சில கவித்துளிகள்

காதலால் ஏமாறு

மிக பெரிய பள்ளத்தில்
விழுந்தபோதெல்லாம்
நினைப்பேன் தூக்கிவிட
நீ இருப்பாய் யென
தள்ளிவிட்டவர்களில்
நீ இருப்பதாக சொன்னான்
ஒரு வன்!

இதயத்தை தொலை

இதயம் ஒரு இடத்தில்
விற்க படுவதாக சொன்னார்கள்
சென்றுபார்த்தேன்
நல்லதொரு இதயம்
விற்பனைக்கு என்ற
வாசகத்துடன் நீ என்
இதயத்துடன்
நின்று கொண்டு இருக்கிறாய்

நிழலும் சொன்னது

அந்த மரத்தின் நிழல் கூட
மறக்கவில்லையாம்
நீ அளித்த
உறுதி மொழியும்
நீ கொடுத்த மறுப்பும்
தாளாமல்
மரத்தடிக்கே வருவதில்லையாம்

தூது

காதலை உன்னிடம் சொல்ல
வந்த தேனீக்களிடம் கேட்டேன்
தேனை பற்றி மட்டும் நீ வெகு
நேரம் பேசிகொண்டு இருந்ததாக
சொன்னது !

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post