தேசிய இனபிரச்சனையில் அருணபாரதியுடன் விவாதம்

தோழர் அருணபாரதி இணையத்தில் அறிமுகமானவர் அவருடன் நடத்திய உரையாடலை விவாதத்துக்காக அவரின் அனுமதி பெற்று இங்கு பதிகிறேன் -தியாகு


me
: எந்த முரண்பாடுகள் முதன்மையானது தோழர் வர்க்க முரண்பாடா இன முரன்பாடா
அருணபாரதி: ஓர் இனம் தன்னைத் தானே ஆளக்கூடிய உரிமையல்லாத எல்லா இடத்திலும், அவர்களை ஒடுக்கக்கூடியவர்களிடத்திலிருந்து பிறக்கும் இன முரண்பாடே முதன்மை முரண்பாடு...
ஓர் இனம் தன்னைத் தானே ஆளக்கூடிய ஒர் தேசிய அரசில், அம்மக்களுக்கும் அவர்களை ஒடுக்கும் தேசிய முதலாளிகளுக்குமான வர்க்க முரண்பாடே முதன்மை முரண்பாடு..
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து தில்லியால் ஒடுக்கப்படுவதால் ஆரியப் பார்ப்பனிய இந்து மதவெறி இந்திய அரசுக்கும், தமிழ்த் தேசிய இனத்திற்குமான இன முரண்பாடே முதன்மையானது...
அதே போல், ஈழத்தமிழர்களை ஒடுக்கும் சிங்கள அரசுக்கும் ஈழத்தமிழர்களுக்குமான முதன்மை முரண்பாடும், இனமே ஆகும்..
புரிகின்றதா,..?
me: ம்ம் ஆகவே இனவிடுதலைக்குத்தான் முதலில் போராடனுமா அதற்கு வர்க்க போராட்டம் அடுத்த கட்டமா அப்படியெனில் எப்போ வர்க்க போராட்டம் நடத்துவது
அருணபாரதி: முதலில் உங்களுக்கென ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதியை உருவாக்குங்கள்.. அந்நாட்டில் உள்ள தேசிய அரசை, அரசு என்ற ஒடுக்குமுறைக் கருவியைக் கைப்பற்றுங்கள்..
அதை விடுத்துவிட்டு, எல்லையே இல்லாத ஓர் பகுதியில், முதலில் யாரை யாரையெல்லாம் திரட்டி புரட்சி நடத்துவீர்கள்..?
கேரளமும், கன்னடமும், ஆந்திரமும் என்றைக்காவது தமிழகத்தைப் போல தில்லி எதிர்ப்புக் கருத்தியலைக் கொண்டிருந்ததா..?
ஆரிய மொழியான சமஸ்கிருதத்துடன் மட்டுமல்லஆரிய இந்தியத் தேசியத்துடனும் சமரசம் கொண்ட அவர்கள் நம்மோடு இணைந்து போராட முதலில் முன் வருவார்களா...?
தமிழ்நாட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும் என சொல்லும் தமிழரல்லாத ஒரு இந்தியத் தேசியரை எங்காவது நீங்கள் கண்டதுண்டா..?கேரளப் பாட்டாளி வர்க்கமும், தமிழ்த் தேசியப் பாட்டாளி வர்க்கமும், இன்னபிற பாட்டாளி வர்க்கங்களும் இணைந்து இந்திய முதலாளிகளை முறியடிக்க வேண்டும் என்கிற இந்தியப் புரட்சிக்கு, இன்றைய சூழ்நிலையில் ஏதேனும் சாத்தியமிருக்கிறதா...?
