வண்ணத்து பூச்சியே !

என்னிடம்
மட்டும்சொல்!
தேன் மட்டும்
எடுத்தாயா
பூக்களிடம்
வண்ணத்தையும்
எடுத்தாயா.


என்னவளின்
கண்களில்
இமையாக படபடத்து
எனை காட்டி
கொடுத்தபின்

வண்ணங்களை சிதறடித்து
வானவில்லாய்
மாறிவிட்டாய்.

வண்ணங்களை
தொலைத்த பூவை
எப்படி நான்தருவேன் சொல்.
வந்துவிடு

வண்ணத்துடன்
விண்ணப்பிக்கும்
வேளையில்
விண்ணில் இருந்து
மழையாக!

-தியாகு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post