியவற்றை மைய்யமாக கொண்ட ஒரு அரசை மக்களே அமைக்க வேண்டும் என்றால் அது பாட்டாளி வர்க்க சார்புள்ள ஒரு அரசு அமைந்து உடமைகள் அனைத்தும் சமூக உடமையாக மாறும்போது மட்டுமே நிகழ முடியும் .
1.அரசு மூலதனம் வளர்ச்சியை நோக்கி செல்லாதது ஏன்:
---------------------------------------------------------------------------
முதலாளித்துவ உற்பத்தி நடக்கும் ஒரு நாட்டில் எல்லா பொருளும் சரக்காகவே செய்கிறது எனவே சரக்கு பரிவர்த்தனையின் விளைவான லாபமே முதலாளித்துவத்துடைய உந்து சக்தி ஆனால் சில குறிப்பிட்ட தேவைக்கான அல்லது அடிப்படை சேவைக்கான தொழில்களில் அரசு மூலதனம் என்பது சமூக உணர்வற்ற அதிகார படிநிலைகளால் வழங்கப்படும் சேவை என்பது அது தேவைக்கானதாக இருப்பினும் அதில் ஒரு வித கவனமின்மை அசட்டை வந்துவிடுகிறது.தனியார் மூலதனத்தின் உந்து சக்தி அதன் மூலதனமே அப்படி பட்ட
ஒரு உந்து சக்தியாக அரசு மூலதனத்தில் (உதாரணம் அரசு பெல் போன்ற அரசு உற்பத்தி தொழிற்சாலைகள், அரசின் தொலைபேசி சேவை ) மக்களுக்கான சேவை என்கிற விசயமே
மூலதனத்துக்கு பதிலியான உந்துசக்தி என அமைக்கப்படாவிட்டால் தோல்விதான் மிஞ்சுகிறது.
2.தனியார் மூலதனம் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொள்வது ஏன்?
----------------------------------------------------------------------------------------------------
வளர்ச்சி அடையாவிட்டால் தன்னால் தொடர்ந்து ஜீவித்திருக்க முடியாது என்கிற சந்தை போட்டி
நிபந்தனையே முதல் நிபந்தனையாக தனியார் மூலதனத்தை இயக்குகிறது.லாபம் ஒன்றே நோக்கமாக கொண்டிருப்பதால் அதற்காக தனியார் மூலதனமானது என்னவேண்டுமானாலும் செய்ய சித்தமாக இருக்கிறது
கூலியை குறைக்க அல்லது இடுபொருள்களை குறைக்கவோ அல்லது குறைவான விலையில் கிடைக்கும்
இடுபொருளை பெறவோ அல்லது வேறு எந்தெந்த முறைகளில் லாபம் அடைய முடியுமோ அந்த வகையில்
எல்லாம் செயல்படுகிறது
மூலதனங்களின் வகைபாடும் பாட்டாளிவர்க்கத்தின் பார்வையும் :
-----------------------------------------------------------------------------------------
ஒரு மூலதனத்தில் இருந்து இன்னொரு மூலதனத்தின் அடிமையாக மாறுவதல்ல நமது கோரிக்கை
எல்லா மூலதனத்தின் நுகத்தடியில் இருந்தும் விடுபடுவதும் .சந்தை உற்பத்தி முறையை தூக்கி எறிவதும்
மூலதனத்தின் பிடிக்குள் இருந்து விடுபடவும் திட்டமிட்ட சமூக பொருளுற்பத்தி முறையை உருவாக்குவதன்
மூலம் மனிதனை “பண்டம் “ என்கிற நிலையில் இருந்து மீட்கவும் போராடவேண்டுமே அல்லாது
குறுக்கு வழியை கண்டறிவதல்ல.
a)அரசு மூலதனத்தின் பணியாட்களாக இருப்பினும்
B) தனியார் மூலதனத்தின் தொழிலாளர்களாக இருந்தாலும்
பாட்டாளி வர்க்கம் என்ற அடிப்படையில் திரட்டப்படாத தொழிலாளர்கள் தங்களுக்கு
தொழிற்சங்கம் இருப்பதே வேலையில் இருந்து தப்பித்து கொள்ளவும் கடமையில் இருந்து நழுவினாலும்
யாரும் கேட்கமுடியாது என்கிற தனிமனித வாதத்தை வளர்த்து கொள்ளவே அரசு துறையில்
தொழிற்சங்கம் பயன்பட்டு இருக்கிறது .
