2050 -என்னவாகும்



நாமெல்லாரும் இறந்த காலத்தை பற்றித்தான் தினமும் பேசிக்கொண்டிருக்கிறோம் ஏனெனில் எதிர்காலம் நிச்சயமற்றது என்பதால்தான் ஆனால் சிட்பண்ட கம்பெனி காரன் முதல் கிளிசோசிய காரன் வரை அல்லது வைஸ் வர்சாவா எடுத்து கிட்டோம்னாலும்.

எல்லாரும் எதிர்காலத்தை வியாபாரம் செய்கிறார்கள் அல்லது அதை சொல்லி நம்பிக்கை ஊட்டுகிறார்கள்.
காலம் இருக்கும் வரை இடம் இருக்கும் காலமும் இடமும் பிரிக்க முடியாதவை – இந்த பூமி எப்போது வந்தது அந்த முதல் செகண்டு காலம் ஆரம்பிக்கிறது .
உலகம் எப்போது அழிகிறது அப்போது இந்த காலம் முடிகிறது.
சரி அனாதி கோடி ஆண்டுகளில் நமக்கு முன்னே 2050 என்ற ஆண்டு வரப்போகிறது அல்லவா அப்போது என்ன முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கலாம் 










1.காலை எழுந்தவுடன் கம்யூட்டர் முன்பு உக்கார்ந்து உங்களுக்கு வந்த கனவுகளை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

கனவுகளை நனவாக்கும் நிபுணர்கள் தெருவுக்கு தெரு இருப்பார்கள் அவர்களுக்கு அனுப்பி விட்டு வேலையை பார்க்கலாம்.

2.இந்த நிறத்தில் இன்ன கலரில் பெண் வேண்டும் என்று கான்பிகிரேசன் பையன் கொடுத்தால் பெண்ணும் , பையன் கொடுத்தால் பையனும் கிடைப்பார்கள் . சிகப்பு கலரில் அதிகம் பேர் பெண் கேட்பது போய் கருப்பு கலரில் பெண் கேட்பது நடக்கும் .டைவர்ஸ் கேஸ்கள் எதுவுமே இல்லை என்பதால் நிறைய கோர்ட்டுகள் மூடப்படும்  

3.விண்வெளியில் முதல் குழந்தை பிறந்திருக்கும்

4.விண்வெளிக்கு செல்வதற்கு விண்வெளி டூரிசம் இப்போ பேமஸ் ஆகி இருக்கும் சிறு முதலாளிகள் பெரிய முதலாளிகளாகி விண்வெளிக்கு போய் கம்யூனிஸ்டுகளிடம் இருந்து தப்பிக்க ஏதேனும் இடம் கிடைக்குமா என பார்க்க துவங்கி இருப்பார்கள் . சந்திரனில் ஹோட்டலில் சாப்பிட மாத தவணை திட்டம் துவக்கி இருப்பார்கள் .

5.அதிகம் பேர் 150 வயதை தாண்டி வாழ்வதால் இந்திய அரசு ரிடையர்மெண்ட் காலத்தை 125 க்கு தள்ளி போடும் . அனைத்து துறைகளும்கம்யூட்டர் மயமாகி விட்டதால் இந்த தாத்தாக்கள் வீட்டில் இருந்தே வேலைகளை செய்வார்கள்

6.இயற்கையான பட்டாம் பூச்சிகள் சிட்டு குருவிகள் செத்து இனம் அழிந்து போனதால் எலெக்ரானிக்கில் பறக்கும் வண்ணத்து பூச்சிகள் நகரத்தின் தெருக்கள் எங்கும் நிறைந்து கிடக்கும்.

7. 3D பிரிண்டரில் மனிதன் தோல் தயாரிக்கும் நிலை வந்துவிடும்
தலையில் முடி உதிர்ந்தவர்களுக்கு திரும்ப முடிவளரும் புது தோல் போர்த்தி வழுக்கை இல்லாத சமூகமாக இருக்கும்

8.பறக்கும் கார்கள் வந்திருக்கும்

9.முதலாளி தொழிலாளி பிரச்சனைகள் முற்றி மீண்டும் உலக நாடுகள் பலவற்றில் சோசலிசம் பிறந்திருக்கும்

10.முழுக்க முழுக்க சீனாவில் இருந்து மட்டுமே அரிசியை நாம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போம் 1 மூடை அரிசி சுமார் 10 ஆயிரம் விற்கப்படும்

11. நெல் அரிசி ,ஆகியவை இந்தியாவில் விளைந்த இடங்கள் காட்சிக்கு வைக்கப்படும்இதை விடவும் அதிகமான முன்னேற்றங்கள் வந்திருக்கலாம் .  (சோறு மற்றும் உணவு பொருட்களின் முக்கியத்துவம் குறைந்து சிறிய மாத்திரைகளை மட்டும் முழுங்கினால் தேவையான கார்போ ஹைட்ரேட் புரோட்டின் விட்டமீன்களம் கிடைக்கலாம்) 

ஆனால் ஒருத்தனை ஒருத்தன் கெடுத்து பிழைத்தலும் இணையத்தில் தூற்றலும் , வசைகளும் மலிந்திருக்கும்.

