நம்ம ஆளுகன்னா யாருன்னு காட்டுவோம்

"நம்ம ஆளுகன்னா அவ்ளோ கேவலமா போச்சா" ஆரம்பமே அமர்களமாக காதை கொடுத்தோம் "அவனவன் ஜாதி சங்கம் வச்சி கொழுக்கிறான் இன்னும் நாமெல்லாம் கோவில்ல மணியாட்டிண்டு இருக்கோம் கேட்டா பெரிய ஜாதின்னு பீத்தல் வேற "

இவர் கிருஸ்ணமாச்சாரி வேதத்தை கரைத்து குடித்தவர் வேதகால மனுசனா இருப்பதில் மாறுபட்ட கருத்து உடையவர் .

காசுதான் கடவுள் என்பதை மனமாற நம்புபவர் ,இன்னும் நம்ம ஜனங்களுக்கு புத்தி வரலைன்னு நினைப்பவர் .

கிருஸ்ணமாச்சாரியை கண்டிப்பதுபோல பேசினார் நாராயணன்

"யோவ் கிருஸ்ணா இவ்ளோ வேதம் படிச்சு நீ என்ன தெரிஞ்சுண்ட "

நமக்கு பகவான் அளந்ததுதான் கிடைக்கும் இட ஒதுக்கீடு அது இதுன்னு நமக்கு ஒன்னும் கிடைக்கலைன்னாலும் நமக்கு பகவான் படி அளக்காமலா போய்டுவார்

"இத ஒன்ன சொல்லிடுவீர் "அய்யா நம்மகிட்ட இருந்த தில்லை கோவிலை புடிங்கின்னுடானுக ,நம்ம மரியாதையை கொறைச்சுபுட்டானுக,
ரோட்டில நாம போன கையெடுத்து கும்பிட்ட பயலுக நம்ம கேலி செய்றானுக
இதெல்லாம் இந்த பெரியார்ங்கிற பயனால வந்தது.

நீங்கள் சொல்ற கடவுள் ,வேதம் ,புராணம் எல்லாத்தை பொய்யின்னு சொல்லி பரப்பிபுட்டான் அந்தாளு , நாம சும்மா உக்கார்ந்து வேடிக்கை பார்த்தோம் இப்ப பார் நாம விட்ட இடத்தை நித்தியானந்தா பிரேமானந்தான்னு சாமியார்கள் வந்து பிடிச்சுட்டுட்டான் .

நம்ம சாதியிலேயே ஒருத்தன் வீரமா இருந்தான் அவர்தான் ஜெயேந்திரன்
அவரையும் இந்தம்மா புடுச்சு போட்டுடுச்சு உள்ள (கொஞ்சமாவது ஜாதி விஸ்வாசம் வேண்டாம் )

இந்து மதத்துக்கே காஞ்சிதான் தலைமையா இருந்தது இப்போ எவனும் காஞ்சியை மதிக்கிறதில்லை .

எதாவது செய்தாகனும் ஓய்

முன்னால வெங்கட்ராமன் இருந்தார் நம்மாலுகளுக்கு ஒரு சப்போர்ட்டா
இப்ப அப்படி சென்ரல்லையும் ஆளு இல்லை ஸ்டேட்டுல கருணாநிதி நம்மலவிட வேகமா குடும்பத்துக்கு சொத்து சேர்கிறார் அந்த மாமி நம்மல அண்டவிடாம சசின்னு நம்மலவிட கீழ்சாதி பொம்மணாட்டியோடு
சவகாசம் வச்சு சுத்திட்டு இருந்தா ?எப்படி ஓய் வேதகாலத்துக்கு போறது

நாம சொன்னா எத்தனை பேர கழுவில ஏத்துடான்னாலும் ஏத்துவான் பாண்டிய மன்னன் இப்போ அழகிரி செய்வானா செய்யமாட்டானே ?,ஏன்னா மக்கள் முழிச்சுன்னுட்டான் ?

இனிமே என்ன செய்யறதுன்னு ஓசிக்கிறத விட்டு புட்டு வேதகால மனுசன்னுட்டு பீத்திட்டு இருந்தா ஆச்சா?

"விடும் ஓய் எல்லாரும் படிச்சுட்டா " அதான் தப்பு நாம எவனும் படிக்க பிடாதுன்னு சொல்லிட்டு இருந்தோம் இந்த வெள்ள காரபயல்கள் வந்து
பள்ளி கூடம் நடத்திட்டான் .

அப்புறம் ஈரோட்டு கிழவன் வந்து பகுத்தறிவு சொல்லி குடுத்துபுட்டான்.


"என்னங்காணும் நீர் என்ன செய்றதுன்னு மூலைலை உக்கார சொல்றீரா"
நாம அமைதியா இருக்க இருக்கத்தான் எல்லாம் போகுது ஓய் !
"எங்கய்யா அமைதியா இருக்கோம் நாமளும் தினமலர், ஆனந்தவிகடன்னு
நம்ம கைலதான் இன்னும் பத்திரிக்கை இருக்கு , நாம கொஞ்சம் கொஞ்சமா இந்த பெரியார கருணாநிதிய , அண்ணாவ பத்தி ஏத்தி விட்டு மாத்தி புடலாம்
பத்திரிக்கையை விடவா பெரிசா விசயத்தை கொண்டு போகும்கிற"

"நீர் என்ன சொன்னாலும் நான் ஒத்துகிட மாட்டேன் . இராமதாசு கேட்ட மாதிரி
தனி தமிழ்நாடு கேட்கனும் ஓய்"

இல்லைன்னா தமிழ் நாட்டில இருக்கிற கோவிலெல்லாம் நமக்குன்னு கேட்டு
போராடுவோங்கிறேன்."

விசயம் பயங்கரமாக போகவும் நான் சைக்கிளை எடுத்துட்டு ஓட்டம் விட்டேன்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post