வினவு - பெண்ணுரிமை

நன்றி தோழர் வினவு,

உங்கள் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்தேன்
நீங்கள் மையமாக எடுத்துகொண்ட பிரச்சனை சாதிய திமிரில் எழுதி இருக்கிறான் நரசிம் என்பதும் அது வன்மையாக கண்டிக்கப்படவேண்டும் என்பதும் கைதட்டி வரவேற்கப்படவேண்டியது.

நரசிம்மை தமிழ்மணத்தை விட்டு தூக்கனும் என நானும் சொல்லிவிட்டேன்

சரி அடுத்த விசயத்துக்கு வருவோம்

1.இப்போ பெண்ணுரிமை பேசும் வினவு ஏன் லீனா விசயத்தில் அந்தளவு கேவலமாக இறங்கியது ஏன் (கருத்துரிமை பெண்ணுரிமை என்பதெல்லாம் சாதிய அடிப்படையில்தான் பேசுவீர்களா, அதென்னய்யா சாதி அடிப்படையிலான பெண்ணுரிமை)

2.லீனாவிடம் நாம் வினவு நடந்து கொணட விதம் என்பது ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் ஒரு அராஜகம் என சொல்லி இருந்தோம் அதற்கு பதிலாக என்னை ஓடுகாலி துரோகி , கள்ள கூட்டனி என்ற திட்டலே என்பதே உங்களிடம் இருந்து பதிலாக வந்தது ஒரு நேர்மையான சுயவிமர்சனம் ஏன் இல்லை (ஒரு தோழர் சொன்னார் லீனா லிப்ஸ்டிக் போட்டு இருந்தார் அதான் அவர் மேட்டுகுடி லும்பன்னு -லிப்ஸ்டிக் எல்லாம் மேட்டுகுடிக்குன்னா உழைக்கும் மக்கள் லிப்டிக் போட்ட உடனே மேட்டுகுடி லும்பனாகிடுவாங்களோ)

3.பதிவர்கள் சங்கம் ஏன் அவசியம் என்ற பதிவு போட்டபோது "பதிவுலகம் என்பது மெய்நிகர் உலகம்" அதை மெய்யுலகமாக பார்க்க முடியாது என ஒரு பெரிய கண்டுபிடிப்பை சொல்லிவிட்டு இப்போது எப்படி மெய்யுலகம் ஆனது , சரி மெய்யுலகமோ பொய் உலகமோ அதன் தாக்கம் என்பது தனிமனிதனை
பாதிக்கவில்லை என சொல்ல முடியுமா உங்களால்.

சரி இப்போ நரசிம் விசயத்துக்கு வந்தால்

இதில் பதிவுலகமே கண்டிக்கும்படிதான் இருக்கிறது என்பதில் விவாதம் தேவை இல்லை ஆனால் சந்தன முல்லை , தீபா ஆகியோர் எந்த தவறும் செய்யாத பாலகர்கள் என்பதில் எனக்கு கருத்து உடன்பாடில்லை .

ரோட்டில சண்டை போட்டு இருக்கிற இரண்டு பேரையும் விலக்குறவன் கூட இரண்டு பேருக்கும் ஒரு அடி கொடுப்பான் ஆனால் அந்த நீதி கூட இல்லை உங்கள் வர்க்க நீதி மோசமான நீதியாக வர்க்க சார்புள்ள நீதியாக இருக்கிறது ( தாழ்ந்த சாதி என்பதால் என்ன செய்தாலும் சரி என்பதுதான்
சரின்னா உயர்ந்த சாதிக்காரன் குற்றம் செய்தால் பிரம்படின்னு வர்ணாசிரமும் கூறுவதும் சரின்னு ஆகிடுமே இங்கே தீர்மானிக்கும் சக்தி என்பது தசை பலமாகிடுமே - சாதியை அப்படியே ஏற்றுகொண்டு அதை கெட்டி தட்டி பார்த்து தீர்வு சொல்லும் போக்குதானே இது )

அப்போ நீதி என்பது உங்கள் பார்வையில் ஒரு மாய கருத்து கருத்து சுதந்திரம் போல அது வர்க்க சார்பானதுன்னா - நீங்கள் கம்யூனிசம் பேசவில்லை வேறு எதோ ஒரு இசம் பேசுகிறீர்கள்

டோண்டு விவகாரத்தையே எடுத்து கொண்டாலும் மக இக டோண்டுக்கு ஆதரவாக நீதி அடிப்படையில் ஒன்றும் செய்யாமல் அமைதி காத்தது டோண்டு ஒரு பார்ப்பான் என்பதாலும் போலி ஒரு பார்பனர் அல்ல என்பதாலும் என எடுத்துகொள்ள வேண்டியதாகிறது அப்போ பார்பனர் அல்லாதவன் என்னவேணா செய்யலாம் என்பதாகவே உங்கள் எண்ணம் இருக்கிறது .

