ஞானிக்கு பதில்

ஒரு விஞ்ஞானியை விமர்சிக்க குறைந்தளவாவது விஞ்ஞான அடிப்படை தரவுகள் இல்லாமல் ஒரு ஜோசியகாரரின் மனநிலைக்கு சென்று விமர்சிக்கும் ஞானியை போன்ற மத்தியதரவர்க்க குட்டி பூர்சுவா அறிவாளிகளால் நமது சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை :இவரது கட்டுரையில் இன்னும் நான் விமர்சிக்காத பகுதிகள் இருக்கிறது அவை தொடர்ந்து வரும்
-------------------
//நான் உங்கள் ரசிகன் அல்ல. விமர்சகன். “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று உங்களை சில வாரம் முன்னால் இதே பக்கங்களில் கோரியிருந்தேன். நீங்கள் கேட்கவில்லை. உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தைச் செய்திருக்கிறீர்கள். கூடங்குளம் அணு உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று! அணுத் தொழில்நுட்பம் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று எந்த அணு விஞ்ஞானியும் சொல்லமாட்டார். நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அணு ஆயுத, ராணுவ ஆதரவாளரான நீங்கள் அணு உலைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் விருப்பப்படி உதயகுமாரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயத் தயாராக இருக்கிறது.
//

அப்துல்கலாம் அணுவிஞ்ஞானி இல்லை சரி நீங்கள் என்ன விஞ்ஞானி நீங்கள் எழுதிவிட்டால் அனைவரும் கேட்டுவிடனும் என எதிர்பார்பதுதப்பில்லை அப்படி நீங்க என்னவிதமான விஞ்ஞான ஆராய்ச்சியோடு எழுதி இருக்கீங்க



//அணு உலைகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களோ நாங்களோ ஒருபோதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாங்கள் காந்திய வாதிகள். அதுதான் நமக்குள் அடிப்படை வித்தியாசம். நீங்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைக் கட்டுரையில் பல முழு உண்மைகளை மறைக்கிறீர்கள். பல அரை உண்மைகளை அள்ளி வீசுகிறீர்கள். ஒவ்வொன்றாகப் பார்த்தால் இடம் போதாது. முடிந்த வரை இங்கே பார்ப்போம்.//

காந்தியவாதிகளின் சமூக முன்னேற்ற எண்ணங்களை உலகம் பார்த்துகொண்டுதான் இருக்கிறது அதில் ஒன்று
நீங்களோ உதயகுமாரோ பாதுகாப்பு காரணங்களை காட்டி கூடங்குளத்தை மூடச்சொல்லும் அதே வேளையில் வளர்ந்து வரும் மின்சார தேவைகளுக்கு மாற்று வழியை முன்வைக்கவில்லை இதுதான் உங்கள் நேர்மையா ஞானி

//செர்னோபில் விபத்தில் 57 பேர் மட்டுமே இறந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதைவிட அதிகமாக சாலை விபத்தில் பலர் சாவதாக ஓர் அபத்தமான ஒப்பீடு செய்திருக்கிறீர்கள். சாலைவிபத்து ஏற்பட்டால், விமான, ரயில் விபத்து ஏற்பட்டால், சுற்றிலும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனித நடமாட்டமே அடுத்த பல வருடங்களுக்குக் கூடாது என்ற நிலைமை கிடையாது. ஆனால் அணு விபத்து ஏற்பட்டால், அடுத்த தலைமுறை வரை தொடரும். செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட கதிரியக்கப் பாதிப்புகளில் இரண்டாயிரம் பேர் வரை செத்திருக்கிறார்கள் என்பதுதானே முழு உண்மை. அதை ஏன் சொல்லாமல் கேன்சர் கேஸ்கள் என்று //

செர்னோபில் விபத்தில் 57 பேருக்கு மேல் செத்தார்கள் என்பது உங்களின் கற்பனை ஞானி 2000 பேர் என்றோ இன்னும் சிலர் சொல்வதுபோல் 2 லட்சம் பேர் என்றோ சொல்வது அப்பாவிகளான கூடங்குளம் மக்களை குழப்ப மிகவும் உதவும்



