போதுமான காரணங்கள் இருக்கிறது மாநாட்டை புறக்கணிக்க

கடந்த ஆண்டு மேமாதம் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொடூர கொலை செய்யப்பட்டார்கள் .

ஹிட்லர், முசோலினியை மிஞ்சிய ஒரு கொடூரன் இந்த ராஜப்க்சே என தெரியும் நமகெல்லாம் இந்த கொலைகாரனுக்கு ஆயுதமும் ஐடியாவும் கொடுத்தவர்கள் இந்திய ஆளும் வர்க்கம், அந்த இந்திய ஆளும் வர்க்கத்தை கண்டிக்காமல் ஆதரவை வாபஸ் வாங்காதது மட்டுமல்ல,சுயமாக எழுந்த மக்களின் போராட்டங்கள் , மாணவர்களின் போராட்டங்கள் , முத்துகுமார் தீக்குளிப்பு இதையெல்லாம் முனைமழுங்கடித்த பெருமை தற்போதைய முதல்வர் கருணாநிதியை சாரும் .

கொலை செய்தவன் அவனுக்கு ஆயுதம் கொடுத்தவன் அவனுக்கு துணைபோனவன் எல்லாரும் குற்றவாளிகளே .

தனி ஒரு மனித கொலைக்கே இங்கு ஆயிரம் விசாரணைகள் , ஆயிரம் கேள்விகள் எழும்போது நமது இனம் அங்கே மொத்தமாக அழிக்கப்பட்டு இருக்கிறது .
அதே நேரத்தில் உலகமே இந்த இழிச்செயலை வன்மையாக கண்டித்து ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்த போது எதிராக வாக்களித்து மீண்டும் இலங்கையை காப்பாற்றியது இந்தியா என்றால்


இந்திய திரைபட கலைவிழாவை இலங்கையில் நடத்தி
பாருங்க இலங்கை கலைக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு உன்னதமான ஆட்சி நடத்தும் நாடுன்னு புளுக முயற்சித்தது.

இதை தடுக்க போராடிய சீமான், நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களை நாம் நிச்சயம் பாராட்டனும் .

மார்க்சியம் பேசும் புரட்சிவாதிகள் இதையெல்லாம் தங்களது போராட்ட செயல்திட்டத்தில் வைக்கவில்லை (அவர்களுக்கு லீனாவுடன் சண்டை போடவே நேரம் பத்தவில்லை)

போலி கம்யூனிஸ்டுகளோ இன்னமும் தனி ஈழ கோரிக்கையை
நிராகரிப்பதோடு தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை .

இப்படி ஒரு பிழைப்புவாத போக்கு நாடெங்கும் விரவி கிடக்கிறது .

பல்வேறு அரசியல் போலி நிலைபாடுகளால் தமிழனுக்கு மாபெரும்
துரோகம் நாளும் இழைக்கப்பட்டு வருகிறது ,

பிடிபட்ட போராளிகளை கத்தியால் கிழித்தே கொல்லும் போட்டோக்கள்
விடயோக்கள் நாளும் வந்தவண்ணம் இருக்கிறது .

இதையெல்லாம் ஒரு செய்தியாக தூக்கி எரிந்துவிட்டு நம்மை கோவையில்
நடக்கும் செம்மொழி மாநாட்டுக்கு அழைக்கிறார் கலைஞர்.

கலைஞரோ திரைகதை வசனம் எழுதியதை விட போரின் உச்சத்தில் போரை நிறுத்த சொல்லி ஒரு உண்ணா விரதம் இருந்து அவரது நடிப்பாற்றலை சிறப்பா காமிச்சுட்டார் .

(திமுக ஆதரவு பயலுகளுக்கு கொஞ்சமாவது நெஞ்சில் ஈரமிருந்தா
இந்த மாநாட்டுக்கு போகமாட்டார்கள்)

இப்ப சிறந்த தமிழ் ஆர்வலரா, தமிழ் மொழி காவலரா காட்ட
உங்களுக்கு இந்த மாநாடு தேவை படுகிறது .


இந்த கொலை கும்பலின் இன,மொழி ,திரைப்பட விழாக்களை
நிராகரிப்பதற்கு மிக அதிகமான காரணங்கள் இருக்கின்றன.

இந்த ஞானி போன்ற டவுசர் பாண்டிகளின் பேச்சை எந்த தமிழனும்
கேட்க வேண்டாம்.

தமிழனை அழித்தவனை எந்த காரணம் முன்னிட்டும் அவர்கள்
நடத்தும் விழாக்களில் பங்கேற்று ஊக்குவிக்க கூடாது .

தமிழனை தவிர்த்து தமிழ் எங்கே இருக்கும் ,
தமிழனை தவித்து சினிமா எங்கே இருக்கு

தமிழ் கொலையை மறைக்க நடக்கும் இந்த மாநாடுகளை
தமிழ் உணர்வாளர்கள் கண்டிப்பா புறக்கணிக்கனும்,

இலங்கை படுகொலைக்கு இங்கிருந்து என்ன செய்யமுடியும் என கேட்டவர்களே ;

இங்கே நடக்கும் அந்த பாதகர்களின் செயல்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள் . துணைபோகாதீர்கள்.

தொடர்புடைய சுட்டிகள்
http://tamilthesiyam.blogspot.com/2010/05/blog-post_2056.html


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

10 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post