லீனா விசயத்தில் மூக்குடைந்த நீங்கள் ஒரு பெண்ணிய ஆதரவாளராக காட்டி கொள்ள தருணம் பார்த்து காத்து இருந்தீர்கள் என இதை சொல்ல முடியாது (அப்படி சொல்ல மாட்டேன் உங்களை போல)

ஆனால் பெண்ணியம் என நீங்கள் பேசுவது சாதிக்குட்பட்ட பெண்ணியம் என்பதுதான் அனைத்து பெண்களுக்குமான பெண்ணியமோ அனைத்து பெண்களுக்குமான சுயமரியாதையோ பற்றி உங்களுக்கு சரியான அக்கறை இல்லை.

அப்படி எனில் நீங்கள் பேசும் சுதந்திரமும், நீதியும் அனைவருக்கு உகந்ததல்ல அதுவும் மனுநீதி போன்றது அதற்கு தலைகீழ் எதிரானது .

ஆனால் சாதியை ஒழிக்க சாதி சண்டைதான் சரி எனும் கருத்தில் உடன்பாடில்லை அது ஒரு முட்டாள் தனமான கருத்தும் கூட .

வர்க்கத்தை ஒழிக்க வர்க்க போராட்டம் அவசியம் ஆனால் சாதி ஒழிப்பிற்கு
சாதிய எண்ணத்தை கலைவது அவர்களிடம் முறையான அரசியல் போதனை மூலம் சாதிய பிடியில் இருந்து விட வைப்பது என்ற விசயங்கள் எல்லாம் கீழே போட்டு விட்டு விடுதலை சிறுத்தைகளும் , கிருஸ்ணசாமியும் செய்வது போல சண்டைக்கு தயார் படுத்தும் வேலையை செய்கிறீர்கள் அது சாதியை நிச்சயம் இன்னும் ஆயிரம் வருடம் ஆனாலும் ஒழிக்காது மாறாக இன்னும் கூர்மைபடுத்தும்.

பார்பனியம் என்பது சாதியல்ல என வாய்க்கு வாய் மேடைக்கு மேடை கூவினால் மட்டும்பத்தாது நடைமுறையில் அதை செய்யனும் (எப்படி விசயத்தை எல்லாம் சாதிக்குள் தள்ளி தீர்வும் பிரச்சனையும் சாதியாலேயே என சொல்ல கூடாது) அப்படி சொல்லும்போதுதான் சந்தனமுல்லை என்ன செய்து இருந்தாலும் அது செய்யவேண்டியதுதான் , ஆனால் நரசிம் எழுதியது மட்டும் செய்ய கூடாதது என உல்டாவா பேச முடிகிறது .

என்னை பொறுத்தவரை , நரசிம் கண்டிக்கப்படவேண்டியவர், அதே நேரத்தில் ஊழை குசும்பு செய்த இந்த சந்தன முல்லையும் கண்டிக்கத்தக்கவர்தான் .

பதிவுலகமே வெளியில் இருப்பவர்களின் பேச்சை கேட்காதீர்கள் என உண்மை தமிழன் உளறி கொட்டுகிறார் வினவு பதிவரரில்லையா

பிறகு அவர் என்னமோ வினவை பின்னூட்டம் போட்டு வளர்த்தது போல பேசுகிறார் ஆனால் வினவு எழுதும் விசயங்களினால் மட்டுமே அதிகம் வாசிக்கப்படுகிறது என உறுதியாக கருதுகிறேன்

மேலும் வினவுக்கு ஆதரவு தராதீர்கள், என சொல்லும் நீங்கள் இரண்டு பேரும் பேசி முடிச்சு கிடுவாங்கன்னு ஏன் சொல்றீங்கன்னு தெரியலை . இதென்ன ஸ்கூலா கையை குழுக்க வைத்தால் சரியாகிடும்னு சொல்வதற்கு . இல்லை மற்றவர்கள் தலையீடு தேவைபடும் நிலை வந்ததால் நானும் நீங்களும் வினவும் வந்துள்ளதை உணருங்கள்.

மேலும் இதுபோன்ற சார்பான சிந்தனை உள்ளவர்கள் விசயத்தை கையில் எடுக்காமல் இருக்க சங்கம் அவசியம் எனவும் அதற்கு ஒட்டுமொத்த ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறிய எனது கோரிக்கையை பதிவுலகம் மீண்டும் யோசித்து பார்க்கட்டும்

வர்க்கம் , சாதி , இதற்குட்பட்ட நீதி வழங்க நினைக்கும் இந்த நல்லவர்கள்
பதிவில் மூலம் சமுகத்துக்கு எதாவது செய்ய நினைக்கிறோம் என்பதும் தவறானதே . பதிவர் என்றால் அதில் எல்லா வர்க்கமும் எல்லா சாதியும் இருப்பார்கள் .

ஒரு சார்பு நீதி பதிவுலகில் எடுபடாது

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post