மோடியின் யோகாவும் கருத்தியல் போரும்


இளைய தலைமுறையிடையே நமது மதம் மற்றும் கலாசார மரபுகளை பதித்து விட்டால் பிறகு மீளவே முடியாத அளவு அவர்கள் ”இந்துத்வா”கிவிடுவார்கள் .

1.சமஸ்கிருத வாரம் அக்டோபர் 7-13
2.யோகா தினம் -ஜீன் 21

என அடுத்தடுத்து தனது கருத்தியல் போரை தொடர்கிறது பிஜேபி

”இந்து என்ற சொல்லை கேட்டவுடன் உனது நாடி நரம்புகளில் புது ரத்தம் பாயவேண்டும் ”என சொன்ன விவேகாநந்தரின் பாதையில் 
(விவேகானந்தர் அப்படி சொன்னது சுதந்திர போராட்டத்திக்கு ஆட்களை திரட்ட ஏதுவாக இருந்தது ஆனால் அவரின் பேச்சில் அரசியல் எல்லாம் இல்லை. இந்துதுவா வாதிகளுக்கு விவேகானந்தருக்கும் சுத்தமா எந்த சம்பந்தமும் இல்லை)செல்வார்கள் என மோடி நினைத்திருக்க கூடும் என்ன கூடும் அவரின் திட்டமும் அதுதான்.

இந்துக்களை திரட்டுவதும் அரசியல் ரீதியாக மாற்றுவதும் வெறும் ஓட்டு அரசியலுக்கும் பதவிக்கும் பயன்படுத்த படுகிறது.

சிங்கள பேரின வாதம் போலவே இது இந்து பேரினவாதமாகும்.





ஆனால் யோகாவை நாங்கள் எப்படி ஏற்று கொள்வது என இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் கேட்கிறார்கள்.

அட அப்பாவிகளே நாடே இந்து நாடு என லட்சிய வேட்கையில் செலுத்தப்படுகிறது நாடு நீங்கள் தொழ முடியாது யோகாதான் என சொல்லாமல் சொல்கிறார் மோடி .

யோக உடலுக்கு நல்லது உண்மையா இல்லையா என்ற கேள்வி அப்பாவிகள் மற்றும் அறிவுஜீவிகள் இருவராலும் வைக்கப்படுகிறது

1.யோகாவின் தூய்மை ஆரோக்கியம்
2.யோகா நல்லதா இல்லையா என்பதற்கு அப்பால் அது இந்து மதத்தின்
ரிசிகளால் கண்டு பிடிக்கப்பட்டது என்பது உண்மை .

அதனால் அதை கட்டாயமாக ஆக்க முடியாது ஏனெனில் ஒரு இஸ்லாமிய மாணவன் எப்படி அதை கற்றுகொள்ள இசைவார்.
 
யோகாவை அரசியலாக்காதீர்கள் என்கிறார் ஒரு அமைச்சர் அவர் பெயர் என்னவோ .

ஆனால் மோடி இந்துத்துவாவே மதமல்ல என்கிறார்னா பார்த்துக்கோங்க,
இந்து மதத்தை அரசியலாக்கி ஆதாயம் பார்ப்பது ஏன் என்பது அடுத்த சப்ஜெக்ட் 

http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/hinduism-not-a-religion-but-a-way-of-life-says-modi-115041700034_1.html

அட பாவிகளே – மதத்தை அரசியலில் கலந்த பாவம்தானே யோகாவை
அனைவரையும் செய்ய சொல்கிறது.

இந்து மதம் இந்து நம்பிக்கை எப்போதுமே மிகுந்த சுதந்திரமும் அதே நேரத்தில் சாதிய கட்டுமானத்தில் மிகுந்த கொடுமையும் நிறைந்தது.
ஒருத்தன் கோவிலுக்கு போகாமல் இருக்கலாம் ஆனால் சாதி விட்டு சாதி திருமணம் செய்ய கூடாது .

என்கிற அளவு மிகுந்த கொடூரமும் மேலே ரோசா பூக்களை போட்டு வைத்திருப்பதும் இந்து மதம்தான்.

அப்போ இஸ்லாமிய கிருத்துவ மதங்கள் என்ன சொல்கின்றன இகத்தை விட்டு பரத்தை தேட சொல்லவில்லையா ?
என்று கேட்கலாம் கொஞ்சம் கூடவோ குறையவோ ஏறத்தாழ எல்லா மதங்களும் அபினிதான்.

