கம்யூனிஸ்டு கட்சிகளை நினைத்து வெக்கமும் வேதனையும் அடைகிறேன்






இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது அது மக்களுக்காக மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி ரத்தம் சிந்திய கட்சி என்பதால் ஆனால் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி விஜயகாந்தின் பின்னால் போனது வியப்புக்கும் கண்டணத்திற்கும் உரியது .

திராவிட பாரம்பரிய மிக்க கட்சிகள் ஊழல் கட்சிகளாக மாறிவிட்டபின் கம்யூனிஸ்டுகள் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம் .
கம்யூனிஸ்டுகளுக்கு தேர்தலில் ஜெயிக்கவேண்டும் என்பது பிரதான நோக்கம் இல்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன் . 

அப்படியே ஜெயித்தாலும் அங்கே ஆளுகின்ற முதலாளித்துவ கட்சிகளின் வண்டவாளத்தை அம்பலபடுத்தவே கம்யூனிஸ்டு கட்சிகாரன் ஆளும் முதலாளித்துவ பாராளுமன்ற சட்டமன்றத்துக்குள் நுழைகிறான்.
இவர்களோ கணக்கை திருப்பி போட்டுவிட்டார்கள் மற்ற கட்சிகளை போலவே கம்யூனிஸ்டு கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதே அது . அப்படி பங்கு பெற்ற மேற்கு வங்கம் இப்போது கம்யூனிஸ்டுகளிடம் இல்லை ஆனால் கேரளாவில் அடிக்கடி ஆட்சி மாற்றத்தில் கம்யூனிஸ்டுகளிடம் வந்தாலும் .
இந்த சட்ட மன்ற அதிகாரத்தால் மக்களுக்கு ஏதும் செய்து விட முடிவதில்லை . மக்களை வர்க்க பாதைக்கும் வர்க்க போராட்டத்துக்கும் திருப்ப உதவாத சட்டமன்றத்தை உதவும் மக்கள் மத்தியில் பணி செய்யவும் தயாராக இருக்க கூடியவந்தான் கம்யூனிஸ்ட் .

கம்யூனிஸ்டுக்கு கார் வேண்டாம் மாட மாளிகைகள் வேண்டாம் . ஏசி வேண்டாம் அவன் குடிசையில் இருந்து கூட மக்கள் பணி ஆற்ற வேண்டும் .

இந்த எளிமைதான் சமத்துவ சமூகத்தை மக்களுக்கு கொடுக்க வழிநடத்தும்.ஏனெனில் கம்யூனிஸ்டுகள் பாட்டாளிவர்க்கத்தின் முன்னனி படை நன்றாக கவனிக்கவும் எஜமான் அல்ல முன்னனி படை மட்டுமே
பாட்டாளி மக்கள் அல்லும் பகலும் முதலாளித்துவ நுகத்தடியால் அவதியுற்றும். குடி பழக்கத்திற்கு அடிமையாகியும் கிடக்கும் இந்த நாட்டில்  குறைந்த பட்சஅரசியல் அறிவு கூட இல்லாத மனிதன் பின்னே நீங்கள் போகலாமா?

இதோ இந்த சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட உங்களுக்கு கிடைக்கவில்லை .



(E M Sankaran Namboodiripad)

When he took oath as the first chief minister of Kerala, E M Sankaran Namboodiripad or EMS as he was known, also became the first Communist leader to have been elected democratically in India. EMS pioneered the land and education system in Kerala that has become a model for other states and contributed to the rise and rise of literacy in Kerala. He also played an active role within the CPI(M) party and brought it to national prominence in the 60s and 70s. Besides this, he was a well-known journalist and writer as well.


இதைத்தானா நீங்கள் கற்று கொண்டீர்கள் .இந்த சட்ட மன்றத்தில் விஜயகாந்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்திருந்தாலும் இதுவே எனது பதில்
ஏனெனில் குறைந்த பட்ச அரசியல் அறிவு கூட இல்லாத ஒரு நபரை நம்பி 80 ஆண்டுகால அரசியல் அறிவும் பாட்டாளி வர்க்கத்துடைய முன்னனி படை என போற்ற பட்ட கம்யூனிஸ்டுகள் வரிசை கட்டி நிற்பது பகுத்தறிவான செயல் அன்று 



Jyoti Basu

Jyoti Basu holds the record for serving as the longest chief minister of any state in India after holding that post in power from 1977 to 2000 in West Bengal as a CPI(M) politician. He was also one of India’s most well-known atheists. Basu designed the land reform plan in India and initiated panchayati raj for farmers in West Bengal. Never one to follow Communism by the book, Basu made it his mission to give the lower strata of society its due and always upheld communal harmony.
பெரிய செயல் தந்திரம் ராஜ தந்திரம் ஏதும் தேவை இல்லை இந்த முறை நீங்கள் தனியாக நின்றிருக்கலாம்  இந்த வைக்கோ திருமா போன்றவர்களுடன் எந்த கூட்டனியும் இன்றி மக்களுடைய மனநிலையை
அறிய நின்றிருக்கலாம் .