சித்தாந்த பிழை:
---------------------
தனியார் மயத்தை எதிப்போம் உலகமயத்தை எதிப்போம் தனிதனியாக பிரச்சனை எதிப்பது என்று எதாவது இருக்கிறதா அல்லது இப்படி சொல்வதன் மூலம் இந்தியாவில் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை இல்லை என சொல்லாமல் சொல்வதா ?
இந்தியாவில் முதலாளித்துவம் பொருள் உற்பத்தி முறைதான் நடைமுறையில் உள்ளது என சொல்லிவிட்டால் சோசலிச புரட்சிதான் தீர்வாக முடியும் ஆனால் நக்சல்பாரிகளும் அதி இடதுசாரிகளும் இன்னும் இந்தியாவுக்குபுதியஜனநாயக புரட்சிதான் சரி என சொல்லிவருவதால் அந்த சட்டைக்குள் இந்த உடலை பொருத்த பார்க்கிறார்கள் .
இந்த முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையை உடைப்போம் முதலாளித்துவத்தை எதிர்ப்போம்
என்பதே மிக சரியான சித்தாந்தமாகும் .
சொந்த ஊருக்கு போவதென்பது தும்மல் வருவதை போல நடக்கும் ஒரு சராசரி நிகழ்வுதான் எனினும் இந்த முறை எனது பயணமானது கிராமத்தை மைய்யமாக கொண்டதாக இருந்தது .
”திருப்பா சேத்தி “ அதை சுற்றி உள்ள ஊர்களுக்கு போவோம் என்பதை திட்டமிடவில்லை.
நாங்கள் ஊருக்குள் நுழையும்போது பெரிய கம்மாய் மதிலும் “மார்நாடு கருப்ப சாமி” கோவிலும்
கண்ணுக்கு தெரிந்தது . மார்நாடு சீமை என்பது மார்நாடு கம்மாயை நம்பி விவசாயம் செய்யும்
ஊர்களை உள்ளடக்கியது என்கிற புதிய தகவலை( எனக்கு) தந்தார் சகோதரர் .
இங்கே எல்லா விசயத்திலும் சாமியை முன்னிருத்தியே செய்யப்படுகிறது - மிக எளிமையானது இவர்களின் வழிபாடு கடாவெட்டி பொங்கள் வைப்பது வருடம் ஒருமுறையே நாங்கள் போனது திருவிழாவுக்கு அடுத்த நாளாக போய் விட்டதால் திருவிழாவின் மிச்ச சொச்சங்களும் ஊரில் எல்லாரும் விடுப்பு எடுத்த மாதிரியும் காணப்பட்டது.
நேத்து வந்திருக்கலாமே சார் நீங்க விசேசம் நல்லா இருந்தது என வெள்ளந்தியாக சொன்னார்கள்.
சாப்பிடும் நேரம் வந்ததும் என் வீட்டுக்கு உன் வீட்டுக்கு என போட்டி போட்டார்கள் உணவளிக்க
”கதவை சாத்திட்டு போய்விடும் நகரத்து சொந்தங்களை “ நினைத்து கொண்டேன்
ஏக்கர் கணக்காக வைத்திருந்தாலும் ஏழைகள் பலரை பார்க்க முடியும் தலைக்கு எண்ணெய்
வைக்காத பெண்களை பார்க்கலாம் . ஒரு ஏக்கருக்கு நெல் விளைவிக்க என்ன செலவாகிறது
என்று ஒரு பெண்ணிடம் கேட்க விபரங்களை சொன்னார் அவர் சொன்ன மாதிரி பார்த்தால் சுமார் 22 ஆயிரம் செல்வாகிறது அறுவடை என்பது 35 மூட்டைகள் என சொன்னார் முட்டை ஆயிரத்து நூறு என தமிழ்நாடு நேரடி கொள்முதல் நிலையத்தினர் வாங்கி கொள்கிறார்கள்
இதுவே வியாபாரிகளிடம் கொடுத்தால் மூட்டைக்கு ஆறுநூறு மட்டுமே கிடைக்கும் விதைச்ச காசு கூட வராது என்றார் அந்த பெண்.
