ஜெயராம் வீட்டை நொறுக்கும் இனவாதம் சரியா

எல்லா பக்கமும் இருந்து தமிழினம் வஞ்சிக்கப்படுகிறது , ஈழத்தில் தமிழன் தாக்கப்படுகிறான் காவிரிநீர் மறுக்கப்படுகிறது ,முல்லைபெரியாரு பிரச்சனை நீள்கிறது, பாலாற்றில் குறுக்கே அணை என எங்கும் தமிழினத்திற்கு பாதகமே நடக்கிறது ,தமிழன் அவனது தனித்துவ வாழ்வை பெற இந்தியாவில் இருந்து துண்டித்துகொள்ள புரட்சி செய்ய வேண்டும் என்பது தமிழினவாதிகளின்
கொள்கை.

நாம் தமிழர் இயக்கத்தின் கொள்கையோ அதெல்லாம் இல்லை தமிழனை தாக்கினால் நாங்கள் திருப்பி தாக்குவோம் மொட்டையான இனவாதம் கோடம்பாக்கத்தில் இருந்து சிந்தித்த சீமானின் தம்பிகளின் கொளுகை இது.

தமிழன் தாக்கப்படுவதிலோ , வஞ்சிக்கப்படுவதிலோ இவர்களுடன் எனக்கு கருத்து வேற்றுமை இல்லை . இன துவேசம்தான் தீர்வு எல்லா பிரச்சனைக்கும் என்பதுதான் உடன்பாடு இல்லை .

இதே இனவாதத்தை ராஜ்தாக்கரே மராட்டியத்தில் பேசுகிறார் மும்பை எங்களுக்குத்தான் சொந்தம் என்று மும்பையில் சுமார் 5 லஞ்சம் தமிழர்கள் நாளை அடித்து துரத்தப்பட்டால் சீமான் என்ன சொல்வார் ஒன்றுபட்ட இந்தியாவை காப்போம் என்றா ?
இங்குள்ள மராட்டியர்களை அடித்து துரத்துவோம் என்றா எல்லா பிரச்சனைக்கும்
அடித்து பதில் சொல்தல் தீர்வல்ல தீவிர இனவாதமும் தீர்வல்ல?

ஜெயராம் நல்ல தீணிபோட்டார் இந்த கும்பலுக்கு, ஈழபிரச்சனையில் ஜெயா மாமிக்கு கூசா தூக்கிய கும்பல் நாலுபக்கம் அடிபட்டு அங்கே தமிழன் செத்த பிறகு
ஜெயாவுக்கு ஓட்டு போடுங்கள் போரை நிறுத்துகிறோம் என சொல்லி மக்கள்
ஓட்டு போடாததால் இலங்கை படுகொலை நடந்ததாக சொல்லி திரியும்
இவர்கள் அடுத்து எடுத்துள்ள இன போராட்டம் செயராமுக்கு எதிரான போராட்டம்

"ஜெயராம் தமிழ் பெண்களை புண்படுத்தும் விதமாக ஏசியா நெட்டுக்கு பேட்டியளித்தார் இனமான தமிழச்சியை எருமைமாதிரின்னுட்டார் என கோபம் கொண்ட நாம் தமிழர் தம்பிகள் செய்த வேலை நேராக ஜெயராம் வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்களை ஆபாசமாக பேசி அவர் வாங்கி மாட்டி வைத்து இருந்த மெடல்களை உடைத்து போட்டதுதான்.

ஜெயராம் அன்று மதியம் மன்னிப்பு கேட்டார் டிவியில் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கதறினார் அவர் வாங்கிய மெடல்களை அடித்து உடைத்தது மனபாதிப்பை ஏற்படுத்தியதாக சொன்னார் .

அவர் சொன்னது சரி என்று சொல்லவில்லை அவர் நிச்சயமாக பொறுப்போடு பேசி இருக்கனும் ஆனால் நாம் செய்தது என்ன( நாம்தமிழர் தம்பிகள் செய்தது என்ன? வீட்டை நொருக்கி பெண்களை ஆபாசமாக பேசுவது) இது சரியா?

நோக்கம் சரியாக இருந்துவிட்டால் போது வழிமுறைகள் பற்றி கவலை இல்லை
எனும் கும்பல் தமிழினத்தை காப்பதாக கருதி வீடு பூந்து அடித்து உடைத்துவிட்டது

இப்போது ஜெயராம் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்ன செய்ய போகிறீர்கள்
வீட்டில் இருக்கும் சாமான்களை திருப்பி தந்து மன்னிப்பு கேட்டக் போகிறீர்களா?

பேசிட்டு மன்னிச்சுகோன்ன்னுட்டா சரியா போயிடுத்தா உடைச்சதுதான்
சரின்னு சொல்ல போறீங்களா?

ஏன் செயராம் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி இருக்கலாம் ?
வன்முறையை தவிர்த்து எதிர்ப்பை தெரிவித்து இருக்கலாம்
எத்தனையோ போராட்ட முறைகள் இருக்கே

வீட்டுக்குள்ள பூந்து அடிக்கனும்னா " அன்று ஈழத்தமிழனுக்காக உண்ணாவிரதம்
இருக்கிறேன்னு கிளம்பியவர் / தனி ஈழம் தீர்வுன்னு ஓட்டுக்கு முழங்கிட்டு
தேர்தல் முடிந்தவுடன் கண்டுக்காம விட்டவர்கள் / இன்னும் எத்தனையோ
இன துரோகிகள் இருக்கிறார்களே . வீடு பூந்து அடிக்க வேண்டியதுதானே .
மலையாள படங்களுக்கிடையே பிட்டை ஓட்டுதல் ,சேச்சிகளின் டீக்கடையில்

காட்டி கேலி செய்தல் என இங்குள்ள தமிழின இயக்குனர்களும்
தமிழன் என்றால் கரியை பூசிகொண்டு வந்து காமெடி செய்தல்

பாண்டி என அழைத்து கேலி செய்தல் என அவர்களும் பல்வேறு
தவறுகளை செய்து வந்தாலும் அந்த மக்களோடு அன்றாடம் நமது
வாழ்க்கை பிணைந்து கிடப்பதை அறிகிறீர்களா நமது வீட்டருகே

அலுவலகத்தில் என நிறைந்து கிடக்கும் மலையாள நண்பர்களிடம்
நாம் நாகரீகமானவர்கள் என இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா
நிரூபிக்க.

செயராம் எனும் தனிமனிதன் செய்த தவறை இனவிரோதமாக்கி
ஆதாயம் காண நினைக்கும் வன்முறை மனிதர்களே
நீங்கள் அல்லது உங்களை போன்ற இன வெறியர்கள் பத்த வைச்ச
தீதான் இன்றுவரை இலங்கையில் தமிழனை அழித்து கொண்டு இருக்கிறது

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post