காத்திருத்தல்

எனதுஏக்கங்கள் பூத்த
இரவுகளில் உனக்காக
காத்திருந்தேன் !

பூக்களை பறிக்க
நீ வருவாய்
என என்னுடன்
இருந்தது இரவு !
ஏன் வரவில்லை

நீண்டது இரவு
நிலவுடன் ஒட்டாது
தனியே தொங்கியது
மனது!

உன்னிடம் அனுப்பிய
மனதை போய்
நாளை வாஎன
பிச்சைகாரனை போல
விரட்டியபின்
உன் வீட்டையே
தினமும் சுற்றி
கொண்டுள்ளதை
அறிவாயா!

நேரத்தை நகத்த
முயன்று தோற்று
உடைந்த கடிகார
முள்ளாக நொண்டியது
உள்ளம் !

விடிகாலையில்
வந்தாவது
சூரியனை உதிக்கச்செய்

-தியாகு

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post