கவிதையும் கதையும்

கவிதையும் கதையும்
கவிதைஎழுத தொடங்கி
கதைஎழுதி முடித்தேன்-
கதைஎழுத விளைந்தால்
நல்கவிதை ஒன்று வருமோ!

கவிதைஎன்பது நட்பானால்
கதைஎன்பது காதலாகும்
கவிதைதானே தொடக்கம்
ஏனோ சிறிய தயக்கம்!

நட்பைஎன்ன செய்தாலும்
காதலாக மாறாது -
காதல் வந்தபின்னாலே
நட்பு நடமாட முடியாது!

நட்பும் காதலும் எப்போதும்
மொட்டும் மலரும் போலல்ல
நட்பு பூத்து வளர்ந்தாலும்
காதல் என்பது கிடையாது
காதல் என்பது நட்பையே
கருவாய் கொள்ள இயலாது!

கவிதைஎன்பது மலர்களிலே
நறுமணம் வீசும் மலராகும்
சோலையில் நடக்கும் போதினிலெ
சுகந்தம் வீசும் குணமுடைத்து!

கதைதான் வாழ்வின் பதிவுகளாம்
கதையது இல்லா வாழ்வதுதான்
தடமெதுமில்லா பதையது
தடமெதுமில்லா பாதையிலே
தடையின்றி பயணம் தொடராது!

அன்புடன்
தியாகு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post