நமது குழந்தைகள் மீது மருத்துவ சோதனை வரலாம்

உலகமயமாக்கல் என்றால் வேலை கிடைக்கிறது எனவே உலகமயமாக்கலை தடுக்காதீர்கள் என்கிற கோசம் ஒருபக்கம் ஒலிக்க , நாம் உலகமயமாக்கலின் ஒரே ஒரு விளைவை மட்டும் பரிசீலிப்போம்.

மேகி நூடுல்ஸ் காரியம்  அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது  அதை சாப்பிட்டு குழந்தைகளுக்கு என்னவிதமான நோய்கள் வந்தது  என்பதெல்லாம் இன்னும் ஆராயபடவேண்டிய ஆனால் ஆராய முடியாத விசயங்கள் , இந்த முதலாளித்துவ வியாபார நோக்கால் எத்தனையோ குழந்தைகள் இறந்திருக்கலாம் அல்லது நோய்வாய் பட்டிருக்கலாம் என்பது மட்டும் உறுதி.

உலகமயமாக்கல் என்பது படி நான் உமி கொண்டு வருகிறேன் , நீ அரிசி கொண்டு வா ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம் என்கிற கதையேதான்.

ஜப்பானின் கம்யூட்டரை நீங்கள் வாங்கலாம் இந்தியாவின் பனியன் அமெரிக்காவில் விற்கலாம் நல்ல விசயம்தானே என்பதுபோல தெரியும் மேலோட்டமாக பார்த்தால் .

சினிமாவில் கதாநாயகனாக எம் ஜி ஆர் நடித்தால் அவர் நல்லவர்னு நம்பினவர்கள் தானே நாமெல்லாரும் .அவர் சந்திரபாபு சாவுக்கே காரணமானவர் , ஒரு சுயநல புகழ் விரும்பி - அனைத்து மக்கள் போராட்டங்களையும் ஒடுக்கியவர்னு யாருக்கு தெரியும் ?

//குழந்தைகளுக்கான புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட குழந்தைகள் மருத்துவச் சட்டத்தின் கீழ் இந்த அனுமதி அண்மையில் வழங்கப்பட்டது.//





ஏன் அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் இருக்கும் குழந்தைகள் மீது இந்த clinical trail நடத்த வேண்டியதுதானே. அதான் உங்க கிட்ட அரிசி வாங்கிட்டு அவங்க உமி கொண்டு வருகிறார்களே .

ஆகா சோதனை காடாக இந்தியாவை மாற்ற இந்த உலகமயம் உதவி புரிகிறது ஏன் ?

ஏனெனில் இங்கே உள்ள சட்டங்கள் அதில் உள்ள பெரிய ஓட்டை ,(ஜெ வருமானத்துக்கு அதிகமா சொத்தே சேர்க்கலைன்னு விடுவிக்கிற கோர்ட்டுகளை கொண்டுள்ளோம்) காசை வாங்கி கொண்டு கவுந்துடச்சி படுக்கும் அதிகாரிகள், காசு வாங்கி கொண்டு எழுதும் ஊடகங்கள் இப்படி பல சவுகரியம் இருக்கு.
---------------------------------------------------------------------------------------------



ஒரு சில பணக்காரர்களை ஒரு தட்டிலும் நிறைய ஏழைகளை அதாவது ஏழை நாடுகளை மறுதட்டிலும் வைத்து பார்த்து இரண்டையும் சமமாக மோத சொல்வதுதான் உலகமயம்

விக்கி பீடியாவில் கீழ்கண்டவாறு சொல்லப்படுகிறது :
------------------------------------------------------------------------------------

//தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும் உலகமயமாதல் எனலாம். உலகமய சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான், ஆனால் இன்றைய சூழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது.//



The "three worlds" of the Cold War era, as of the period between April 1975 (the fall of Saigon) and August 1975 (the communist takeover in Laos).[citation needed]
  First World: United States, United Kingdom and their allies.
  Second World: Soviet Union, China, and their allies.
  Third World: neutral and non-aligned countries.  நன்றி விக்கி பீடியா 

பச்சை மையில் இருப்பதெல்லாம் மூன்றாம் உலக நாடுகள் ஆகும்

------------------------------------------------------------------------------------------------------------------
என விக்கியில் எழுத படுகிறது நல்லாத்தானே இருக்கு தொலை தொடர்பில் நமக்கு செல்போன் கொடுத்திருக்காக, லேப்டாப் வந்திருக்கு இதெல்லாம்
உலகமயம் இல்லாமல் நடக்குமா ?