வியாபாரிகள் விவசாயிகளை சுரண்டவில்லை என கூக்குரலிடும் மூடர்களே
இதை கேளுங்கள் வியாபாரிகளே சுரண்டி திண்கிறார்கள்
மேலும் எழுதுகிறேன்
[ Read More ]
”திருப்பா சேத்தி “ அதை சுற்றி உள்ள ஊர்களுக்கு போவோம் என்பதை திட்டமிடவில்லை.
நாங்கள் ஊருக்குள் நுழையும்போது பெரிய கம்மாய் மதிலும் “மார்நாடு கருப்ப சாமி” கோவிலும்
கண்ணுக்கு தெரிந்தது . மார்நாடு சீமை என்பது மார்நாடு கம்மாயை நம்பி விவசாயம் செய்யும்
ஊர்களை உள்ளடக்கியது என்கிற புதிய தகவலை( எனக்கு) தந்தார் சகோதரர் .
இங்கே எல்லா விசயத்திலும் சாமியை முன்னிருத்தியே செய்யப்படுகிறது - மிக எளிமையானது இவர்களின் வழிபாடு கடாவெட்டி பொங்கள் வைப்பது வருடம் ஒருமுறையே நாங்கள் போனது திருவிழாவுக்கு அடுத்த நாளாக போய் விட்டதால் திருவிழாவின் மிச்ச சொச்சங்களும் ஊரில் எல்லாரும் விடுப்பு எடுத்த மாதிரியும் காணப்பட்டது.
நேத்து வந்திருக்கலாமே சார் நீங்க விசேசம் நல்லா இருந்தது என வெள்ளந்தியாக சொன்னார்கள்.
சாப்பிடும் நேரம் வந்ததும் என் வீட்டுக்கு உன் வீட்டுக்கு என போட்டி போட்டார்கள் உணவளிக்க
”கதவை சாத்திட்டு போய்விடும் நகரத்து சொந்தங்களை “ நினைத்து கொண்டேன்
ஏக்கர் கணக்காக வைத்திருந்தாலும் ஏழைகள் பலரை பார்க்க முடியும் தலைக்கு எண்ணெய்
வைக்காத பெண்களை பார்க்கலாம் . ஒரு ஏக்கருக்கு நெல் விளைவிக்க என்ன செலவாகிறது
என்று ஒரு பெண்ணிடம் கேட்க விபரங்களை சொன்னார் அவர் சொன்ன மாதிரி பார்த்தால் சுமார் 22 ஆயிரம் செல்வாகிறது அறுவடை என்பது 35 மூட்டைகள் என சொன்னார் முட்டை ஆயிரத்து நூறு என தமிழ்நாடு நேரடி கொள்முதல் நிலையத்தினர் வாங்கி கொள்கிறார்கள்
இதுவே வியாபாரிகளிடம் கொடுத்தால் மூட்டைக்கு ஆறுநூறு மட்டுமே கிடைக்கும் விதைச்ச காசு கூட வராது என்றார் அந்த பெண்.
வியாபாரிகள் விவசாயிகளை சுரண்டவில்லை என கூக்குரலிடும் மூடர்களே
இதை கேளுங்கள் வியாபாரிகளே சுரண்டி திண்கிறார்கள்
மேலும் எழுதுகிறேன்
ஒரு மாணவன் தனது பள்ளி ஆசிரியரை கொலை செய்து விட்டான் இதை பார்க்கும் பலருக்கு செய்தியாக தெரியலாம் ஆனால் இந்த மொத்த சமூக வாழ்க்கையின் அவலம் தெரிகிறது இதில் .
முதலில் கல்வி பணிக்காக தனது இன்னுயிரை தந்த அந்த ஆசிரியைக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது கொலைக்கு வன்மையான கண்டனத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.
கல்வி என்பது உற்பத்திக்காகவே :
கல்வியை பற்றி பேசும்போது என்னதான் மேலோட்டமாக அது உற்பத்திக்கு அல்ல கல்வி என்பது அறிவுக்குன்னு பேசினாலும் இந்த சமூகத்தில் வேலைவாய்ப்புக்குதான் கல்வி பயன்படுகிறது பயன்படும் என்பதை மறுப்பவர்களின் வாதமே கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கானது .(அப்படி கல்வி என்பது அறிவு வளர்ச்சிகானது என்கிற உயர்ந்த மதிப்பீட்டை இந்த சமூகத்தில் அடைய முடியாது)
ஆக கல்வி என்பது உற்பத்திக்கு என்றான பின்பு கல்வியில் போட்டி முந்நிபந்தனை ஆகிறது அந்த போட்டியில் வெல்பவனே வேலை சந்தையில் விலைபோவான் என்பது சந்தை விதிகளின் ஒரு தாரக மந்திரம் .
