கசடுகள்

நேரத்தை திண்கிறது பிழைப்பு
உழைப்பென சொல்லி நக்கி
செல்கிறது வாழ்வை !

தமிழனை கொன்றவர்கள் கூடி
மாநாடு நடத்த நாய் காலை
நக்குகிறது நீ தமிழனா ?

கொடூர கொலைகாரனுக்கு
மாலையும் துண்டுமாய்
கூடி நிற்கிறது கூட்டம்
நக்கி பிழைக்கலாம் !

கோட்டு போட்ட கணவான்
சொல்கிறார்பள்ளிகூடம்
என் சொத்து தரமுடியாது
அப்படிதான் கேட்பேன்
அதிக கட்டணம்!

தூ இதெல்லாம் ஒரு பிழைப்பா
போடா போய் லாட்டரி வித்து பிழை!

ஒருத்தனை கொன்றால்
பதனாலு வருடம்
போபாலில் ஆயிரக்கணக்கில்
கொன்றால் ஈராண்டு
தண்டனை உன் தீர்ப்பில்
நாய் மோழுமா?

சமச்சீர் கல்வியாம்
அதுவும் காசுகுறைந்தால்
குறையுமாம்
சே இவனுகளை எதால்
அடிக்கலாம் !

காசிருந்தால் ஓட்டு
காசிருந்தால் சீட்டு
காசிருந்தால்தான்
ஏழுமலையானின்
பாட்டு
என்னடா இது
காசை கொண்டு போய்
கக்கூசில் போடு !

புதிய சாலைகள்
புதிய கோவில்கள்
பள்ளி கூடங்கள்
சாமி கள் எனும்
கனவு வந்து போகிறது
பழைய வீட்டின்
தூசிவாடையில் !















--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post