சரி விசயத்துக்கு வருவோம் , தூய்மை இந்தியா, சமஸ்கிருத வாரம் அடுத்து யோகா கிளாஸ்
 
/வருகிற 21ம் தேதிசர்வதேச யோகா தின'த்தில் கலந்துகொள்ள சீனர்களுக்கு அழைப்பு விடுத் துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அத்தோடு நின்று விடாமல் ஒரு படி மேலே சென்று, வெய்போ மூலம் யோகாவை சீனாவில் அறிமுகப்படுத்தி வருகிறார்.
ட்விட்டரைப் போலவே, சீனாவில் வெய்போ எனும் சமூக வலைதளம் ஒன்று செயல்படுகிறது. இதில் கணக்கு வைத்திருக்கும் மோடி, தினமும் அதன் வழியே ஒவ்வொரு ஆசனங்கள் பற்றியும் புகைப் படங்களைப் பதிவேற்றி அவற்றைச் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பகிர்ந்து வருகிறார்.
தடாசனம், விருட்சிக ஆசனம், பாத ஹஸ்டாசனம் உள்ளிட்ட ஆசனங்களை அவரே செய்து காட்டி, அந்தப் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகிறார் என்பதுதான் இதில் சிறப்பம்சம்.
சீனாவில் சர்வதேச யோகா தினத்தை பெரிய அளவில் கடைப் பிடிக்கச் செய்ய ஷாங்காய், ஹாங்காங் மற்றும் குவாங்சோ ஆகிய இடங்களில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங்கள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இதுதவிர, வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை செங்குடுவில் ஐந்து நாள் சர்வதேச யோகா மாநாட்டை நடத்தவும் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. //
மாவோவின் பாட்டாளி வர்க்க பேச்சை கேட்டவர்களுக்கு ஏழாம அறிவு படம் பார்த்து சீனர்களை விரோதித்தவர்களே இப்போ தெரிந்து கொள்ளுங்கள் சீனர்கள் மத்தியில் இந்துத்துவத்தை எப்படி கொண்டு செல்கிறார் மோடி என்று ஒரு வேளை ஏழாம் அறிவு படம் பார்த்திருப்பாரோ.
நிறைய பேருக்கு குழம்பம் நிலவியது ஏன் மோடி ஊர் ஊரா நாடு நாடா சுத்துகிறார் என்று . இப்போது புரிந்ததா அகண்ட பாரதம் அல்ல அகண்ட அண்டா பாரதம் அதாவது மொத்த பூமியும் இந்துத்துவம் பரப்பிட்டுதான் வருவார்.
நீங்கள் மீண்டும் குஜராத் கலவரம் – பாபர் மசூதின்னு பழச பேசினீங்கன்னா அப்டேட் ஆக முடியாது.
யோகா ஏற்கனவே உலகளவில் பிரபலம் மோடி அதை promote செய்வதால் உலகின் அனைத்து தலைவர்களும் அதை கடைபிடிக்க வாய்ப்பு
//

இது ஒருத்தரோட கமெண்ட் ஒபாமா யோகா செய்தால் அடுத்த நாடுகளை சுரண்டாமல் போகலாம் .
ஈராக்கில் இருந்து வாபஸ் வாங்கலாம் அதில் இந்தியாவின் பங்கு யோகா
ஒரு முறை விவேகானந்தர் சொன்னார் எங்களுக்கு மதம் வேண்டாம் அது நிறைய இருக்கிறது டெக்னாலஜியை கொடுங்கள் நாங்கள் உங்களுக்கு தியானம் செய்ய சொல்லி தருகிறோம்னு
அப்பாட 100 வருடம் கழித்து அவருடைய சீடர் வந்துவிட்டார்?
யோகாவை ஏற்றுமதி செய்து நாம் பெட்ரோல் இறக்குமதி செய்ய போகிறோம்.
//யோகா நிகழ்ச்சி: நரேந்திர மோடி ஆலோசனை

சர்வதேச யோகா தின முன்னேற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் முக்கிய விவாதங்கள் நடத்தபட்டது

சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி, வருகிற ஜூன் 21–ந் தேதி டெல்லி ராஜபாதையில், குழந்தைகளுடன் பிரதமர் மோடி யோகாசனம் செய்கிறார். காலை 7 மணி முதல் 7.30 மணி வரை பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

