பிரிவு


நனைந்தபடி நான் அமர்ந்திருந்த
மேசைக்கு அருகே
மெல்ல சென்றது
அந்த இசை- நீ
எங்கிருந்தாலும்
என்னை காண்கிறாய் என்பதைதானே 
அது எழுதியது
எப்போதும்
எனது  தியானத்தை
கலைப்பவள்தானே நீ 
உன்னை  சில நேரங்களில்
எனது  தியானமும் தேடுது

உன் வளை கொண்டையில்
இருந்து அன்று விழுந்த  பூக்கள்
இன்னும்  பெருமையடித்து
கொண்டிருக்கின்றன
காய்ந்து சருகாகியும்.

ஏதேனும் காரணங்களை
தேடி வைத்திருக்கிறேன்
உன்னுடன் சண்டையிட,
வந்தவுடன்
நீதானே ஆரம்பிக்கிறாய்!
வழக்கம் போலவே
நிலவும் நானும்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post