கல்வி சந்தையில் ஆசிரியர்கள் :
கல்வியை விற்கும் நிறுவனங்கள் பெருகிவிட்டன இவற்றின் வேலை உற்பத்திசந்தைக்கு மாணவர்களை தயாரிப்பது இதில் முதலீடு பணம் -ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி வேலை வாங்கி கல்வியை விற்கிறார்கள் .
கல்வி என்பது கடை சரக்கான பின்பு ஆசிரியரை எந்தளவுக்கு பிழிந்து வேலை வாங்க முடியுமோஅந்தளவுக்கு அந்த மாணவனை உற்பத்தி சந்தைக்கு அனுப்ப இயலும் என்ற நிலையில் கல்வி சந்தையில் அடிமாட்டின் நிலமைக்கு ஆசிரியர்கள் வந்துவிடுகிறார்கள் இது தனியார் பள்ளிகளில்
அரசு மூலதனம் செயல்படும் அரசு பள்ளிகளில் இந்த நிலையோ தலைகீழ் விகிதமாகும் அங்கு ஆசிரியரால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் . தனியார் பள்ளிகளில் மாணவர்களால் ஆசிரியர் கொல்லப்படுகிறார் .
ஆகவே குறைந்த கூலிக்கு நிரம்ப வேலை வாங்கப்படும் ஆசிரியர்கள் மாணவர்களை அதிகமார்க்குகள் (சிறந்த அறிவு அல்ல) எடுக்க வைக்காவிட்டால் வேலையில் இருந்து தூக்கப்படுவார்கள் அதே இடத்தில் சந்தையில்வேலை இன்றி காத்திருக்கும் இன்னொரு ஆசிரியர் அமர்த்தப்படுவார் இப்படி கல்விசேவை வழங்கும் சந்தை போட்டியில் வேகமாக நடக்கிறது .
இப்போது தனது உழைப்பு சக்தியை விற்கும் ஆசிரியர்களுக்கு வேலைபாதுகாப்பும் இல்லை உயிர்பாதுகாப்பும் இல்லை என்கிற நிலைக்குவந்துவிட்டார்கள் .
1.ஒரு நாளைக்கு 8 வகுப்புகள் நின்று கொண்டே பணிபுரியவேண்டும்
2.நோட்ஸ் ஆப் லெசன் வார வாரம் வைக்க வேண்டும்
3.தேர்ச்சி விகிதம் குறைய கூடாது
4.வாரத்தில் இரண்டு எக்சாம் வைக்க வேண்டும்.
என இன்னும் அடுக்கடுக்கான பொறுப்புகளை ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்
எதிர்கொள்கிறார் இத்தனை செய்தால் இவருக்கு கிடைப்பது கூலிமட்டுமே
பம்பரம்போல் சுத்தி சுத்தி வேலை வாங்கப்படும் ஆசிரியர்களால் அந்த பள்ளிக்கு அட்மிசன் கூடினால் பள்ளியில் பெயர்தான் வெளியில் தெரியும் பாவம் அந்த ஆசிரியர்கள் பெயர் அல்ல .
காசு கொடுத்து கல்வி வாங்கும் மாணவனின் மனநிலை:
----------------------------------------------------
எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பணம் கொடுத்து சேர்கிறானோ அந்தளவுக்கு தனக்கு கல்வி வழங்கப்படும் என்பதை உணர்கிற மாணவன் ஆசிரியரை ஒரு கூலி அடிமையாக பார்க்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறான் ஆசிரியர்களுக்கோ மாணவனிடமோ அல்லது நிர்வாகத்திடமோ அல்லது பள்ளி வேலை செய்யும் டிரைவர்களிடமோ கூட மதிப்பற்ற ஒரு பாவப்பட்ட ஜீவனாகிவிடுகிறார்கள் மாணவனுக்கு ஒரு நோட்டு புத்தகத்தை வாங்குவதை போல கல்வி என்பது ஒரு சரக்காகும் போது இங்கே கல்வியின் மேலோ அல்லது ஆசிரியரின் மேலோ எந்த மதிப்பும் ஏற்படுவதில்லை .
பண்டங்களுக்கிடையேயான உறவாக ஆசிரியர் மாணவர் உறவு ஆகிவிடுதல்மிகவும் பரிதாபமான நிலையே .