விஜயகாந்தை முதல்வராக கொண்ட ஒரு அரசுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவா என சொல்லி இன்று பிறந்த பையன் கூட சிரிக்கும் வகையில் நடந்து கொண்டீர்கள் தோழர்களே

மிகுந்த வருத்தமும் வெக்கமும் அடைகிறேன்

களப்பணி ஆற்றிய நாட்களில் உங்களிடம் கற்று கொண்ட அரசியல் என்னை உங்களுக்கு எதிராக பேச வைத்து விட்டது.

அதிமுக தனது இரட்டை இலை சின்னத்தில் கம்யூனிஸ்டுகளை நிற்க சொல்கிறார் என்ற குற்றச்சாட்டை வேறு எதோ ஒரு கட்சியை சொன்னது போல சொல்லி இருக்கிறார்  சி மகேந்திரன் அதற்கு வந்த கமெண்டு கீழே

 http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8436298.ece

//PRABU E
பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள். அடுத்த தேர்தல்களில் உங்களுக்கு கூட இந்த நிலைமை ஏற்படலாம். அனைத்து தொகுதிகளிலும் உங்கள் கட்சி சார்பில் உங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட உங்களுக்கு தைரியம் உள்ளதா அல்லது ஆட்கள்தான் இருக்கிறார்களா?தேர்தலுக்காக அணி மாறுவதில் பா ம கவும் கம்யுனிஸ்டுகளும் சளைத்தவர்கள் அல்ல.//


ெய்ி : நன்றி ி இந்து 

அங்கீகாரத்தை இழக்கும் இடதுசாரி கட்சிகள்: இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் இணைப்பு சாத்தியமா?

கவிதா முரளிதரன்
Comment (7)   ·   print   ·   T+  
டி.ராஜா - பிரகாஷ்காரத்
டி.ராஜா - பிரகாஷ்காரத்
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் தேசிய அளவில் கடும் பின்னடைவை சந்தித்திருக்கின்றன இடதுசாரி கட்சிகள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) போட்டியிட்ட 90 சொச்சம் இடங்களில் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போட்டியிட்ட 65 இடங்களில் ஒரே ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அரசியல் கட்சிகளாக தேசிய அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு அந்த இரு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.
இனி இந்தியாவில் இடதுசாரி இயக்கங்களுக்கான தேவை குறித்தும் அவற்றின் முக்கியத் துவம் குறித்தும் பலர் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் நிலை யில் இரண்டு கட்சிகளுமே உள்கட்சி பரிசோதனைகளுக்கான தேவையையும் செயல்திட்டங் களை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருக்கின்றன.
இந்தியாவை ஆளக்காத்திருக்கும் வலதுசாரி அரசியலை எதிர் கொள்ள இரு கட்சிகளையையும் இணைப்பதன் சாத்தியப்பாடுகள் பற்றியும் குரல்கள் எழத்தொடங்கி யிருக்கின்றன.
“பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் இடதுசாரிகளுக்கு ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது. இது மிக சோதனையான கால கட்டம். முன்னெப்போதையும் விட இப்போது இடதுசாரி இயக்கங் களின் தேவை கூடுதலாக இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் இடதுசாரிகள் உள்பரிசோதனை செய்துகொண்டு இயக்கத்தை புதுப்பிக்க வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம். அதற்கான பணிகளை உடனடியாக தொடங்கு வோம்” என்கிறார் சிபிஐயின் தேசிய செயலாளர் டி ராஜா.
“பா.ஜ.கவின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம், மக்களுக்கு காங்கிரஸின் மீதிருந்த வெறுப்பே. இந்த வெறுப்பு மக்கள் விரோத பொருளாதார கொள்கை களாலேயே உருவானது.
ஆனால் பொருளாதார கொள்கைகளை பொறுத்த வரையில் பா.ஜ.க.விற்கும் காங்கிரஸுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதை விரை விலேயே மக்கள் உணர்வார்கள். அப்போது இடதுசாரிகள் மக்கள் போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய சூழல் மீண்டும் உருவாகும்” என்கிறார் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன்.
http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/article6022033.ece
 

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post