 இந்தியாவில் இந்த சோதனைகள் மேற்கொள்வதில் அவர்களுக்கு பெருத்த பண லாபம் இருக்கிறது .

ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்கள் clinical trial க்கு செலவு செய்கிறார்களாம் அதில் முக்கிய கட்டம் கண்டு பிடித்த மருந்தை மனிதர்கள் மேல் பிரயோகித்து பார்க்க ஆகும் செலவு

இதில் என்ன கொடுமை என்றால்.

இந்தியாவில் இதுவரை 2644 பேர் இந்த சோதனையினால் இறந்துள்ளார்கள்

NEW DELHI: As many as 2,644 people, called subjects, died during the clinical trials of 475 new drugs on human beings in last seven years and only 17 of the medicines were approved for marketing in India, the Centre has informed the Supreme Court. Responding to allegations by NGO, Swasthya Adhikar Manch, in its PIL that Indians were used as guinea pigs by foreign pharmaceutical majors for human trial of their new drugs, the Union health and family welfare ministry said of the 57,303 enrolled subjects, 39,022 completed the clinical trials. "Serious adverse events of deaths during the clinical trials during the said period were 2,644, out of which 80 deaths were found to be attributable to the clinical trials," health secretary Keshav Desiraju said in an affidavit on behalf of the ministry of health and family welfare.

அதாவது அதெல்லாம் சப்ஜெட்டுன்னு பேர் வைச்சிருக்கானுக , சரி ஒரு மருந்தை இந்தியாவில் சோதனைக்காக கொடுக்கிறாங்கள்னு வச்சிக்குவோம்
அதற்கென்று விதிமுறை ஏதும் இல்லையா?

1.Bayer’s Rivaroxaban and
2.Novartis’s Aliskiren vs. Enalapril are the two drugs responsible for maximum deaths in clinical trial.

 என்கிற இரண்டு மருந்துகளை கொடுத்து நெம்ப பேரு செத்து போயிருக்காங்க ஆனால் மறுபடியும் இதை கொடுத்திருக்காங்க .

இந்தியாவின் சட்டம் என்ன சொல்லுது அவ்வாறு இறந்தவர்களுக்கு காம்பன்சேசன் கொடுக்கனும்னு ஆனால் ஒரு சிலர் தவிர யாருக்கும் கொடுக்கப்படவில்லை

/Recent amendment to Schedule Y of Drugs and CosmeticsRules, 1945: Recently on 30th January20134, Government of India came out with certainamendments to Schedule Y of the Rules with a view to tighten thenorms relating to the conduct of clinical trials especially interms of taking informed consents from the trial subjects andproviding them or their legal representatives (as the case may be)compensation in case of any trial related injury or death. Theamendment has imposed complete and ultimate liability on thesponsor of the clinical trial to reimburse any cost incurred by thetrial subjects for the medical treatment of "anyinjury" suffered by the trial subjects as well asfinancial compensation for such injury or death. Further in casethe sponsor fails to provide the proper medical treatment and/ orthe financial compensation as per the orders of the licensingauthority to the trial subjects (or their representatives as thecase may be), then the authority may cancel or suspend the licenseof the sponsor to carry out the clinical trials and may even debarit from carrying any clinical trial in future in India. Theamendment also mandates GCP compliance and adverse event reporting.The amendment has certainly acted as a deterrent on themulti-national corporations and is a negative catalytic agent tothe prospects of clinical trials in India.//

நமது கேள்விகள் இதான்

ஏன் மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் இந்த சோதனை
அடுத்து சட்டத்தில் மட்டுமே இருக்கும் இந்த பாதுகாப்பு மற்றும் இழப்பீடுகள் உண்மையில் கிடைப்பதில்லை

Bayer's Rivaroxaban was first used for human trials in 2008 resulting in death of 21 of which it claimed that only five were related to clinical trial but it has till date paid compensation to kin of only two. Two years later, the same drug was again put on human trial and this time 125 deaths were reported, of which it was stated that five were related to clinical trial