//மழுப்புகிறீர்கள்? 1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கைச் சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ.டி. என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் (நீங்கள் படித்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. அல்ல) 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.//


ஓகோ இப்போ ஜோசியம் வேறு சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா ஞானி கணிப்பு மிகவும் பலமானதாக இருக்கே


//விபத்து மட்டுமல்ல. அணு உலைகள் இயங்கும் இடங்களிலெல்லாம் கதிரியக்க ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பவர் நீங்களும் உங்கள் கும்பலும் மட்டும்தான். அமெரிக்காவின் அணு உலைகள் இயங்கும் 65 இடங்களிலும் ரத்த, மூளைப் புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்பாக்கத்தைச் சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த உங்கள் அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை?இந்தியாவில் அணு உலைகளில் விபத்தே நடப்பதில்லை என்று இன்னொரு பொய் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியிடாமல் ரகசியமாக அல்லவா அணு சக்தி நிர்வாகம் இதுவரை இருக்கிறது? அதுவேதான் நிர்வாகம், அதுவேதான் கண்காணிக்கும் உயர் அமைப்பு. குற்றவாளியே நீதிபதியாகவும் இருக்கும் வேறு எந்தத் துறையும் இந்தியாவில் இல்லை. ஒரு விபத்து நடந்து அதுபற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பிய பின்னர் ஒப்புக்கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1987- எரி பொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்குக் கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 - கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்று வெளிச்சூழலில் கலந்தது. 2003 - கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள். ராஜஸ்தான் உலையில் 1991ல் கதிரியக்கம் உள்ள கனநீரைத் தவறாக ஒரு காண்ட்ராக்டர் பெயிண்ட் அடிக்கக் கலந்தார். அதிலேயே பெயிண்டர்கள் முகம் கழுவினார்கள். கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள். கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 120 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது.இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான்.
//

கதிரியக்க ஆபத்து இல்லாமல் மனித இனம் ஒரு வினாடி கூட கடக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா ஞானி அய்யா


//அணுசக்தித் துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் ‘நெருக்கமான உறவினால்’ டிஸைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. இதே போன்ற ஊழல் இந்த வருடம் ஜூலையில் ரஷ்யாவில் நடந்தது. லெனின்கிராடில் அணு உலை கட்டுமானம் நடக்கும்போது தடுப்புக் கவச சுவர் கான்க்ரீட் நொறுங்கி விழுந்தது. இந்த உலை கூடங்குளத்தில் ரஷ்யர்கள் அமைக்கும் உலையின் அடுத்த மாடல். ஊழல் மிகுந்த இந்தியாவில் எப்படி அணு உலை கட்டுமானம் பாதுகாப்பானது என்று நம்பமுடியும்?இந்தியாவில் போதுமான யுரேனியம் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அது என்னவோ இலவம்பஞ்சு போல ஆபத்தில்லாமல் எட்டிப் பறிக்கும் பொருள் போல பேசுகிறீர்கள். யுரேனிய சுரங்க விபத்து, ஆபத்து பற்றி எதையும் உங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோடா யுரேனிய சுரங்கப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில், மலட்டுத்தன்மை, புற்று நோய், பிறவி ஊனம் எல்லாம் தேசிய சராசரியை விட அதிகமாகியிருப்பதை நோபல் பரிசு பெற்ற உலக அமைப்பான அணுப்போருக்கு எதிரான மருத்துவர் அமைப்பின் இந்தியக் கிளையின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.//

ருஸ்யாவின் விபத்துக்கு காரணம் மனித தவறு அதை விடுத்து அந்த கட்டுமானத்தில் காண்டிராக் இருந்தது என சொல்வது முழு பொய் ஏனெனில் அப்போது அந்த தொழில் எல்லாம் காண்டிராக்ட் இல்லை

10 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post