லஷ்மி ஓரன்னுக்கு கிடைக்காத நீதி



மாறன் சகோதரர்களில் 35 சேனல்களுக்கு லைசன்ஸ் கிடைக்காதது ஜனநாயக விரோதம் , சுத்த அராஜகம் இல்லையா ஆனால் பாருங்கள் மாறன் மாதிரி பணக்காரர்களுக்கு மட்டுமில்லை லஷ்மி மாதிரி தாழ்த்த பட்ட ஆதிவாசி பெண்களுக்கும் இந்த ஜனநாயகத்தில் நீதி கிடைக்கவில்லை.


ஆதிவாசிகளுக்கு தினகூலி வேண்டும் என்று ஒரு போராட்டம் 2007 ல் நடந்தது அந்த கூட்டத்தை வழக்கமபோல லத்தி ஜார்ஜ் செய்தது அந்த போலீஸ் அதில் கூட்டத்தில் இருந்து சிதறியவர்தான் லஷ்மி .
உடைகள் கலைக்கப்பட்டு ஓட ஓட உயர் சாதி அசாமிகளால் தாக்கப்பட்டவர்தான் இந்த லஷ்மி ஓரான் .
இன்னும் நீதி கிடைக்கவில்லை ..



 
நீதியை விலைக்கு வாங்கும் பெண்களும் இருக்கிறார்கள் அவர்களின் வீட்டுக்கே நீதி பதியின் நீதி சாசனம் எழுதி புரூப் பார்க்க அனுப்பப்படுகிறது.


ஆனால் ஏழை அதுவும் ஒடுக்கபட்ட ஆதி வாசி பெண்கள் நடு ரோட்டில் துகிலுரிக்கப்பட்டாலும் இந்த ஜனநாயகத்தில் நீதி கிடைப்பதில்லை.
ஆக நீதி என்பது பணத்தின் பாக்கெட்டில் இருக்கிறது பெரும்பான்மையின் காலடியில் அது சேவகம் செய்கிறது என்பதை ஜனநாயகத்தை போற்றும் நடுத்தர வர்க்கம் எண்ணி பார்க்குமா?
ஒரு நாள் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம் இன அபிமானம் என்பதும் , ஜனநாயகம் என்பதும் வர்க்க நலன்களுக்கான முகமூடி மாத்திரமே என்பதை அதற்கு பல ஆயிரம் லஷ்மிகள் துகிலுரிக்கபட்டிருப்பார்கள் .




லஷ்மி கேட்டது ரொம்ப குறைவுதான் 2007ல் 40- ரூபாய் குறைந்தபட்ச கூலியை 200 ரூபாயாக உயர்ந்துங்கள் என்பதுதான்.
போராட்டம் என்று போனால் அடிகிடைப்பதை பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த பெண்ணுக்கு மானம் பறிபோய் இருக்கிறது .
உங்களது சோ கால்ட் ஜனநாயகம் என்ன பண்ணி கொண்டு இருந்தது.
நீதி அரசர்கள் சாயுங்கால வேளையில் நீதி தேவிகளிடம் உரையாடி கொண்டிருந்த போது இந்த அநீதி நடந்திருக்கலாம்.
கால் காசு பெறாத சங்கதிகளை ஊதி பெருக்கும் ஊடக வியாசர்கள் உறங்கி கொண்டிருக்கையில் இந்த பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கலாம்.



Laxmi refused to accept the Rs.2 lakhs the state govt offered as compensation - See more at: http://www.theweekendleader.com/Causes/1475/total-recall.html#sthash.yuZSOAbH.dpuf

Laxmi refused to accept the Rs.2 lakhs the state govt offered as compensation - See more at: http://www.theweekendleader.com/Causes/1475/total-recall.html#sthash.yuZSOAbH.dpuf
ஆனாலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதை நம்மால் சாதி நீதியாக பார்க்க முடியவில்லை அங்கு வர்க்க நீதி அரசாளுகிறது .
மாறானுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை அதே வர்க்கரீதியாகத்தான் பார்க்கமுடியும் வர்க்க அநீதியாக இல்லை
ஏழைக்கு வழங்கபடாத நீதி எப்படி பணக்காரர்களுக்கு சேவகம் செய்கிறது என்பதும் அதே நீதி பணக்கார சண்டையால் கிடைக்காத போது எப்படி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது என்பது இந்த வாழ்வின் முரண் அல்ல நமது புரிதலின் முரணே.



ஆனால் இயல்பாகவே உள்ள மன ஊக்கத்தில் லஷ்மி இதிலிருந்து மீண்டு விட்டார் ஆனால் நீதி ? 

She added, "The faces of the four culprits, who molested me, were also captured in cameras. They were arrested but that was the end of the story. I was never called by police in these five years. I was called only once by the Manisana Enquiry Committee and that too to identify the culprits. How do they expect a woman who is being stripped and molested on the streets to keep her eyes open and look at the faces of men molesting her?"

She said, "Police have arrested four persons so far regarding Monday's incident, but the main accused is still absconding. They should be hanged so that nobody dares to commit such a crime in future."
Laxmi now plans to start a movement to convince the government that protecting the modesty of a woman is as important as any other function of the government. "A woman is a mother but why can't the government take steps to protect women," she adde

ஆனால் இந்த அப்பாவி பெண்ணுக்கு தெரியாது இந்த அரசும் அரசாங்கமும் போலீசும் வர்க்க சார்பானது என்பது

http://infochangeindia.org/human-rights/changemakers/laxmi-orangs-fight-for-justice.html 

http://www.theweekendleader.com/Causes/1475/total-recall.htm 

கேட்க ஆளில்லாத பெண்களுக்கு நமது அரசின் அடியாள்களும் அநீதி இழைப்பார்கள் யாரிடம் போய் நீதி கேட்பது 
 ”11 ஆதிவாசி பெண்கள் ஆந்திர போலீசாரால் கற்பழிப்பு”

நகரி:ஆந்திர மாநிலத்தில் மலைப் பகுதிகளில் நக்சல்கள் வேட்டைக்கு சென்ற போலீசார் ஆதிவாசி பெண்கள் 11 பேரை கற்பழித்துள்ளனர். அந்த போலீசார் மீது நடவடிக்கைக கோரி போராட்டம் வலுத்து வருகிறது.விசாகப்பட்டினத்தில் வாசப்பள்ளி என்னும் கிராமத்தில் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. மலைப் பகுதியில் உள்ள அந்த கிராமத்தில் நுழைந்த போலீஸ் படை அங்குள்ள ஆண்கள், வயதானவர்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரையும் ஊரைவிட்டு துரத்தியுள்ளனர்.ஆனால் 20 முதல் 40 வயதுள்ள 11 ஆதிவாசி பெண்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். ஊர் மக்கள் அனைவரும் வெளியேறியபின் அந்த ஆதிவாசிப் பெண்களை பாலியஸ் பலாத்காரம் செய்துள்ளனர் காக்கிகள்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post