அதிகார போதையில் அன்புடன் குழுமம்

இந்த கடிதம் நான் அன்புடனுக்கு அனுப்பி அங்கே வெளியிடப்படாத கடிதம்
அதை தமிழ் மணத்தில் இடுகிறேன்

இதற்கும் இதற்கு முந்தைய எனது இடுகை
க்கும் சம்பந்தம் உள்ளது

அன்புடன் குழும நண்பர்களே !

இதற்கு முன்பு பாலமுரளியின் கடிதம் பார்த்து இருப்பீர்கள்
அதே போலத்தான் எனக்கும் நிகழ்ந்தது அதாவது எனது
கையெழுத்தில் உள்ள என் குழும பெயர் இருக்ககூடாதென்று அறிவுருத்தப்பட்டேன் .

ஏன் என்று கேட்டால் ஒரு பெரிய கடிதம் அடித்துள்ளார்
புகாரி . நோட்டீஸ் போர்டில் அதை படித்து இருப்பீர்கள்

ஒரு பொதுவான கருத்து தளம் என்பது ஒரு சில தனிநபர்களால் நடத்தப்படும் போது என்னாகும் என்பது
எனது இந்த அனுபவமே சாட்சி .

குழுமம் முகவரி வந்தது என்பது அவ்வளவு பெரிய குற்றம் என்றால் நான் இனிமேல் எந்த மடலையும் அன்புடனுக்கு அனுப்பவில்லை .

சுதந்திரம் இல்லாத இடத்தில் நான் இருக்க முடியாது

எனது படைப்புகளை வாசித்து எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள் . இந்த குழுமத்தில்தான் \
மிக மிக அன்பான மனிதர்களையும் பார்த்தேன் .

என் கையெழுத்தை அனுமதிக்கா இடத்தில் நான் இருக்க முடியாது எனது கையெழுத்து யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத பச்சத்தில் யாருக்கும் அதை மாற்ற சொல்ல அருகதைகிடையாது !

இவ்விசயத்தில் நான் எந்த காரணம் கொண்டும் விட்டு கொடுக்க அல்லது பனிந்து போக இயலாது !

இன்று எனக்கு நடந்த தீமை நாளை உங்களுக்கும் நடக்கும்
இது ஒரு வரலாறு இந்த வரலாறு நடபது இன்று நேற்றல்ல என்பது அன்புடனின் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்
அதை அறியாதவர்கள் "all about anbtan " எனும் இழையை வாசித்து பார்க்கும்படி கேட்டு கொள்கிறேன்

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/d109241d71cef4f0/ee689a2386ec435


நட்புடன்

தியாகு

16 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post