செல்லாவுக்கு கார்க்கியின் பதில்!

அல்ப்பைத்தனத்தைக் கிண்டினால் என்னென்ன புழுக்கள் நெளியும் என்று உணர்ந்த பின்பு தான் மேற்படி பதிவை எழுதினேன். நேரடியான மக்கள் விரோதி மிக சீக்கிரம் அம்பலப்பட்டுப்

போவான் ஆனால் துரோகிகள் அம்பலப்படும் போது தான் அதன் அதிர்வுகள் பலமாய் இருக்கும் என்பதும் எனக்குப் புரிந்த ஒன்று தான்.

செல்லா, உன் போன்றவர்களின் போலித்தனங்கள் கொடுத்த சலிப்பும் எரிச்சலும் தான் அந்தப் பதிவுக்கான கரு. கருத்துக்களில் ஒருமை வேண்டும் என்பது எமது கோரிக்கையல்ல,
மாற்றுக் கருத்துக்களும், முரண்பட்ட சித்தாந்தங்களும் பொதுக்களங்களில் தேவை என்பதே எமது நிலை. அரவிந்தன் நீலகண்டனையும் ஆர்.எஸ்.எஸ் பன்றிகளையும் எம்மைத் தவிற
வீச்சாக அம்பலப்படுத்தி எழுதியவர் வேறெவரும் இல்லை; ஆனால் அதே நீலகண்டன் ஓடிப் போகிறான் என்னும் நிலை வந்த போது நட்பு சக்திகள் என்று அறியப்பட்டவர்களின்
குரல்களைத் தாண்டி எங்கள் தோழர் அசுரன் தான் "அவன் துரத்தப்படவேண்டியவன் அல்ல; அவன் இங்கேயே இருக்க வேண்டும்; நாம் அவனை சித்தாந்த ரீதியில் காயடிக்க வேண்டும்"
என்று சொன்னவர்.

உனது வலையுலக செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்தே வருகிறோம். ஆபாச எதிர்ப்பு என்பதில் நீ ஆடிய நாடகங்களும், பேசிய வசனங்களும் எங்களுக்கும் தெரியும். உனது
முரண்பாடுகளை சுட்டிக் காட்டியவர்களிடம் நீ நடந்து கொண்ட முறை என்ன என்பதும் எமக்குத் தெரியும். இந்த மடலை வாசிப்பவர்களுக்கு குழப்பமிருப்பின் கவிதாவிடம் கேட்டுத்
தெரிந்து கொள்ளலாம்.

அது எப்படி....? உனக்குத் தெரிந்த பெண்களையும், நபர்களையும் பாலியல் ரீதியில் தாக்கிப் பேசினால் உனக்கு பொத்துக் கொண்டு வரும்.. நீயும் ரஜினிகாந்தைப் போல
பெண்மையைக் "காப்பாற்ற" கிளம்பி விடுவாய்.. ஆனால் அதே ஒரு முகம் தெரியாத பெண்ணென்றால் அவிழ்த்து அம்மனமாய் நிற்க வைப்பாயா?

யாருக்குடா தேவை உன் வீக் எண்ட் ஜொள்ளு? எவனுக்குடா தேவை நீ அரை நிர்வானமாய் ஆட்டம் போடும் வீடியோக்கள்? தமிழ்நாடெங்கும் கொந்தளிக்கிறது தேவாசுர யுத்தத்தின்
சத்தங்களுக்கு... நீ என்னடாவென்றால் சாராயத்தைக் குடித்து விட்டு உளரிக் கொட்டியதையெல்லாம் பொதுவிடங்களில் பகிரங்கப்படுத்துவதே முற்போக்கு என்று உனது கழிசடைத்தனங்களை
எல்லாம் கடைவிரிக்கிறாய்...

எங்கள் தோழர்களோடு உனக்கு முரண்பாட்டுக் கொண்டிருப்பதை நான் தடுக்கவில்லை.. நாங்கள் எதிரி அரவிந்தன் நீலகண்டனுக்கே பரிதாபம் பார்த்த போது உன்னைப் போன்ற கழிசடைகளுக்காகவா
கவலைப்படப் போகிறோம்? இல்லை... எனது நிலை பார்ப்பனிய எதிர்ப்பிலும் பெரியாரை உயர்த்திப் பிடிப்பதிலும் நீயும் நாங்களும் ஒரே தளத்தில் இல்லை என்பதை உணர வைப்பதே..

தமிழ்மணத்தில் கிடைக்கும் விளம்பரங்களுக்காக நாங்கள் எழுதுகிறோம் என்கிறாயே.. இதிலேயே தெரிகிறது நீ எப்பேர்பட்ட ஞானசூனியம் என்று. போடா.. போய் தெருவில்
இறங்கிப் பார்.. எங்கள் தோழர்கள் சூத்திரனுக்கேற்பட்ட இழிவுக்காக துண்டுப்பிரசுரங்களும், சுவரெழுத்துக்களும் வரைந்து கொண்டிருக்கிறார்கள்; தமிழகமெங்கும் நடக்கும்
பொதுக்கூட்டங்கள் பற்றிய தகவல்கள் எங்கள் தோழர்களின் தளங்களில் இருக்கிறது.

காமம் தவறு என்றா சொன்னோம்? உன்னைப் போல காமத்தைக் "கொண்டாட" நாங்களெல்லாம் அரிப்பெடுத்து அலையவில்லை. மலத்தை கழிவரையில் மட்டும் தான்
கழிக்கும் வழக்கம் எங்களுக்கு.

குறிப்பு :- செல்லாவுக்கு தோழர் ஸ்டாலின் கொடுத்த பதில் மிகச் சரியாக இருக்கிறது.. மிகத் தாமதமாகவே தமிழ்மணத்தைத் திறக்கும் வாய்ப்புக் கிடைத்ததாலேயே தாமதமான பதில்.
செல்லாவுக்கு - மீண்டும் உனது வாய்க்கொழுப்பு மேலெழுந்தால்.. இன்னும் விரிவாக உனது முகமூடி கிழிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

தோழர் தியாகு, எனது பதிவை உங்கள் தளத்தில் பதிப்பித்தமைக்கு நன்றி.. அதன் காரணமாய் நீங்கள் வாங்கி சொல்லடிகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்!

தோழமையுடன்,

கார்க்கி



--

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post