நான் யார்

நான் யார் என்பதை விளக்குவதில் ஒன்றும் புதிதாக
நான் உங்களுக்கு சொல்லிவிட முடியாதென நினைக்கிறேன்

நான் யார் என்பதை தெரிந்து கொண்டு உங்களுக்கு
ஆகப்போவது ஒன்றுமில்லை என கருதுகிறேன்

நான் எனது பெயர் எனது புகைப்படம்
எனது பிறந்த நாள் எனது குடும்பம் இதையெல்லாம்
சொல்வதன் அவசியம் அதிகம் இல்லை என
கருதுகிறேன்.

நான் யார் என்பதை விளக்கி எழுதும்
பதிவுகளை படித்துபின் நான் எழுத
ஆரம்பித்தது நான் யார் என்ற கேள்விக்கு
விடை

கேள்வியை திருப்பி போடுங்கள்
ஒரு பசித்த வயிற்காவது ஒரு வேளை
சோறு போடாத நான் யார்

சக மனிதனது கஸ்டத்தில் ஒரு சிறிதாவது
வாங்கி கொள்ளாத நான் யார்

ஒடுக்கப்படும் மனிதனுக்காக குரல்
கொடுக்காத நான் யார்

சமூகத்தின் அவலங்களில் முகம்கொடுக்காத
ஒரு முகத்தை தூக்கி நிறுத்தும் பதிவராகிய
நான் யார்

இதை போன்ற கேள்விகளை எழுப்பி
விடை கண்டால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்


தியாகு
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post