2008 பரிசோதனைக்காக கொடுத்த மருந்தின் விளைவாய் 21 பேர் இறந்திருக்கிறார்கள் ஆனால் மறுபடியும் இந்த மருந்து சோதனைக்காக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

// பொருளியல், சமூக மற்றும் சூழலியல் அடிப்படையில் உலகமயமாதலை எதிர்மறையான, விரும்பத்தகாத ஒரு விடயமாகக் கருதுகின்றது. இதன்படி, உலகமயமாதல், வளர்ந்து வருகின்ற சமுதாயங்களின் மனித உரிமைகளை நசுக்குகிறது என்றும், வளத்தைக் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு கொள்ளை இலாபமீட்டுவதை அனுமதிக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இவை தவிரப் பண்பாட்டுப் பேரரசுவாத (cultural imperialism) நடவடிக்கைகளினூடாகப் பண்பாட்டுக் கலப்புக்கு வழி வகுப்பதும், செயற்கைத் தேவைகளை ஏற்றுமது செய்வதும், பல சிறிய சமுதாயங்கள், சூழல்கள் மற்றும் பண்பாடுகளைச் சிதைத்து விடுவதும் இதன் எதிர்மறை விளைவுகளாக எடுத்துக் காட்டப்படுகின்றன. //

நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் உலகமயமாக்கலை நாம் தடுக்க முடியாது ஆனால் நமது விழிப்புணர்வின் மூலம் நம்மை சுரண்டுவதை தடுக்கலாம் போராடலாம்.

யாருக்கு தெரியும் உங்கள் மருத்துவர் அல்லது மருத்துவமனை கூட மிக பெரிய அளவு பணத்தை உங்களிடம் கறந்து கொண்டே உங்கள் மீது சோதனை மருந்துகளை கொடுக்கலாம் நீங்கள் ஒரு சப்ஜெட் ஆக இருக்கும்  நிலையில் இருக்கலாம் ஆனால் இது உங்களுக்கு  தெரியாது.

எனவே அரசியல்  வேண்டாம் என்றும் சமூகம் எக்கேடு கெட்டு போனால் என்னவென்றும் சொல்லி ஒரு ஓரமாக உக்கார முடியாது மை லார்ட்

//இந்தப் பரிசோதனைகள் நம் நாட்டில் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் குறைந்தபட்சம் 49 குழந்தைகள் உயிரிழந்தது 2008}ம் ஆண்டு தெரியவந்தது. எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும் ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை.//

என்ன கொடுமை என்றால் இந்த மருந்து உங்கள் குழந்தைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது ஆனால் யாரும் அதை செய்வதில்லை

வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்தை நோக்குங்கள் .

பாரடா உனது மானிட பரப்பை , பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம் என்கிற பாரதி தாசன் கவிதை பொருத்தமானது

உலக மயம் நன்மையை செய்யாது ஆனால் அது தீமை செய்யவிடாமல் எப்படி தடுக்க போகிறோம்.

உலகமயமாக்கல் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்?

அதாவது மூலதனம் இடைவிடாமல் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் இயல்பு கொண்டது அந்த பூதம் அதன் வளர்ச்சியை மேலை நாடுகளிம் முடித்தபின்
வளரும் நாடுகள் மீது கால் பதிக்க முயன்றது.

அப்போது அதற்கான தடையாக நாடுகளின் அரசுகள் இருந்தன

அவற்றுடன் ஒரு நியாயமான முறையில் ஒப்பந்தம் போட்டால்தான் தனது மூலதனத்தை மற்ற நாடுகளில் கொண்டு செல்ல முடியும் என்பதால்

ஒரு ஒப்பந்தம் போட்டது அந்த ஒப்பந்தத்தின் பெயர்தான் டங்கல் ஒப்பந்தம் -காட் ஒப்பந்தம் இதன் மூலம் வேறு ஒரு நாட்டில் தொழில் தொடங்க ஒரு நாட்டின் முதலாளிகளுக்கு அனுமதி கிடைக்கிறது.

இதில் பிரச்சனை என்னவென்றால்.

ஒரு பக்கம் வளர்ச்சி அடைந்த நாடுகள் மறுபக்கம் வளர்ந்து வரும் நாடுகள் இன்னொரு பக்கம் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்ட நாடுகள்

எல்லாரும் சமமா இருக்க முடியுமா ஆனால் சமம் என்று ஆக்கினார்கள் .

