நேர்மையற்றவர்கள் வாழ்த்தும் செம்மொழி

கொத்து கொத்தாய்
கொல்லப்பட்டான் தமிழன்
பாதிப்பில்லை
தமிழ்  வளர்ந்தது

ஏறுது அய்யா விலைவாசி
பெட்ரோல் டீசலால்
மக்கள் வறுமை மறந்து
அன்னை தமிழ்
அவள் பாட்டுக்கிருப்பாள்

இந்த காலத்திலே தமிழன்
சிறுமை படுகிறானே
அதனாலென்ன
சங்ககாலத்தை பார் !

காட்டி கொடுத்தவனும்
கூட்டி கொடுத்தவனும்
வாழ்த்தலாமா
தூய தமிழ் பொறுத்து கொள்ளும்

சிலம்பை உடைத்து
நீதி கேட்ட கண்ணகி
மதுரையை எரித்தாளே


நீதியை கேட்டவுடன்
நெடுஞ்சாண்கிடையாக
விழுந்து உயிர்விடுவாரா?
கேட்பவனின்
எலும்பை உடைத்து
உள்ளே தள்ளுவார்
அமைதி முக்கியம்!

ஆம் அரசு அன்றும்
கொல்லும் நின்றும்
கொல்லும் கொல்வது
மட்டும் நிற்காது

தமிழ் வளர்ச்சிக்கு
பாடுபடுகிறார்கள்
டமில் பேசும் நல்லவர்கள்
அரைக்கால் டவுசருடன்

தலைவன் தூங்க மாட்டான்
எட்டு தலைமுறைக்கு
சொத்து சேர்க்காமல்
அவனுக்கு தமிழ்
தூங்கிடகூடாது
இன்னும் நாலு
தலைமுறைக்கு

அவனுக்கென்ன
புளிச்ச ஏப்பத்தில்
தமிழ் வளர்ப்பான்
ஆங்கிலம் வளப்பான்
பிரெஞ்சும் வளர்ப்பான்

தமிழன் பாவம்
முப்பது ரூபாய்
சோத்து பொட்டலமும்
போகவர ஆயிரமும்
போதுமென போய்விட்டான்
கலை கட்டியது மாநாடு !








--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

6 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post