மனித மனதின் அன்பு வற்றி போயிருக்கும் . வாழ்க்கை சாதனங்களை தேடி ஓடும் வாழ்வில் அண்ணன் தம்பி – குடும்பம் என்கிற நிலைமைகள் எல்லாம்கனவாகி இருக்கும் .

இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்தலே பெரிய சுமை என பேசுபவர்கள் அதிகமாக ஆரம்பிப்பார்கள் எனவே மேலே சொன்ன செல்லுலாய்ட் பொம்மைகளுடன் வாழ தொடங்குவார்கள் .

மரணம் தள்ளி போவதால் வாழ்க்கை வெறுத்த தற்கொலைகள் மிகுந்திருக்கும்.

12.பறக்கும் தட்டு பற்றிய ஆராய்ச்சிகள் குறிப்பிட்ட நிலையை அடைந்திருக்கும் என நம்பலாம் , வேற்று கிரக வாசிகளின் தொடர் சிக்னல் கண்டறியபட்டு அவர்கள் தொடர்பில் இருப்பார்கள்

எய்ட்ஸ் நோய் போன்றவற்றிக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் கண்டுபிடிக்காதா நோயே மிக குறைந்த அளவில் இருக்கும்
------------------------------------------------------------------------------------------------------



வேற்றுக்கிரகவாசிகளை விரைவில் தொடர்புகொள்வோம், ஏரியா 51 கட்டுக்கதை. – NASA அதிகாரியின் தகவல்

நாசா விண் ஆராய்ச்சி மைய முக்கியமான நிர்வாகி ( Charles Bolden ) ஒருவர் மாணவருடனான கலந்துரையாடலின் போது சில முக்கியமான விடையங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
10 வயது மாணவன் “வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா ?” என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், வேற்றுக்கிரக வாசிகளை மிக விரைவில் தொடர்புகொள்வோம் என உறுதிப்படுத்தினார். சூரிய குடும்பத்தில் இல்லாவிடினும் அண்மையில் உள்ள கலக்‌ஷிகளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அதிகம் என கூறினார். 2018 இல் பாவணைக்கு நிறுவப்படவுள்ள James Webb telescope இன் உதவியுடன் அடுத்த 20-30 ஆண்டுகளுக்குள் நிச்சயம் வேற்றுக்கிரக வாசிகளை அடையாளம் காணமுடியும் என்றார். ( இச்சாதனம் வேற்று கிரகங்களில் இருக்கும் வளி மண்டலத்தை உண்ணிப்பாக அவதானிக்க உதவும்.)
ஏரியா51 எனப்படும் அமெரிக்காவின் (மெக்‌ஷிகோ எல்லை) உயர் கட்டுப்பாட்டு மர்ம பகுதி பற்றி கேட்ட போது, அங்கு தான் எந்த வித வேற்றுகிரக வாசிகளின் தடையங்களையோ பறக்கும் தட்டுக்களையோ காணவில்லை எனவும் அது சோதனைக்கான களம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.
ஆனால், ஏரியா51 பகுதியில் பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக 1951 ஆம் ஆண்டில் இருந்து அங்கு வேலை பார்த்தவர்களால் தகவல் கசிகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------

13.  பேப்பரில் எழுதப்படும் புத்தகங்கள் குறைந்து இணைய புத்தகங்களே எங்கும் இலவசமாக கிடைக்கும் ஒரு  சில ஆதர்களை தவிர அனைத்து புத்தகங்களும் இலவசமாக கிடைக்கும்.

14.கற்றல் என்பது முழுக்க முழுக்க மாறி போய் மனப்பாடம் செய்வது நிறுத்தப்பட்டிருக்கும் - கற்றல் என்பது புரிதல் என பொருள் படவே பரீட்சைகள் நடத்தப்படும் - உதாரணமாக கணிதம் என்பது ஒரு பார்முலாவை உருவாக்கும் திறன்  என புரிந்து கொள்ளப்பட்டு புதிய பார்முலா உருவாக்குபவர்களுக்கு
பட்டம் வழங்கப்படும் .தற்போது இருப்பது போல  பார்முலாவை மனப்பாடம் செய்பவர்கள் இருக்க மாட்டார்கள் .
ஆசிரியர் மாணவர் உறவு முறை அதிகார தொணியில் இருக்காது நட்பு கலந்து இருக்கும் .

15.பல்கலை கழகங்கள்  இணையத்தின் மூலமே நடத்தப்படும் இணைய வழி கற்றல் ஊக்குவிக்கப்படுவதால் அனேக பணத்தை கொண்டு போய் காலேஜ் களில் தவம் கிடப்பது குறைந்துவிடும்

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post