உன்னை நினைத்துவிட்ட நெஞ்சம்

உயர்ந்த மரங்களினடியில்
உட்கார்ந்து பேசிய காலங்களில்
பாடும் பாடல்கள் உன்னைப்பற்றியும்
பாடுவது நானாகவும் எண்ணிக் கொண்ட
நேரங்களில் காதலை சொல்லாமல்
விட்டதருணங்களை நீ அறிவாயா?

மலர்கள் மலர்வது வண்டுக்குதெரியும் -என்
மனம் மலர்ந்ததை நீ அறிவாயா?
அர்ச்சிக்கப்பட்ட மலர்களும்
பேசப்பட்ட வார்த்தைகளும்
உதிர்ந்துவிட்ட இலைகளும்
புலர்ந்து விட்ட பொழுதுகளும்-திரும்ப
நிகழ்வதில்லை-உன்னை
நினைத்துவிட்டநெஞ்சும்தான்!

உனக்கென்ன பார்த்துவிட்டாய்-உன்
பார்வையின் கனம் தெரியுமா உனக்கு!
கண்களை பார்க்கும் பெண்களை
கைது செய்யுங்கள்!
காதலை மறப்பது தண்டனைக்குரிய குற்றம்!

அன்புடன்
தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post