அரசாங்க அலுவலகம்

நீண்ட வராந்தாக்கள்
தூசி படிந்த
ஜன்னல்கள்

பத்தரை மணிக்குமேல
பதவிசாக வரும்
அலுவலர்

வேலைக்கு
கிளம்பும் போதே
அன்றைக்கு வருமானம்
தெரியுமோ
பட்டையான விபூதியுடன்
கையூட்டு வாங்க
கடவுளே சொன்ன
மாதிரி!

என்னவேணும்
இப்போ முடியாது
அவரு விடுப்புல
போய்ட்டாரு
எப்ப வருவாறு
வந்தா பாத்துக்க
கொஞ்சம்
செலவாகும்

வாங்கின சம்பளத்தை
வைப்பாடிக்கே
கொடுப்பாரோ
லஞ்சத்த வைத்துதான்
வீட்டுல சோறோ

பிறப்பிலிருந்து
இறப்பு வரை
எல்லாமே
பதிவுதான்
எதுக்குன்னு
இப்பதான்
புரியுது

வெளியே வந்துதான்
மூச்சே உட்டேன்
பின்ன அதுக்கு யாரு
காசு கொடுப்பாங்க!

அன்புடன்
தியாகு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post