நண்பனின் நூல் வெளியீடு

எளிமையான மனிதன் பாசமிகு படைப்பாளி

மெல்லிய உணர்வுகளை தூவிடும் மழை
எனது நண்பன் நிலாரசிகன்

அவரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு

அனைவரையும் அழைக்கிறேன்
------------------------------------------------------
சுட்டி:http://www.nilaraseeganonline.com/2010/12/blog-post_09.html


முன் கவிதைச்சுருக்கம்:

ஒரு நீண்ட பயணத்தின் துவக்கம் சில வருடங்களுக்கு முன்பு துவங்கியது. சிற்றிதழொன்றில் படித்த கவிதையொன்றின் வரிகள் உயிரெங்கும் வியாபித்து என்னை ஆட்கொண்டு நர்த்தனமாடிக்கொண்டிருந்த நேரம்...அவ்வரிகளை எழுதிய கவிஞனுடன் பேச வேண்டும்  என்கிற ஆவலில் தொடர்புகொண்டபோது கவிதை குறித்து அவன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் புதியதொரு பரிணாமத்தை உணர வைத்தது. அவன் சி.வெங்கடேஷ். அதன் பிறகு அவன் மூலமாக அறிமுகமான கவிஞர்.க.அம்சப்ரியா,மு.ஷரிகிருஷ்ணன் வழியே பல கவிதை நூல்களும் கவிதை பற்றிய விவாதங்களும் என்னை வந்தடைந்தன.புதியதொரு கவிதையுலகத்தின் சாளரத்தை திறந்துவிட்ட இம்மூவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.குறிப்பாக நவீன கவிதை குறித்த பல கேள்விகளுக்கு சளைக்காமல் "புன்னகை"யுடன் பதிலிட்ட அம்சப்ரியாவிற்கு எப்போதும் என் அன்பும் நட்பும். மற்றும் நட்சத்திரங்களாய் என் வானம் நிறைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், இந்நூலை சாத்தியப்படுத்திய அன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

இணையத்தால் இணைந்த இதய நண்பர்களுக்கு,

இம்மாதம் 26ம் தேதி  என் கவிதை தொகுப்பு "வெயில் தின்ற மழை" வெளியாகிறது. உயிர்மை பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. தமிழின் முக்கிய/முன்னணி இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நட்புடன்,
நிலாரசிகன்.
nilaraseegan@gmail.com


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post