மொக்கை பதிவர்களுக்கு ஒரு பாடல்


மொக்கை இல்லாத உலகத்திலே
நிம்மதி இல்லை
உன் பதிவில்லாத உலகத்திலே
சிந்தனை இல்லை சிந்தனை இல்லை

இணையத்திலே பவனிவந்தால்
கண்ணுறங்கவில்லை
உன் பதிவை கண்ட நாள் முதலாய்
கணினி மூடலை கணினி மூடலை


உன் பதிவை பார்ப்பதற்கே
கணினி வந்தது
பின்னூட்டம்  போடவென்றே
கை துடித்தது
பதிவர்மனம் உனக்கெனவே
காத்திருக்குது  இந்த கணினி
தாண்டி நாடி உனை
தேடி ஓடுது தேடி ஓடுது

மொக்கை யென தெரிந்துமுன்னை
படித்து வைத்தேனே
மொக்கையாக பின்னூட்டமும்
போட்டு வைத்தேனே

இன்று நாளை என்று நானும்
காத்திருக்கிறேன்
என்று நீயும் நிறுத்துவாயோ
உன் பதிவை உன் பதிவை
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post