| அவனை நீங்கள் பார்த்திருக்கலாம் | ||||
| மதுரை நகரின் மத்திய வீதியில் | ||||
| திருவிழா காலங்களில் | ||||
| சுடும் வெயில் நேரங்களில் | ||||
| சட்டை போடாது உடம்பு | ||||
| சட்டை செய்யாத மனிதன் அவன் | ||||
| இன்சூர் இல்லை சோறும் இல்லை | ||||
| கிடைக்கும் பழைய சோறு புளித்திருக்கும் | ||||
| கடைவாயில் ஒட்டி கொண்டிருக்கும் | ||||
| சோற்று பருக்கை | ||||
| கண்களில் கனவு வாய் அதை | ||||
| சொல்லி கொண்டே இருக்கும் | ||||
| ஜபம் என்று நினைத்தேன் | ||||
| என்ன மந்திரம் நண்பா | ||||
| ஒரு பாக்கெட் சோறு கொடு | ||||
| சரி என்ன மந்திரம் | ||||
| சோறு தராதை தறுதலை போடா? | ||||
| உன் சொந்த ஊர் எது | ||||
| தெரியலை | ||||
| நீ ஏன் பிச்சை எடுக்கிறாய் | ||||
| ஆழமான பார்வை என்னை நோக்கியது | ||||
| கேள்விகள் முடியும் போதெல்லாம் | ||||
| முனுக்கிறது வாய் சோறு | ||||
| அவனுக்கு மோடியை தெரியாது | ||||
| மோடிக்கும் அவனை தெரியாது | ||||
| அவனுக்கு பஜக தெரியாது | ||||
| அவனும் இந்துதான் | ||||
| நீண்ட சடைமுடி முகம் நிறைய | ||||
| முடியும் அவன் ரிசியல்ல | ||||
| கிளீன் இந்தியா மோடியிடம் | ||||
| நண்பனை பற்றி சொல்லுங்கள் | ||||
Tags
கவிதை