இதில் பள்ளிக்கூட குழந்தைகள் உள்பட 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் கலந்து கொண்டு யோகாசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்ய இருக்கிறார். அந்த சமயத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் யோகாசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
//
சர்வ தேச அளவில் யோகா புரமோட் ஆவதன் மூலம் இந்துத்துவா புரமோட் ஆகும்
பிறகு என்ன சாதி படிநிலை அமைப்பு புரமோட் ஆகலாம் .
இதுவரை எந்த இந்து தலைவரும் செய்யாத முயற்சி இது என வருங்காலம் வாழ்ந்த்தும் .
//யோகா இந்தியாவின் மென்மையான சக்தி: சுஷ்மா

யோகா இந்தியாவின் மென்மையான சக்தி என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்இன்று உலகம் வன்முறையால் சூழப்பட்டுள்ளது. அதிலிருந்து அமைதியை நோக்கிச் செல்ல யோகா உதவும். யோகா இந்தியாவின் மென்மையான சக்தியாகும். இந்த மென் சக்தி மூலம் உலகில் வன்முறையைக் குறைத்து அமைதியை நிலை நாட்ட முடியும். ஜூன் 21-ம் தேதி அன்று டெல்லியில் உள்ள ராஜபாதையில் சுமார் 35,000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோக செய்கின்றனர். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.//

குஜராத்தில் வன்முறைக்கு பதில் யோகா செய்து இருக்கலாமே மேடம் என்று ஏன் இந்த பத்திரிக்கையாளர்கள் கேட்பதில்லை.

அடுத்து நமது குசும்புதனமான சிந்தனை எங்கு செல்கிறது என்றால்.
சாமியார்களும் யோகாச்சாரியார்களும் சமீபகாலமாக
மார்கெட் இழந்து தவிக்கிறார்கள்.


நித்தியானந்தாவின் படுக்கையறை காட்சிகள் வெளிவந்தவுடனும் அவரது ஒப்பந்த செக்ஸ் யோகா வெளிவந்தவுடன் மத்தியதரவர்க்கம் கொதித்து எழுந்தது. 


கார்பரேட்  ஆகிபோன மடாலங்களை குறித்து கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கிறது.

சாமியார்களை மிக மிக உயரத்தில் வைத்து விட்டால் மூச்சே காட்ட முடியாது.

மக்கள் அனைவருக்கும் அபினி கொடுத்துவிட்டால் மீதம் இருக்கும் அம்பேத்கார் பெரியார் கம்யூனிஸ்டுகள் எல்லாம் ஒரு பொருட்டல்ல

இப்போதைக்கு மோடி தெளிவாக செல்கிறார்.

மார்க்சிஸ்டுகள் கரடியா கத்துறாங்க ஆனா என்ன எழவுன்னா ஓட்டு கட்சியாகி எதையும் கத்ததான் முடியும் அவங்களால்

http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/hindutva-groups-staging-cultural-terrorism-in-the-country-says-cpi-general-secretary-sudhakar-reddy-115032500031_1.html 

//சிறுபான்மையினருக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் கர்வாப்ஸி என்ற பெயரில் பயங்கரவாத பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. 
 

நாட்டை மத ரீதியாகத் துண்டாடுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பதற்றத்தையும், அச்சம் ஏற்படுத்தக்கூடிய மனநிலையையும் உருவாக்கி, நாட்டின் முக்கியமான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகிறது.

 

சர்ச்கள் தாக்கப்படுகின்றன. சங்பரிவாரின் வழிகாட்டுதல்களின் படி கலாச்சார பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அறிவியல் ரீதியான மனநிலைகளுக்கு பங்கம் ஏற்படுத்தப்படுகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருகிறது.

 

மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவித்து அந்த இடத்தில் கோட்சே வழிபாடு முன் வைக்கப்படுகிறது.//

இந்தியாவின் மேல் கட்டுமானத்தை தன் வசப்படுத்த என்ன செய்யனுமோ அதை செய்கிறார்

கருத்தை மக்கள் ஏற்று கொண்டால் அது பலம் பொருந்திய சக்தியாகிடும் என மார்க்சின் கருத்தை அவருகிட்ட யாரோ சொல்லிட்டானுக போல

கருத்தியல் போரை பிஜேபி துவங்கி உள்ளது.

இனிமேல் விவாதம் அல்ல யோகா பிறகு மயக்கம் பிறகு ஆழ்நிலை தியானம் பிறகு கதிமோட்சம்

வேலை இல்லை , வறுமை, பாலியல் வன்முறை
மூச் விடப்படாது.


இந்த உலகம் அழிய போகிறது மேல் உலகத்திற்கு துண்டு போடுங்கள்

யோகா யோகா யோகா 





3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post