அதாவது 80 கிலோ எடை பிரிவு குத்து சண்டை காரனும் ,45 கிலோ பிரிவு காரனும் மோதும் போட்டி

இந்த போட்டியில் எப்படி 80 கிலோ காரன் வின் பண்ணுவது நிச்சயம் என தெரியும்

ஏனோ காங்கிரஸ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால் கையெழுத்து போடாவிட்டாலும் எப்படியும் கையெழுத்தை வாங்கி இருப்பார்கள் என்பதுதான் நிசம் .

இதன் பகுதிகள் தாம்  அண்ணாச்சி கடைக்கு மாற்றாக அந்நிய முதலீட்டு கடைகள் வருகிற நிலமை எல்லாம் உருவாகிறது.

இதன் விளைவுகள் இப்போது முழுமையாக தெரியாது போகப்போக நல்லா தெரியும் தற்போது அரசு கொண்டு வரும் நில கையகப்படுத்தும் மசோதா போன்றவை பெரிய நிறுவனங்களுக்கு பயன்படும் அதாவது அரசாங்கத்தோடு ஒப்புக்கு ஒரு ஒப்பந்தம் போட்டு விட்டு நிலத்தை பெரிய கம்பெனிகள் ஆரம்பிக்க வைத்து கொள்ளலாம் என்பதே அது.

உலகமயமாக்கல் என்பது முதலாளித்துவத்தின் வளர்ச்சி அடைந்த கட்டம் என்பது ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள் ஆகவே இதை தவிர்க்க இயலாது ஆனால் இந்தியாவின் அறியாமை மற்றும் இங்குள்ள அரசியலின் ஊழல்
ஆகியவை நமது பாதகமான அம்சங்களை பற்றி பேச விவாதிக்க போராட விடுவதில்லை .

இங்கு குறிப்பிட வேண்டியது உலகமயமாக்கலை எதிர்க்கிறோம் , தனியார் மயத்தை எதிர்க்கிறோம் என்பதல்ல மாறாக முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம் என்று எந்த இடதுசாரியும் வரக்காணோம்

பெரியாரை , அம்பேத்காரை தூக்கி பிடிச்சிட்டு பார்பனரை திட்டினால் நான் ஒரு முற்போக்குவாதின்னு காட்டிகலாம்னு பேசிட்டு இருக்காங்க

மறுதலையாக லைசன்ஸ் ராஜ் கால கட்டம் எனப்படும் 90 முந்தைய நிலமைக்கு போகனும் என்றும் சொல்கிறார்கள்

கல்வியில் தனியாரை ஒழிப்பது என்பது இதை போல கருத்துதான்.

மூலதனம் எங்கெல்லாம் போகுதோ அங்கெல்லாம் ஓடி ஓடி ஒழிக்க வேண்டாம் மொத்தமா முதலாளித்துவ ஒழிப்பு இதான் சரியாக வரும் .

எதிரி மிக தெளிவாக இருக்கிறான் நாம் தான் குட்டையை குழப்புகிறோம்.


ஒரு மல்டி நேசனல் கம்பெனி இந்தியாவின் லேபரை உபயோகித்து பொருளை உற்பத்தி செய்து வெளி நாட்டில் விற்று லாபம் பார்க்கலாம் அம்மாதிரியே இந்திய கம்பெனிகளும் செய்யலாம் .

ஆனால் சந்தையில் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும்

இந்த நெஸ்லே மாதிரி கம்பெனிகள் மேகியை இந்தியாவில் சந்தையை பிடிக்க விளம்பரங்களை பயன்படுத்தியதும் இப்படித்தான்

நமதுநடிகர்கள் இதில் நடித்து கொடுத்து காசு பார்த்து கொண்டு எனகென்ன வந்தது அப்படின்னு உக்கார்ந்து கொள்கிறார்கள்

இதோ மல்டி நேசனல் கம்பெனிகளின் வளர்ச்சி கிராப்


பெண்கள் அதிகமாக சுரண்ட படுதல் ஊக்குவிக்கப்படுகிறது உலகமயமாக்கலில்
“Women work two-thirds of the world’s working hours, produce half of the world’s food, but earn only ten percent of the world’s income, and own less than one percent of the world’s property (Tomlinson)”.




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post