சிட்டு குருவி லேகியம் வேணுமா?

சிட்டு குருவி லேகியம் வேணுமா?

http://www.vinavu.com/2011/09/28/prostitution

அதாவது சிட்டு குருவி லேகியம் விற்பவர்களை பார்த்திருப்பீர்கள்

அந்த லேகியம் உடல்வலியை கேட்கும் வயித்து வலியை கேட்கும் முடிவாக ஆண்மை குறைவையும் போக்கும்

இப்படி சர்வரோக நிவாரணியாக செயல்படும் சிட்டு குருவி லேகியம் விற்பவன் இந்த சமூகத்தில் என்ன நன்மை செய்கிறானோ அவனை விட ருமடங்கு மேலேயே நம்ம வினவு தோழர்கள் செய்கிறார்கள் என்பதை நான்

அறுதியிட்டு சொல்ல முடியும்

ஒரு விசயத்துக்கு பதிலளிக்க பார்பனியம் , ஆதிக்க வர்க்கம் , நவ காலனியம் , தமிழ் தேசியம் என்கிற ஆதிக்க சாதி என்கிற அனைத்து விசயங்களையும் தொட்டு எழுதுவதில் வல்லவர்கள் எப்படின்னு கேட்டீங்கன்னா

//இந்திய கலாச்சாரம் விபச்சாரத்தை பகிரங்கமாகவே ஏற்கிறது. சீதை, கண்ணகி, முதலான 'கற்புக்கரசிகள்' போற்றப்படும் இந்நாட்டில்தான் தேவதாசி என்ற உலகிலேயே மூத்த விபச்சார நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்து மதக் கோவில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் அபலைப் பெண்கள் தங்களை அழகுபடுத்தி, ஆடல், பாடல் கலைகளை கற்றுத் தேர்ந்து, அரசர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பார்ப்பனப் புரோகிதர்கள் முதலான அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்கு காமக்கிழத்தியாக பணி புரிய வேண்டும். இந்த முறை சென்ற நூற்றாண்டு வரை கூட புழக்கத்தில் இருந்தது.//

இந்தியாதான் விபச்சாரத்தை அறிமுகபடுத்தியதுன்னே துணிந்து அடித்து விட்டு பிறகு எங்கெல்ஸ்சுக்கு போவார்கள் தனிசொத்துரிமை தோன்றியதில்லிருந்து தான் ஒருதாரமணம் வந்தது எனவே விபச்சாரம் என்பது வந்தது என சொல்வார்கள் ஆனால் இந்த விபச்சாரத்தை கொண்டு வந்தது மிட்டா மிராசுகளும் அதற்கு ஒத்து ஊதியது பார்பனியமும் என சொல்லி விடுவார்கள்

அப்போ பண்டைய ரோமில் விபச்சாரம் எப்படி வந்தது கிரேக்கத்தில் எப்படி வந்ததுன்னென்லாம் கேள்வி கேட்கப்படாது

அதாவது தனிசொத்துடமை தோன்றும் போது தனக்கு வாரிசாக ஒருவனை அல்லது ஒருத்தியை தேர்ந்தெடுத்தாக வேண்டியா சூழலுக்கு சமூகம் வருகிறது அது பெண்களின் பாலியல் சுதந்த்ரத்தில் கைவைத்து விடுகிறது இதன் காரணமாக பெண்களுக்கு மட்டும் கற்பு நெறி வருகிறது

இயல்பாகவே கிடைக்கும் இந்த சலுகையை ஆண் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறான் அதனால் தோன்றியது வளர்வது விபச்சாரம்இதில் வர்க்க வேறுபாடில்லை

இதை சொன்னால் அது சிட்டு குருவி லேகியமாகாது

அதில் ஆதிக்க சாதி வரனும் , பார்பனியம் வரனும்

மிட்டா மிராசுகள் வரனும் அதான் சிட்டுகுருவி லேகியம்

சமூகத்தை பற்றிய மார்க்சிய மூலவர்களின் நூல்களை கஸ்டப்பட்டு புரிந்து கொள்ள நினைப்பவர்கள் வினவை படித்து மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள்

தயவு செய்து நேரடியாக மார்க்சிய நூல்களை வாங்கி படியுங்கள் இது எனது வேண்டுகோள்

-----------------

பிற்சேர்க்கை
--------------

//ஊருக்கு “கற்பு”, ஆசைக்கு விபச்சாரம் என்பது ஆண்டைகளின் இயல்பாக மாறியது. அதே போன்று ஆண்டைகளின் அந்தப்புரத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்களும் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டார்கள். இப்படி சொத்துடமை காரணமாக உருவாகிய குடும்பம் தன்னளவிலேயே போலித்தனத்தையும் சேர்த்து உருவாக்கியிருந்தது. இதைத்தான் ஆசான் ஏங்கெல்ஸ் கற்பும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று அழைக்கிறார். இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து உடன்பாட்டுப்பொருள் ஆவது போல இரண்டு விபச்சாரங்கள் சேர்ந்து ஒரு கற்பாக மாறுகின்றன என்று கூறிய ஃபூரியேவின் மேற்கோளையும் ஏங்கெல்ஸ் காட்டுகிறா//

இது ஆண்டைகளின் இயல்பு மட்டுமல்ல இந்த தன்மை கொண ஆண்கள் அனைவரது இயல்பாக விபச்சாரம் என மாறுகிறது என்பதே சரியானது இதில் ஆண்கள் சமூகம் கொடுக்கும் சலுகையை தன்னிஸ்டத்துக்கு பயன்படுத்துகிறார்கள் இதில் வர்க்க வேறுபாடு இல்லை

//இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் மட்டும்தான் உண்மையான காதலும், வெளிப்படையான உறவும் சாத்தியமாயிருந்தன. அதனால் அங்கே காதல் தோல்வியுறும் போது பிரிவினை என்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் சொத்துடமை வர்க்கங்களில் வாரிசுரிமையை ரத்து செய்ய முடியாது என்பதால் காதல் பொய்த்துப் போனாலும் குடும்ப வாழ்க்கையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமெங்கும் உள்ள அநேக குடும்பங்கள் இந்த அச்சில்தான் சுற்றி வருகிறது என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.//

இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் மட்டுமல்ல அதிலும்
விபச்சாரத்தை நாடி சென்ற ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இதற்கு சமூகம் தரும் சலுகையே காரணம்

1.சொத்துடமை வர்க்கத்தின் குடும்ப அமைப்புக்கும்
காரணம் சொத்துடமை என்றால்

2.இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்தின் குடும்ப அமைப்புக்கு காரணம் காதல் என்பது சரியே

விபச்சாரம் என வருகிற போது ஆண்கள் வர்க்க வேறுபாடின்றி இந்த புள்ளியில் ஒன்றிணைகிறார்கள்
இதை காண்பதற்கு நடைமுறை வாழ்க்கையே உரைகல்

//இன்று எல்லா வர்க்கங்களிலும் இந்தக் ‘குடும்பத்தின்’ செல்வாக்குதான் நீடிக்கிறது. அந்த வகையில் இன்றைய குடும்பங்களின் சொத்தடைமைத் தன்மையே ‘கள்ள உறவுக்கு’ ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த கள்ளஉறவுகளைத் தாண்டி அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு, விபச்சாரம் தேவையான பாலியல் வக்கிரங்களை நிறைவேற்றுகிறது. அதனாலேயே இன்று பல நாடுகளில் விபச்சாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசின் ஆதரவோடு செயல்படுகிறது./

இந்த பாரா இன்று எல்லா வர்க்கம் என திரிக்கிறது முதல் பாரா பாட்டாளிவர்க்கத்தின் பத்தினி தனம் என்பது இல்லை ஏனெனில் எல்லா வர்க்கங்களும் கொஞ்சம் சொத்து வச்சிருக்கு என்கிறார்கள் அப்படி இல்லை என்பதை காணலாம் அப்படி என்றால் மேலும் முதல் பாராவில் சொத்தில்லா வர்க்கத்தின் இருத்தலும் பிரிதலும் காதலும் காதல் இன்மை நிமித்தமுமே என்கிற வாதம் இரண்டாவது பாராவில் இல்லாமல் போகிறது ஏன்

இதான் சிட்டு குருவி லேகியம் என்பது

தனிசொத்து தோன்றியதும் குடும்பம் தோன்றியது என சொல்வதற்கும்

விபச்சாரம் என்பது சொத்துடமை வர்க்கத்தால் தோன்றியது என சொல்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு

//மேட்டுக்குடி வர்க்கங்களின் இன்பநாட்டத் தேவைகள் அவர்களது பணத்திமிர் காரணமாக எல்லா துறைகளிலும், எல்லா உணர்ச்சிகளிலும் அளவிறந்து காணப்படுவது போலவே பாலியல் விசயத்திலும் நடைபெறுகிறது. இதுவும் இன்றல்ல, நேற்றல்ல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்கிறது. நமது பண்ணையார்களும், மிட்டா மிராசுதார்களும், ஜமீன்தார்களும் சட்டப்பூர்வமாகவும், மறைமுகமாகவும் பல மனைவிமார்களோடு வாழ்ந்தார்கள். மைனர் என்ற பெயரில் அவர்களது வக்கிரங்கள் இயல்பானதென்று நியாயப்படுத்தப்பட்டன. இது போக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களையும் குறிப்பாக அவர்களுக்கு மணமானால் முதலிரவில் பண்ணையாரை திருப்தி படுத்த வேண்டும் என்ற கொடுமை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கங்களால் இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட்டன.//

இந்த இடத்தில் மேட்டுகுடி வர்க்கமே விபச்சாரத்துக்கு காரணம் என்பதில் உண்மை எப்படி இருக்கிறதென்றால்
அங்கேதான் பெண் உடல் இந்த பண்ட உற்பத்தி சமூகத்தால் வெறும் பண்டமானதும் முதலாளித்துவத்தால்
அது மேலும் மேலும் சீப்பாக்க படுவதும் தான் விபச்சாரத்துக்கு காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அந்த பண்டத்தை வாங்க மேட்டு குடியினரால்
எளிதாக முடிகிறது எனவே அவன் அதை வாங்குகிறான்

இல்லாதவன் அவனுக்கு தகுந்த இடத்துக்கு போய் எய்ட்சை வாங்குகிறான்

ஆக விபச்சாரத்தை ஒழிக்க உண்மையான காதலும் அதன் அடிப்படையில் இயைந்த ஒன்றித்த மண வாழ்க்கையையும் உருவாக்க கலாசாரபுரட்சியை நடத்தவேண்டும்

எங்கெல்ஸ் சரியாக சொன்ன “ ஒருதார மணம் “ என்கிற மைல் கல்லை நோக்கி உந்த வேண்டும் அப்போதுதான் விபச்சாரம் ஒழியும்

சாராம்சமாக

நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல்

என்பதற்கேற்ப ஒரு நோய் ஏன் வந்தது என்பதை அறிவதில்
நம்மிஸ்டத்துக்கு தீர்வுக்கு வந்தால்

அதை தணிக்கும் விசயத்திலும் தவறவிடுவோம் அதைத்ஹ்டான் இந்த லேகிய வியாபாரிகள் செய்கிறார்கள்




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post