சமூக மாற்றமின்றி கல்வி மாற்றம் கானல் நீர்:
-------------------------------------------
ஒரே கூக்குரல் கல்விமுறையை மாற்றவேண்டும் என கேட்பதை காணமுடிகிறது ஒரு கட்டுரையில்
//மாணவன் ஆசிரியரைக் கொன்றது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து சமூக சூழல்களையும் இதெற்கெல்லாம் யார் யார் பொறுப்பு என்பதையும் சமூக அக்கறையுடன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான். நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தாக வேண்டும் என்ற அபாயச் சங்குதான் இம்மாதிரி சம்பவங்கள்.யோகா, நடனம், இசை, கராத்தே என்று மாணவர்களுக்கு இளம் வயதில் கட்டாயப்பாடமாக்க வேண்டும். கொலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை மட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது.//
பெரும்பாலும் அனைத்து பள்ளிகளிலும் யோகா கற்றுகொடுக்கத்தான் படுகிறது ஆனால் மனிதனை மனிதன் அடித்து
திண்ணும் இந்த சமூக அமைப்பை அப்படியே வைத்து கொண்டு கல்வி முறையை மாற்றுவதால் மட்டும் எந்த மாற்றமும் வந்துவிடாது .அதற்காக சமூகமாற்றம் வரும்வரை இந்த போக்குகெல்லாம் சமூக உற்பத்தி முறையின் மேல் பலியை போட்டு விட்டு பேசாமல் இருந்துவிடவும் முடியாது.
எந்த பிரச்சனைக்கும் மூலகாரணமாக அதன் பொருளாதார காரணமே இருக்கிறது என்பதும் அகவியல் காரணம்
என்பது அதன் உடன்விளைவானது என்பதும் அறிந்து பொருளாதார காரணங்களை மாற்று போராட்டத்தில் பங்கெடுப்பதுடன் அகவியல் காரணங்களை கலையவும் போராடவேண்டும் .
சினிமா -தொலைகாட்சி கலாசார சீரழிவு:
-----------------------------------
சினிமா தொலைக்காட்சி மற்றும் இவற்றின் வகையில் ஏற்படும் கலாசார சீரழிவுதான் மாணவர்களின் மனநிலை சீரழிவுக்கு காரணம் என்ற வாதத்தை வைக்கிறார்கள் . வன்முறையை தூண்டும் சினிமா ,வசனம் காட்சி பதிவுகள் மாணவர்களின் மனதில் வன்முறை எண்ணத்தை தூண்டு வளர்ப்பதும் கார்டூன் சேனல்கள் வன்முறை விளையாட்டுகள் ஆகியவை உருவாக்கும் வன்முறை எண்ணமே இந்த கொலைகளுக்கு காரணம் இத்தகைய சமூக கலாசாரா சீர்கேட்டுக்கு காரணம் அந்த சமூகத்தின் பொருளுற்பத்தி முறையே.
சினிமாவிலும் , தொலைக்காட்சியிலும் கட்டுபாடற்ற பல காட்சிகள் வைக்கப்படுவதும் சந்தையில் தனது
சம்பாத்தியத்தை பெருக்கிகொள்ளும் முதலாளித்துவ வெறிதான் காரணம்
நடுநிசி நாய்கள் படம் எடுக்கும் ஒரு இயக்குநருக்கு சமூக பொறுப்பை பற்றி போதிக்க இயலுமா?
இப்படி கேவலமான ஒரு படத்தை தனது டீன் ஏஜ் காலத்தில் பார்க்கும் ஒரு மாணவனின் மனநிலை குறித்து
படைப்பாளிகளுக்கு எந்த சமூக அக்கறையும் இல்லை ஏனெனில் சமூகத்துக்கு தனிமனிதனின் மேல்
எந்த அக்கரையும் இல்லை .பத்திரிக்கை தொலைக்காட்சி ,சினிமா ஆகியவற்றில் இந்த தனிநபர்வாதம்
தனிநபர் வன்முறை விசம் போல கலக்கப்படுவதை சமூக அக்கரையோடு பார்க்கும் பெற்றோர்கள் குறைவு
பொழுது போக்குக்காக இங்கு வாழ்க்கை தொலைக்கப்படுகிறது .
