தலைப்பின்றி ஒரு கவிதை

எங்கேயோ ஒலிக்கும்
ஒரு பழைய பாடல்
சிறந்ததென நான்
பூண்டுள்ள
ஆடைகளை கலைந்து
உள்நோக்கி பாய்கிறது
நேருக்கு நேராய்
கேள்விகள் கேட்கிறது
உனக்கு நான் தந்த
வாக்குறுதியையும்
எனக்கு தெரியாத
உன் கண்ணீரையும் குறித்து !

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post