மழைநாளில் இந்தியா

இலைகளின் மீது
இருக்கும் மழை இனிமேல்தான்
வழியும் சொட்டு சொட்டாக
ரோடுகளை கழுவிவிட்டபின்
தெருவோரமாய் காத்திருக்கும்
வேலைகாரன் !
ஆறிபோன இட்லியின்
ஆவியை அதிசயிக்கும்
ஆயாவின் கடை !
கால்சட்டைகளில்
ஓட்டையை கைகளால்
மறைத்தபடி காகிதகப்பல் விடும்
சிறுவன் !
இலைகள் காய்ந்தபின்னும்
மிச்சமிருக்கும்
இந்தியாவில் மழை

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post