தூய்மையான போராட்டமும் வினவு சொல்லும் போராட்டமும்

பாபா ராம்தேவ் கைது செய்யப்பட்டதும் துள்ளி குதிப்பவர்கள் பலர்
அதில் ஒரு குரூப் இந்த தீவிர இடதுசாரிகளான வினவு பக்தர்கள்தான்

அன்னா ஹசாரேவோ , பாபா ராம்தேவோ வைத்த கோரிக்கைகளை விட
தனிமனிதர்களாக அவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்கிற கேள்விக்கே மைய்யமாக பதிலை எதிர்பார்ப்பது என்பது சரியானதே
அதற்கு பாபா ராம்தேவும் , அன்னா ஹசாரேவும் பதிலளிக்க உண்மையில் கடமை பட்டவர்கள் அல்லது தனக்கு கிடைக்கும் பணம்
குறித்து சரியான கணக்குகள் இல்லாமல் இருப்பின் அவர்கள் சிறைக்கு
செல்லவேண்டும் இதில் மாறுபட்ட கருத்து இல்லை நம்மிடம்

அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து காங்கிரசுக்கு அல்லது போலி கம்யூனிஸ்டுகளுக்கு அல்லது காடுகளில் வாழும் மக்களுக்குகாக மட்டுமே
கட்சி நடத்தும் நக்சல்பாரிகளுக்கு என்னபதில் இருக்கிறது என்பதே கேள்வி

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பலமில்லியன் டாலர்களோ அல்லது டிரிலியன் டாலர்களோ அதை சம்பாதிக்க இந்த அரசியல்வாதிகள் செய்த சதிகளோ நாட்டில் இருக்கும் ஜனநாயகத்தை அந்த பணத்தை வைத்துதான் வலைக்கிறார்கள் என்பது குறித்தோ எந்த அக்கரையும் காட்டாத காங்கிரஸ் உட்பட சுரண்டி திண்ணும் கும்பலுக்கு தனக்கு எதிரான எந்த போராட்டத்தின் மீதும் கோபமும் வெறுப்பும் வருவதை போல ; தான் செய்யாத எந்த போராட்டமும் போலி என்பதாகவே இந்த்
நக்சல்பாரிகளின் கொதிப்பு வெடித்து எழுகிறது.


இவர்கள் வாதப்படியே ஊழல் இருக்கு ஆனால் பாபா போராட கூடாது அல்லது போராட தகுதி இல்லை என்பதாக்வே வைத்து கொள்வோம்
அன்னாவும் பாபாவும் அதற்கு தகுதியானவர்கள் இல்லை போராட்ட
பள்ளி கூடத்தின் வாசலில் நுழையாமல் அவர்களை தடுத்து நிறுத்தலாம்
இதே கோரிக்கைக்காக மாவோயிஸ்டுகளோ காங்கிரசோ போலி கம்யூனிஸ்டுகளோ ஏன் இந்திய அளவில் போராட கூடாது .

கட்டுரைகளை பெரிது பெரிதாக எழுதி நாங்கள் கட்டுரை எழுத பணம் உதவி செய்யுங்கள் என கேட்பது மட்டும்தான் தங்களது அஜெண்டா என்றால் கேட்பவர்கள் சிரிப்பார்கள்

முன்பு அரசு ஊழியர்களை ஜெயா அரசு அடக்கி ஒடுக்குகையில் இந்த சமூகம் முழுக்க என்ன சொன்னது அரசு ஊழியன் செய்யும் சேட்டைக்கு
இது தேவைதான் என்றது ?

அப்போது துண்டு பிரசுரம் வெளியிட்டார்கள் சங்கமாக திரட்டபட்ட ஊழியர்களே இப்படி என்றால் எந்த சங்கமாகவும் திரட்டபடாத பொதுமக்களின் கதி என்னாகும் என்று
அதே கேள்வியே திருப்பி கேட்கிறேன்

அன்னா ஹசாரே , பாபா ராம் தேவ் மாதிரியான உங்கள் பாசையில்
மழுங்கடிக்கும் கந்துடைப்பு போராட்டத்துக்கே இந்த கதி என்றால் நீங்கள்
சொல்லும் சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை எப்படி ஒடுக்கும் நினைத்து பாருங்கள்

இந்த இடத்தில் ஒடுக்கும் அரசுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட நீங்கள் தவறியதான் அதை - சாமியாரும் காந்தியாரும் செய்கிறார்கள்

மக்களை மழுங்கடிக்க பாபா போராட்டத்தை நடத்த வேண்டியதில்லை
ஒரு பஜனை நடத்தினால் போதும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

ஆக இந்தியாவில் தன்னெழுச்சியாக எழும் மக்களின் உணர்வுகளை கூட
புரிந்து கொள்ளாத நீங்கள் ஒட்டு மொத்த போராட்டமோ புரட்சியோ
பேப்பரில் அல்லது இணையத்தில் மட்டும் எழுதி நடத்துவீர்கள்



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

9 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post