கட்டுபாடற்ற காட்சி படிமங்க கட்டுபாடற்ற சிந்தனைகளை சிறுவர்கள் மனதில் விதைக்கிறது தனது சக மாணவியுடன்
செக்ஸ் உறவு வைக்கும் காட்சியை படம்பிடித்து இணையத்தில் ஏற்றினான் இன்னொரு மாணவன் இதெல்லாம்
கலாசார சீரழிவின் உச்சம் .
இருவழிகளில் போராட்டம் :
-----------------------
ஆசிரியர்கள் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் அவர்களின் கைகளிலேயே களி மண்ணை போல மாணவன் தரப்படுகிறான் ( பச்சை களிமண்ணை எப்படியும் மாற்றலாம்) சமூக கல்வியை கொஞ்சம் கொஞ்சமாக புகட்டுவதன் மூலம் சமூகத்தை எப்படி பார்ப்பது என்கிற பார்வையை ஆசிரியர்கள் கொண்டு வருதல் தலையாய கடமை என கருதுகிறேன் அதற்கான முன்நிபந்தனை ஆசிரியர்கள் சங்கமாக சேர்வதும் (தனியார் பள்ளிகளில் ) தங்களது உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபடுதலும் சமூகத்தின் கலாசாரா மாற்றத்தை கொண்டுவரும்போராட்டங்களில் ஈடுபடுதலும் என இருவகை போராட்டங்களை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் .
மாறாக முதலாளித்துவத்தால் புளித்து போல கையாலாகாத இந்த அரசிடம் பாதுகாப்பை கோருவது வேடிக்கை
எந்த பிரச்சனைக்கும் போராட்டம்தான் தீர்வா?
---------------------------------------------
ஆம் எல்லா பிரச்சனைக்கும் போராட்டம்தான் தீர்வு
[ Read More ]
முதலில் கல்வி பணிக்காக தனது இன்னுயிரை தந்த அந்த ஆசிரியைக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது கொலைக்கு வன்மையான கண்டனத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.
கல்வி என்பது உற்பத்திக்காகவே :
கல்வியை பற்றி பேசும்போது என்னதான் மேலோட்டமாக அது உற்பத்திக்கு அல்ல கல்வி என்பது அறிவுக்குன்னு பேசினாலும் இந்த சமூகத்தில் வேலைவாய்ப்புக்குதான் கல்வி பயன்படுகிறது பயன்படும் என்பதை மறுப்பவர்களின் வாதமே கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கானது .(அப்படி கல்வி என்பது அறிவு வளர்ச்சிகானது என்கிற உயர்ந்த மதிப்பீட்டை இந்த சமூகத்தில் அடைய முடியாது)
ஆக கல்வி என்பது உற்பத்திக்கு என்றான பின்பு கல்வியில் போட்டி முந்நிபந்தனை ஆகிறது அந்த போட்டியில் வெல்பவனே வேலை சந்தையில் விலைபோவான் என்பது சந்தை விதிகளின் ஒரு தாரக மந்திரம் .
கல்வி சந்தையில் ஆசிரியர்கள் :
கல்வியை விற்கும் நிறுவனங்கள் பெருகிவிட்டன இவற்றின் வேலை உற்பத்திசந்தைக்கு மாணவர்களை தயாரிப்பது இதில் முதலீடு பணம் -ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி வேலை வாங்கி கல்வியை விற்கிறார்கள் .
கல்வி என்பது கடை சரக்கான பின்பு ஆசிரியரை எந்தளவுக்கு பிழிந்து வேலை வாங்க முடியுமோஅந்தளவுக்கு அந்த மாணவனை உற்பத்தி சந்தைக்கு அனுப்ப இயலும் என்ற நிலையில் கல்வி சந்தையில் அடிமாட்டின் நிலமைக்கு ஆசிரியர்கள் வந்துவிடுகிறார்கள் இது தனியார் பள்ளிகளில்
அரசு மூலதனம் செயல்படும் அரசு பள்ளிகளில் இந்த நிலையோ தலைகீழ் விகிதமாகும் அங்கு ஆசிரியரால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் . தனியார் பள்ளிகளில் மாணவர்களால் ஆசிரியர் கொல்லப்படுகிறார் .
