பிரபாகரன் இறந்ததை மறைக்கும் துரோகிகள் தமிழின துரோகிகள் தாம்

வேலுபிள்ளை பிரபாகரன் இந்த பெயர் தமிழ் இன சரித்திரத்தில் முக்கியமான பெயர்
எந்த வம்புதும்புக்கும் போகத ஒரு கோழையாக இருந்தாலும் பிரபாகரன் பிறந்த இனத்தில் தான் பிறந்துள்ளோம்
 
என பெருமை படக்கூடிய ஒரு பெயர் பிரபாகரன் இது அவருக்கு அதிகப்படியான புகழ் தரவேண்டும் என சொல்லப்படுவதில்லை
மாறாக அவரது செயல்பாடுகளின் வீரிய த்தன்மையினால் சொல்லப்பட்டது .
சிங்கள அரசை எதிர்த்து அவர் நடத்திய யுத்தம் மிகவும் நியாயமானது யாராக இருந்தாலும் அதைத்தான் செய்து இருப்பார்கள்
 
அவர் மேல் மிக கடுமையான விமர்சனங்கள் என்னிடம் இருக்கின்றன ஆனால் கடைசிவரை போராடிய அவரை
அவர்மேலான விமர்சனங்களை தாண்டி அவரை பாராட்ட சொல்கிறது .
 
நான் என்னதான் வர்க்கம் வர்க்க போராட்டம் என பேசினாலும் இலங்கை தீவில் நடப்பது இனப்போர்
 
தமிழின் முதலாளியா இருந்தாலும் தொழிலாளியா இருந்தாலும் சிங்களன் வெட்டுவான்
அவன் முதலாளியோ தொழிலாளி வேறு எந்த உற்பத்தி நடைமுறையில் இருந்தாலும் சரி
 
இதுதான் யதார்த்தம் . மக்கள் அவருக்கு பின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் திரண்டார்கள் அந்த கட்டம்
 
இனவெறி கட்டம் .
 
இப்போது அவர் இறந்து விட்டார் என்றும் இருக்கிறார் என்றும் இரண்டு கருத்துக்கள்
 
நிலவுகிறது . இருக்கிறார் என்ற கருத்து மெல்ல மெல்ல தேய்ந்து வருகிறது
 
மூன்றாம் தரப்பிடம் சரணடைந்து அவர் வஞ்சகமாக கொல்லப்பட்டு இருந்தால் அதை சொல்வதில் என்ன தயக்கம்
 
என தெரியவில்லை . அல்லது மரண செய்தியை சொன்னால் போராட்டம் பின்னடைந்துவிடும் எனும் நிலையும் இல்லை
திரு .இரயாகரன் அவர்கள் சொல்வது போல அவரை சரணைடைய செய்த துரோகிகள் தாம் அவரை இருக்கிரார் என .
 
சொல்கிறார்களோ என நம்பத்தோன்றுகிறது .
 
கடந்த பல முறைகளை போலல்லாது இந்தமுறை அவரது உடல் காட்டப்பட்டுள்ளது.
 
உண்மையில் அவர் இருந்தால் இன்னேரம் ஒரு கேசட் போட்டு அதை நீரூபித்து இருக்காலம்
 
 
 
 
கேசட் போட்டால் எதிரி கண்டுபிடித்து விடுவான் என்பதெல்லாம் கட்டுகதை அப்ப்டையெனில் எத்தனையோமுறை கேசட் அனுப்பிய
 
பின்லேடனை இன்னேரம் கொன்று இருப்பார்கள் .
 
அவர் இறந்த செய்தியை வெளியிடாமல் இருப்பவர்களின் நோக்கம் நிச்சயமாக சரியானதாக இருக்கமுடியாது .
 
அவர் இருந்தால் அதுவும் வெறும் யூகமாக ரொம்பநாள் நீடிக்க முடியாது .
 
 
 
ஒரு போராட்டம் ஒரு தனிநபரால் நடத்தப்படுவதில்லை எனில் அவர் இறந்த செய்தியை முறையாக அறிவித்து
 
பின் போராட்டத்தை தொடரலாம் . எனக்கு தெரிந்து இதுவே சரியான நடைமுறை ..
 
மூடி மறைப்பதால் கொலை செய்தவர்களை நாம் மூடி மறைக்கிறோ ம்
 
மூடி மறைப்பதால் போராட்டத்தை தேக்கி நிறுத்துகிறோம் என சம்பந்த பட்டவர்கள்
 
நம்பனும் . இல்லையேல் தமிழின துரோகிகளில் அவர்கள் தங்கள் இடத்தில்
 
அமருவார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
-
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post