தம்பிக்கு ஒரு பாட்டு


????????.???? - Tamil Blogs Portal

தம்பிக்கு ஒரு பாட்டு

கோமாளியாக இருந்துவிட்டால்
உலகம் உன்னை ரசிக்கும்!
ஏமாளியாக இருந்துவந்தால்
எதுக்கும் உன்னை அழைக்கும்!

கையேந்தி காசுகேட்டால்
பிச்சைஇட்டு நகைக்கும்!
கத்தியேந்தி காசுகேட்டால்
வணக்கங்சொல்லி மதிக்கும்!

உள்ளதெல்லாம் சொல்லிபுட்டா
ஊரே கூடி சிரிக்கும்!
கள்ளமெலாம் கற்றவனை-பெரிய
மனிதன் என்று துதிக்கும்!

வயித்தை மட்டம் வச்சி்வாழும்
உலகம் இதுடா
தம்பி
மனச மட்டும் பாத்துகிட்டு
நடையை போடு
எம்பி!


-தியாகு

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post