உனது கேள்விகள்

உருகி உருகி நீங்கள்
எழுதும் கவிதைகள்
என்னை பற்றிதானேஎன்கிறாய் - மரமே
காற்றில் ஆடும்போதும்
ஆடாத இலைபோலானேன்

இந்த புடவைகள்
என்னை நினைத்துதான்
வாங்கினீர்களா?என்கிறாய்

எந்த விசாரனையும்
இன்றிசுடபட்டகைதியானேன்

அலுவலகத்தில்
எத்தனை முறை
என்னைநினைப்பீர்கள்

புரிந்துகொள்உனது
எல்லாகேள்விகளுக்கும்
என்னிடம் பதிலில்லை
என்பதை

-தியாகு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post