காம்ரேட்ஸ் நீங்கள் மனநோயாளிகள் தாம் ஏனென்றால்?

நீங்கள் மனநோயாளிகள் தாம் ஏனென்றால்?

அந்த தோழர் எனக்கு தெரிந்தவர் ஒரிடத்தில் என்னை வசைபாடி இருந்தார் அவரது பெயர்" சூப்பர் லிங்க்ஸ்" எனவே அவரை நான் போனில் அழைத்து

"அலோ நான் தியாகு பேசுறேங்க , நீங்க சூப்பர் லிங்க்ஸ் தானே "

என்றது மறுமுனையில் பதற்றம் தொற்றி கொண்டது இல்லை நான் அவரில்லை அவர் வெளியில் போயிருக்கார் வந்தவுடன் பேச சொல்கிறேன் என்றது குரல்

" நீங்கள் தான் சூப்பர் லிங்க் என தெரியும் எனவே பாசாங்கு செய்யாதீர்கள் " என ஆரம்பித்து நான் விசயத்தை சொல்லி முடித்ததும் ஒரு அரைமணி நேரம் கழித்து இதே நபர் அழைத்து நாந்தான் முதலில் எடுத்தேன் ஆனால் அப்போது என்னால் பேச இயலவில்லை ஏனெனில் நண்பர்கள் உடனிருந்தார்கள் என ஏதேதோ காரணம் சொன்னார்

ஏன் இந்த தலைமறைவு - ஏன் இந்த பதட்டம்

நீங்கள் நம்பும் ஒரு புரட்சிகர கொள்கையை ஏற்று கொண்டு என்ன தியாகம் வேண்டுமானாலும் இந்த சமூகத்துக்காக செய்வேன் என வந்துள்ள உங்களுடைய அல்லது வினவு மற்றும் மக இகவில்பலர் புனை பெயரில் சுற்றிக் கொண்டு இருப்பதன் காரணம் என்ன?

1.உங்கள் கட்சி தடை செய்யபட்ட இயக்கமா ? இல்லையே உலகில் எந்த கம்யூனிஸ்டு கட்சியாவது தடைசெய்யப்படாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்களா?


2.இந்த அரசுக்கு உங்கள் அனைவரையும் தெரியாது என நினைக்கிறீர்களா? அரசுக்கு யார் யார் எழுதுகிறார்கள்;செயல்படுகிறார்கள் என்பதெல்லாம் தெரியும் ,அது உங்களுக்கு தெரியும் பின் யாரை ஏமாற்ற சீன் போடுகிறீர்கள்.


3.இந்த ஆளும் வர்க்கம் உங்களை முக்கிய எதிரியாக கருதவே இல்லை, அப்படி கருதும்படி நீங்கள் ஒன்றும் புடுங்கவே இல்லை என்கிற போது ஏன் தலைமறைவு

மனநோயின் அறிகுறி மொத்த அமைப்புக்கும் எப்படி? தனக்கு பின்னால் யாரும் துரத்தாதபோது தன்னையாரோ துரத்துவதாக நினைப்பது மனநோயாகும்

காவல்துறையோ உளவு துறையோ உங்களை தேடாதபோது நீங்களாகவே கற்பனை செய்து வைத்து தலைமறைவாக இருப்பது கேலிகூத்தானதாகவும் பரிதாபமானதாகவும் இருக்கிறது .


மனநோயில் இருந்து எப்போது விடுபடுவீர்கள்?


மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் முதலில்

மக்கள் உங்களை நம்ப வேண்டும் அணி திரள வேண்டும் அதற்கு நீங்கள் சொந்த பெயரில் இருந்து பேசவும் செயல்படவும் வேண்டும்

அந்த செயல்பாடு ஆளும் வர்க்கத்துக்கு ஒரு பெரும் இடைஞ்சலாக வரும்போது கட்சியை தடை செய்யும் போது தலைமறைவு என்ற நிலைபாட்டை எடுத்தீர்கள் என்றால் சரியான மனநிலையில் இருக்கிறீர்கள் என அர்த்தம் அந்த செயல்திட்ட பாதையில் செல்லும் போதுதான் நீங்கள் பயந்து சாகும் இந்த மனநோய் உங்களை விடும் .

உங்களுக்கும் எனக்கும் ஒரே லட்சியம்தான் பாட்டாளிவர்க்க விடுதலைதான் எனும் போது நீங்கள் எனக்கு முக்கிய எதிரியல்ல எனும் போது நீங்கள் மனநோயாளியாக இருப்பதை கண்டும் காணாமல் நான் செல்ல முடியாது என்பதால் இதை சொல்கிறேன் .

நன்றி


தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post