பாதிக்கபட்டவர்களின் அழைப்பு -மோதி மிதித்துவிடு பாப்பா

நான் இரண்டு பதிவுகளில் சொன்ன அந்த குழுமத்தின் அதிகார போக்கினால்
பாதிக்கப்பட்ட பலர் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார்கள்
அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .

பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியுமே என சொன்ன அவர்கள்
தாங்கள் எவ்வாறெல்லாம் மனம் புண்படுத்த பட்டோம் என சொல்லியதுடன்
ஆனால் இன்னும் அங்கு இருப்பவர்கள் புரிந்து கொள்ள வில்லையே\
என வருத்தப்பட்டார்கள்.

எனக்கு ஒரே ஆச்சரியம் - என் பதிவுக்கு உண்மையில் தொலைபேசி மூலம்
எதிர்ப்புகிளம்பும் என எதிர்பார்த்தேன் ஆனால் . அன்பும் ஆசிர்வாதமும்
கிடைப்பதை கண்டவுடன் "நாம் செய்தது சரிதான் " என்ற முடிவுக்கு வந்தேன்

பாதகம் செய்பவரை கண்டால்
பயம்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா -

பாரதி

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post