ஆகவே குறைந்த கூலிக்கு நிரம்ப வேலை வாங்கப்படும் ஆசிரியர்கள் மாணவர்களை அதிகமார்க்குகள் (சிறந்த அறிவு அல்ல) எடுக்க வைக்காவிட்டால் வேலையில் இருந்து தூக்கப்படுவார்கள் அதே இடத்தில் சந்தையில்வேலை இன்றி காத்திருக்கும் இன்னொரு ஆசிரியர் அமர்த்தப்படுவார் இப்படி கல்விசேவை வழங்கும் சந்தை போட்டியில் வேகமாக நடக்கிறது .
இப்போது தனது உழைப்பு சக்தியை விற்கும் ஆசிரியர்களுக்கு வேலைபாதுகாப்பும் இல்லை உயிர்பாதுகாப்பும் இல்லை என்கிற நிலைக்குவந்துவிட்டார்கள் .
1.ஒரு நாளைக்கு 8 வகுப்புகள் நின்று கொண்டே பணிபுரியவேண்டும்
2.நோட்ஸ் ஆப் லெசன் வார வாரம் வைக்க வேண்டும்
3.தேர்ச்சி விகிதம் குறைய கூடாது
4.வாரத்தில் இரண்டு எக்சாம் வைக்க வேண்டும்.
என இன்னும் அடுக்கடுக்கான பொறுப்புகளை ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்
எதிர்கொள்கிறார் இத்தனை செய்தால் இவருக்கு கிடைப்பது கூலிமட்டுமே
பம்பரம்போல் சுத்தி சுத்தி வேலை வாங்கப்படும் ஆசிரியர்களால் அந்த பள்ளிக்கு அட்மிசன் கூடினால் பள்ளியில் பெயர்தான் வெளியில் தெரியும் பாவம் அந்த ஆசிரியர்கள் பெயர் அல்ல .
காசு கொடுத்து கல்வி வாங்கும் மாணவனின் மனநிலை:
----------------------------------------------------
எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பணம் கொடுத்து சேர்கிறானோ அந்தளவுக்கு தனக்கு கல்வி வழங்கப்படும் என்பதை உணர்கிற மாணவன் ஆசிரியரை ஒரு கூலி அடிமையாக பார்க்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறான் ஆசிரியர்களுக்கோ மாணவனிடமோ அல்லது நிர்வாகத்திடமோ அல்லது பள்ளி வேலை செய்யும் டிரைவர்களிடமோ கூட மதிப்பற்ற ஒரு பாவப்பட்ட ஜீவனாகிவிடுகிறார்கள் மாணவனுக்கு ஒரு நோட்டு புத்தகத்தை வாங்குவதை போல கல்வி என்பது ஒரு சரக்காகும் போது இங்கே கல்வியின் மேலோ அல்லது ஆசிரியரின் மேலோ எந்த மதிப்பும் ஏற்படுவதில்லை .
பண்டங்களுக்கிடையேயான உறவாக ஆசிரியர் மாணவர் உறவு ஆகிவிடுதல்மிகவும் பரிதாபமான நிலையே .
சமூக மாற்றமின்றி கல்வி மாற்றம் கானல் நீர்:
-------------------------------------------
ஒரே கூக்குரல் கல்விமுறையை மாற்றவேண்டும் என கேட்பதை காணமுடிகிறது ஒரு கட்டுரையில்
//மாணவன் ஆசிரியரைக் கொன்றது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து சமூக சூழல்களையும் இதெற்கெல்லாம் யார் யார் பொறுப்பு என்பதையும் சமூக அக்கறையுடன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான். நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தாக வேண்டும் என்ற அபாயச் சங்குதான் இம்மாதிரி சம்பவங்கள்.யோகா, நடனம், இசை, கராத்தே என்று மாணவர்களுக்கு இளம் வயதில் கட்டாயப்பாடமாக்க வேண்டும். கொலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை மட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது.//
பெரும்பாலும் அனைத்து பள்ளிகளிலும் யோகா கற்றுகொடுக்கத்தான் படுகிறது ஆனால் மனிதனை மனிதன் அடித்து
திண்ணும் இந்த சமூக அமைப்பை அப்படியே வைத்து கொண்டு கல்வி முறையை மாற்றுவதால் மட்டும் எந்த மாற்றமும் வந்துவிடாது .அதற்காக சமூகமாற்றம் வரும்வரை இந்த போக்குகெல்லாம் சமூக உற்பத்தி முறையின் மேல் பலியை போட்டு விட்டு பேசாமல் இருந்துவிடவும் முடியாது.
