அவள் விடைபெறும் போது


நீ போகிறேன் என்றதும்
என்னை கேட்காமல்
மூடிகொண்டது
என் சாரளங்கள்
எப்போது வருவாய் என்ற
ஏக்கத்துடன் நகர்கிறது
என் கடிகாரங்கள்!

மிக சின்ன பகலில்
பேசிய நீ மிக பெரிய
இரவுகளை விட்டு செல்கிறாய்
காலையில் எழுப்பும்
என் வீட்டு கடிகாரம்
தவறாமல் உன் நினைவையும்
எழுப்புது வளர்ந்து கொண்டே போகுது
கைக்கு அடங்காமல்

சில வேளைகளில்
நீ போன பிறகும்
பேசிகொண்டே இருக்கிறேன்
உனக்கு கேட்காவிட்டால் கூட
நான் சொல்ல நிறைய இருக்கிறது!

உன்னை நிறுத்த முடியாமல்
தோற்ற என் கவிதைகள்
அங்கே பார் போக்கு வரத்தை
நிறுத்தி கொண்டுள்ளதை!

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post