காயத்திரி மந்திரம் -பிராமணர்களின் தந்திரம்

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
I பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத் II

இந்த மந்திரம் சொன்னா உங்க வீட்டில் உள்ள கஸ்டங்கள் போயிடும் என்றும் ,இந்த மந்திரம் 108 முறை சொல்லலும் 1008 முறை சொல்லனும்னு
ஒரு குரூப்பு அதாங்க பார்பனர்கள் சொல்லி கொண்டு திரிகிறார்களே
தெரியுமா உங்களுக்கு ?

ஆகா கடும் உழைப்பால் தினம் தோரும் சுருண்டு விழும் பாட்டாளிக்கு
ஒரு அருமையான மருந்து கிடைத்துவிட்டதே என அகமகிழ்ந்தது மனது?

கைவண்டி இழுப்பவன் ,
கட்டையை பிளப்பவன் ,
சாக்கடை அள்ளும் சகோதரன் ,
வேகாத வெயிலில் தார் ரோட்டை போடுபவன் எல்லாரும்
இனிமேல் சொல்லலாம் காயத்திரி என சொல்லிடலாம் என நினைத்தேன்.

சரி இந்த மந்திரம் இத்தனை ஆண்டுகளாக எங்கே இருந்தது
இந்த மொழி தேவ பாசை அல்லவா எப்படி சாதாரண சாக்கடை அள்ளுபவனுக்கு தர தயாரானார்கள் ?

ஆம் சாமி சாமி என தங்களை அழைத்தகாலத்துக்கு போக நினைக்கிறார்கள்
அவர்களிடம் இருந்தது எதுவோ எதை இத்தனை நாள் மறைத்தார்களோ
அதை வெளிக்கொணர்ந்தால் அது நடக்கும் என நினைக்கிறார்கள்

"பாருங்கள் எங்களிடம் மோசமான வருணாசிரம தர்மம் மட்டும் இல்லை
இதோ எங்களிடம் மனித குல விடுதலைக்கான வேதங்கள் மந்திரங்கள் இருக்கு "

என வெளிப்படையாக சொல்ல துடிக்கிறார்கள்

ஆனால் அந்த சகோதரன் நம்ப மறுக்கிறான் .
அவனோ சூடுகண்ட பூனை தன்னை கோவிலுக்குள் விடாத இந்த குடுமிகள்
என்ன திடீரென நமக்கு மந்திரம் கத்து கொடுக்கு வந்துவிட்டார்கள்.

அவனால் இவர்களை நம்ப முடியவில்லை .

நம்ப முடியாதவாறு ஈரோட்டு கிழவனும் அந்த அம்பேத்கரும் செய்து விட்டார்கள் .தாங்கள் வைத்துள்ள பொக்கிசங்களை இனிமேல் இவர்கள் என்ன செய்வார்கள் .

கடாவெட்டி சோறு தின்னும் மனிதனின் நாக்கில் "ஷ" வராது என சொல்லி
இத்தனை நாள் இருந்தார்களே இனிமேல் இவன் நாக்கை எப்படி வளைப்பார்கள். பாவம் இவர்களது நிலமை உங்களுக்கு ஏதெனும் யோசனை இருந்தால் இவர்களுக்கு சொல்லுங்கள்.

19 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post