எந்த பிரச்சனைக்கும் மூலகாரணமாக அதன் பொருளாதார காரணமே இருக்கிறது என்பதும் அகவியல் காரணம்
என்பது அதன் உடன்விளைவானது என்பதும் அறிந்து பொருளாதார காரணங்களை மாற்று போராட்டத்தில் பங்கெடுப்பதுடன் அகவியல் காரணங்களை கலையவும் போராடவேண்டும் .
சினிமா -தொலைகாட்சி கலாசார சீரழிவு:
-----------------------------------
சினிமா தொலைக்காட்சி மற்றும் இவற்றின் வகையில் ஏற்படும் கலாசார சீரழிவுதான் மாணவர்களின் மனநிலை சீரழிவுக்கு காரணம் என்ற வாதத்தை வைக்கிறார்கள் . வன்முறையை தூண்டும் சினிமா ,வசனம் காட்சி பதிவுகள் மாணவர்களின் மனதில் வன்முறை எண்ணத்தை தூண்டு வளர்ப்பதும் கார்டூன் சேனல்கள் வன்முறை விளையாட்டுகள் ஆகியவை உருவாக்கும் வன்முறை எண்ணமே இந்த கொலைகளுக்கு காரணம் இத்தகைய சமூக கலாசாரா சீர்கேட்டுக்கு காரணம் அந்த சமூகத்தின் பொருளுற்பத்தி முறையே.
சினிமாவிலும் , தொலைக்காட்சியிலும் கட்டுபாடற்ற பல காட்சிகள் வைக்கப்படுவதும் சந்தையில் தனது
சம்பாத்தியத்தை பெருக்கிகொள்ளும் முதலாளித்துவ வெறிதான் காரணம்
நடுநிசி நாய்கள் படம் எடுக்கும் ஒரு இயக்குநருக்கு சமூக பொறுப்பை பற்றி போதிக்க இயலுமா?
இப்படி கேவலமான ஒரு படத்தை தனது டீன் ஏஜ் காலத்தில் பார்க்கும் ஒரு மாணவனின் மனநிலை குறித்து
படைப்பாளிகளுக்கு எந்த சமூக அக்கறையும் இல்லை ஏனெனில் சமூகத்துக்கு தனிமனிதனின் மேல்
எந்த அக்கரையும் இல்லை .பத்திரிக்கை தொலைக்காட்சி ,சினிமா ஆகியவற்றில் இந்த தனிநபர்வாதம்
தனிநபர் வன்முறை விசம் போல கலக்கப்படுவதை சமூக அக்கரையோடு பார்க்கும் பெற்றோர்கள் குறைவு
பொழுது போக்குக்காக இங்கு வாழ்க்கை தொலைக்கப்படுகிறது .
கட்டுபாடற்ற காட்சி படிமங்க கட்டுபாடற்ற சிந்தனைகளை சிறுவர்கள் மனதில் விதைக்கிறது தனது சக மாணவியுடன்
செக்ஸ் உறவு வைக்கும் காட்சியை படம்பிடித்து இணையத்தில் ஏற்றினான் இன்னொரு மாணவன் இதெல்லாம்
கலாசார சீரழிவின் உச்சம் .
இருவழிகளில் போராட்டம் :
-----------------------
ஆசிரியர்கள் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் அவர்களின் கைகளிலேயே களி மண்ணை போல மாணவன் தரப்படுகிறான் ( பச்சை களிமண்ணை எப்படியும் மாற்றலாம்) சமூக கல்வியை கொஞ்சம் கொஞ்சமாக புகட்டுவதன் மூலம் சமூகத்தை எப்படி பார்ப்பது என்கிற பார்வையை ஆசிரியர்கள் கொண்டு வருதல் தலையாய கடமை என கருதுகிறேன் அதற்கான முன்நிபந்தனை ஆசிரியர்கள் சங்கமாக சேர்வதும் (தனியார் பள்ளிகளில் ) தங்களது உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபடுதலும் சமூகத்தின் கலாசாரா மாற்றத்தை கொண்டுவரும்போராட்டங்களில் ஈடுபடுதலும் என இருவகை போராட்டங்களை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் .
மாறாக முதலாளித்துவத்தால் புளித்து போல கையாலாகாத இந்த அரசிடம் பாதுகாப்பை கோருவது வேடிக்கை
எந்த பிரச்சனைக்கும் போராட்டம்தான் தீர்வா?
---------------------------------------------
ஆம் எல்லா பிரச்சனைக்கும் போராட்டம்தான் தீர்வு

