பாஸ்வேடு திருடுபவருக்கு ஒரு பகிரங்க கடிதம்

கொஞ்ச நாளைக்கு முன் நீங்கள் ஒரு போலி தளத்தை உபயோகித்து பாஸ்வேடுகளை ஆட்டைய போட்டதை
அறிந்தேன் .

இதன் மூலம் பலர் பல சமயங்களில் பலருடன் பேசிய உரையாடலை எடுத்து அடுத்தவருக்கு அனுப்பி மகிழ்ந்தீர்கள் . நல்லது

இதனால் என்ன ஆகிவிட போகிறது .  என்னை பற்றி மற்றவர்கள் எதோ  ஒரு சந்தர்பத்தில்

எதோ சொல்லி இருக்கலாம் (அட திட்டியே இருக்கட்டுமே )அதை இப்போது  எனக்கு கொடுக்கிறீர்கள்.

ஆனால் அது ஆறிப்போன பழைய கஞ்சி .   அதே போல நான் மற்றவர்கள் பற்றி பல்வேறு சந்தர்பங்களில் சொன்னதை

அவர்களுக்கு அனுப்பி இருக்கலாம்   இதனால் அவர்களுக்கு என்ன நன்மை ?

அல்லது எனக்குத்தான் என்ன நஸ்டம்

உங்களுக்கு ஒரு தளம் ஆரம்பித்து அடுத்தவர்களின்

ரகசியங்களை அறியும் ஆற்றலும் மூளையும் இருக்கும்
போது அதை ஏன் ஆக்கப்பணிகளில் ஈடுபடுத்த கூடாது.

என்ன ஆக்கபணின்னு கேட்றீங்களா அது சரிதான்

மேலும் தமிழ் சமூகத்துக்கு நானும் நீங்களும் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஓராயிரம் இருக்கும் போது
இதென்ன சின்ன புள்ளத்தனமா இருக்கு .

மீண்டும் யோசியுங்கள் வாழும் காலத்திலும்

வாழ்க்கைக்கு பிறகும் நாம் நம்மை பற்றிய

நல்ல விசயங்களையே விட்டு செல்ல வேண்டும் என
நான் நினைக்கிறேன் .

(வந்துட்டார்டா கருத்து கந்தசாமின்னு நினைக்கிறீங்களா :)

நான் கூவி செல்லுவேன் என்னை குயிலென்ரு நினைத்தாலும் சரி

காக்கை என்று நினைத்தாலும் சரி




--
தியாகு

-
மாறுதல் என்ற வார்த்தையை தவிர அனைத்தும்
மாற்றத்துக்கு உட்பட்டவை -மார்க்ஸ்

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post