அன்பிற்குரிய ஈழமே என் நெஞ்சை பிழியுதுன் ஓலமே


அன்பிற்குரிய என்
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
 
என்னை உனக்கு தருவேனே
மண்ணை காக்க போராடும்
உன்னை மறுபடி  மீட்போமே
 
  
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
 
 
கொல்லும் கொல்லும் மனிதரையே -நாம்
வெல்வோம் வெல்வோம் ஒருநாளே
கல்லும் கரையும் உன் கதையை
காட்டி காட்டி படையெடுப்போம்
 
 
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
 
சொல்ல சொல்ல குறையாத
சோகம் சொல்லி கிடப்போமா
 
மெல்ல மெல்ல கொதித்தெழுந்து
விண்ணை முட்ட நிற்போமா
 
 
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
 
 எனது நாளின் முடிவினிலே
 உனது நாளும் உதித்தெழலாம்
 
எனது கண்ணீர் வெப்பத்திலே
உனது கதையும் மாறிடாம்
 
துடைத்தேன் கண்ணீர் கைகளினால்
எடுத்தேன் தீர்வை இன்றைக்கே
 
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
 
சிவந்த மண்ணில் உதித்தெழுவாய்
மறந்த தமிழன் மலைத்திடுவான்
 
வசந்த நாளை கொண்டாட
வரிசை கட்டும் மலர்களெலாம்
 
பிறந்து வருவாய் நாளைக்கே
சிவந்த கண்களில் சிரிப்போடு
 
ஈழமே !
நெஞ்சை பிழியுது உன் ஓலமே
 
 
 

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post