நிறைய பேசலாம்

பேச்சு வருத்தமடைய
செய்தது என்றாய்
பேசலாம் என்றேன்
பேசமறுக்கிறாய்

மூச்சில் திணரலென்றால்
மூச்சடக்கி என்னபயன்?

காட்சிகளும் கற்பனையும்
காப்பாத்தாவருமா- நண்பா
நிசமா நீ நினைச்சுப்பார்
நிலைமாற முயற்சி செய்!


கவிநூறு நான் சொல்லி
காசாக்கி போனாலும்
செவிநூறு எனக்கிங்கு
செம்பட்டை விரித்தாலும்
உளிநூறு கொண்டாலும்
உறுத்துமொரு கருத்துன்
உள்ளத்துள் இருக்கையிலே
வெறுக்குது உன் கவிகேளாய்!

வெளிப்படையா பேசினாக்க
வேதனைகள் வருமென்றால்
களிப்படைய செய்ய ஒரு
கலைகூத்து ஆடிடவா
செருக்கடையா மதியோடு
சிந்தனை செய் சிந்தனையே!




Previous Post Next Post