தாயா நீ

மனிதன் செத்ததை பார்த்ததுண்டு
மானுடம் செத்ததை பார்த்ததுண்டா
குப்பை தொட்டியில் குழந்தை!

பிறந்த உடனே வாழ்வு மறுக்கப்பட்டால் -அந்த
பிஞ்சு குழந்தை என்ன செய்யும்
எறியப்பட்ட குழந்தையின் பறிக்கப்பட்ட உரிமை - உயிர்!

பெத்த பிள்ளையை தூக்கிஎறிந்தபின்
பூமியில் இருந்துநீஎன்ன செய்ய
பொறுக்காத பூமித்தாயும்
பூகம்பமாய் அதிர்ந்து அழுகிறாளோ!
மானுடம் செத்தபின் மண்ணில்
மனிதன் வாழ்ந்துதான்என்ன பயன்!

நட்புடன்
தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post