எங்கள் போராட்டம் சைவமாக இருக்காது -சுவாமி பிரணவானந்தா


இந்த சாமியாரை நான் 90 ஆண்டு முதலே அறிவேன்
ராமகிருஸ்ணகுடில் என்ற பெயரில் இராமேஸ்வரத்தில்
மடம் அமைத்து இருக்கும் இவர் யாருக்கும் தெரியாத
ஒரு குட்டி சாமியார்.

இவரது கோபத்துக்கு காரணம் இராமர் பாலமோ அல்லது இலட்சுமனர் பாலமோ அல்ல .

கடற்கரை ஒட்டி இருக்கும் ஒரு சின்ன கோவில்
சேது கால்வாய் திட்டத்தால் உடைபடும் என்பதால்
இந்த வார ஜூவியில் .

நாங்கள் தீவிரவாதிகளாய் மாறூவோம் என மார்த்தட்டுகிறார்.

 இராமகிருஸ்ண மடம் என்ற அமைப்பு
விவேகானந்தரால் ஏற்படுத்தபட்டது அதன் தலைமை
இடம் கல்கத்தா .
அதன் கிளை எதுவும் இராமேஸ்வரத்தில் இல்லை.

பொதுவாகவே இராமகிருஷ்ணமடம் எந்த அரசியல் சர்ச்சையிலும் ஈடுபடாது,

அது சுதந்திர போராட்டம் என்றாலும் சரிதான்
அது இராமர் கோவில் விவகாரம் என்றாலும் சரிதான்.

அப்படி இருக்கையில் இராமகிருஸ்ணர் குடில் என பேர் வைத்து இயங்கும் இந்த மாதிரி குட்டி குட்டி சாமியார்கள்

அரசியல் சர்ச்சையில் ஈடுபடுவது ஏன் என்றால்
வேற ஒன்னும் இல்லைங்க வசூல் வேட்டை நடத்தத்தான் .
எப்படியாவது இந்தியா பூராவும் தன் பெயர் தெரிந்து விடாதா எனும் ஏக்கத்தில் .

இராமர் பால புழுதியில் பெயர் வாங்கவும் வயிறு வளர்க்கவும் கிளம்பி விட்டார்.

பாலியெஸ்டர் துணியில் காவி ஜிப்பா போட்டு
பந்தாவாக நடந்து கொள்ளும் சாமியார்களினால்.

ஆன்மீக வாதி என்ற அடிப்படையில் இராமகிருஸ்ண மடங்களுக்கும் கெட்ட பேர்தான்.

பிரணவாநந்தா இராமர் பாலத்தில் குதித்து உயிர் விடுவே ன் என சொல்லி இருக்கார் .

அவ்வாறு அவர் செய்தால் நாட்டுக்கு நல்லது.

அதை உடனே செய்யும்படி கேட்டுகொள்கிறேன்.

இராமர் பிரச்சனையை பேசி பேசி அதைவைத்து ஓட்டாக்கும் சில்லரை வேலையில் ஈடுபடும் வடநாட்டு
சாமியார்களின் அவபெயரை போல இந்த சாமியாரும்
பெரும் அவபெயரை சம்பாதித்து தரபோகிறார்.

இராமகிருஷ் மடம் ,மிசன் மற்றும் இராமகிருஸ்ண தபோவனம் ஆகியவை பல மக்கள் சேவையிலும்
கல்வி சேவையிலும் ஈடுபட்டு வருகின்றன .
அவற்றிற்கு இவர் போன்ற சாமியார்களால் கெட்டபெயர்தான் என சொல்லிக்கிறேன் .
 

 

 

 

 


--
தியாகு
=============================
"

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post