அண்ணாச்சி கடை பக்தி பாடல்

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
அண்ணாச்சி கடையினிலே சந்தனம் மணக்குது

என்ன மணக்குது கடையில் என்ன மணக்குது
கல்லா மணக்குது அண்ணாச்சி கல்லாமணக்குது

சுரண்டி சுரண்டி சேர்த்த காசில் மணமும் கமழுது
சுரண்டிலின் வடிவத்தில் வாழ்வும் மணக்குது

நேச சக்தியை நினைக்கும் போது நெஞ்சம் மணக்குது
எதிரி சக்தி மேல தான் கோபம் பிறக்குது


விவசாயியை சுரண்டுவதால் வாழ்வு மணக்குது
விவசாயியை சுரண்டுவதால் வாழ்வு மணக்குது
பேசாமல் திரும்பி வர தலையும் குனியுது


புரட்சிகர அரசியலின் நாத்தம் அடிக்குது -வீர
வெள்ளையனை கண்டுவிட்டால் உள்ளம் குளிரிது


புரட்டுகளை சொல்ல உள்ளம் ஆசை கொள்ளுது
புரட்டுகளை சொல்ல உள்ளம் ஆசை கொள்ளுது
புரட்டி புரட்சி பேசுவதால் குழப்பம் மிஞ்சுது

போராட்டத்தின் களத்தினிலே பவனி வருகிறார்
வெள்ளையன் பொதுவுடமை படைக்கவுமே
ஆசை கொள்கிறார் .

போதாத காலம் வந்து புரட்டி எடுக்குது
புரட்சிகர நேசத்தினால் புயலும் விலகுது

அண்ணாச்சி கடையிலே சுரண்டல் இல்லைப்பா
அண்ணாச்சி தானப்பா நேசசக்தியப்பா
நேச சக்தியப்பா நேச சக்தியப்பா


(கட்சியின் செயல்தந்திர நடவடிக்கையை காப்பாத்த வேண்டி கட்சியின் நேச சக்தியை காப்பாத்த
ஒரு பாமர மக இக தொண்டன் எழுதிய பாடல் இது )

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post