கேரளாவில் உள்ளப் பாட்டாளி வர்க்கம் எவ்வளவு புரட்சிகரமானதாக இருந்தாலும், முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமை சரி தான் என்று அறிவிக்குமா..me: ம்ம்
அறிவிக்காது
அருணபாரதி: சேகுவேரா வழிவந்த கியுபா, சாவேஸ், மாவோ வழிவந்த சீனா என வர்க்கப் புரட்சி வெற்றி பெற்ற எல்லா பொதுவுடைமை நாடுகளும் அவரவர் சொந்த நலனில் அக்கறை காட்டி சர்வதேசியத்தை அழித்துவிட்ட பிறகு, புதிய பாட்டாளி வர்க்க சர்வதேசியம் தோற்றம் பெற வேண்டிய அவசியம் உள்ளது..
me: அப்போ பொதுப்படையான் இராணுவமும் பொது அரசாங்கமும் கொண்டிருக்கும் இந்திய அரசை துண்டு துண்டாக இருக்கும் புரட்சிகர சக்திகல் இணைந்து எப்படி எதிர்க்க முடியும்
அருணபாரதி: அதற்கு இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒர் இனமாவது தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற தீர்க்கமாக போராடி, மற்ற இனங்களை அத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும்..
me: இந்திய தேசிய புரட்சியின் மூலம் இந்திய அரசை தூக்கி எறிய வேண்டாமா
அருணபாரதி: தமிழ்த் தேசியப் பாட்டாளி வர்க்கம் இதற்குத் தயார்...
ஆனால், மற்ற தேசிய இனங்களில் யார் இதற்கு தயார்..?
அவர்கள் தயராகி வரும் வரை நாம் இந்தியத் தேசிய அரசின் இன ஒடுக்குமுறையை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமா..?
நல்லாயிருக்கிறது ஞாயம்..
தமிழ்நாட்டில் ஓரளவு தற்பொழுது மெல்ல எழுந்துள்ள இந்தியத் தேசிய எதிர்ப்பு நிலை, காசுமீர், மணிப்புர், அசாம், மிசோரம் தவிர வேறு எந்த மாநிலத்திலாவது எழுந்திருக்கிறதா..?
முதலில் அதனை எழச் செய்யுங்கள்..
கேரளாவிலும் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும், மகாராட்டிரத்திலும் முதலில் இந்தியப் புரட்சிக்கான விதையை விதையுங்கள்..
தமிழ்நாட்டில் ஏற்கெனவே புரட்சித் தேவை என்ற உணர்வு எழுந்து விட்டது..
தமிழ்நாடு மட்டுமே விடுதலை பெற வேண்டுமென புரட்சியை முன்னெடுக்கும் பொழுது தான் கேரளம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் புரட்சிக்கான ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழும்பி, ஒருவேளை சாத்தியப்பட்டால் அதுவே இந்திய புரட்சிக்கு இட்டு செல்லும்..
me: ம்ம்
அருணபாரதி: ஆனால், வெறும் தமிழ்த் தேசியப் புரட்சியை மட்டுமே குறை கூறிக் கொண்டிருந்தால், நீங்கள் நம்பியிருக்கும், கனவுகாணும், இந்திய புரட்சிக்கும் அது ஆப்பு வைக்கும்..
me: ம்ம்
அருணபாரதி: தமிழ் இனம் மற்றும் அனைத்துப் பிற இனங்களின் சுயநிர்ணய உரிமைகளையும் மதிக்கும், அதற்கு மதிப்பளிக்கும் இந்திய அரசு என்பது சாத்தியமே இல்லை..
அதனை வரலாற்றில் பின்னால் தான் நீங்கள் உணர்வீர்கள்..
தமிழகத்தைத் தவிர வேறு எங்குமே இவ்வாறான புரட்சிகர சக்திகளை வளர்த்தெடுக்காமல் இது சாத்தியப்படாது..
முதலில் அதற்கான முன்முயற்சியை எடுங்கள்..
me: ரச்யா போன்ற நாடுகலில் நடந்த புரட்சி இப்படித்தான் தனிதனியாக நடந்ததா
அருணபாரதி: இந்தியாவில் தற்பொழுது இருக்கும் நிலை ரசியாவில் அன்று இல்லை..
அருணபாரதி: ரசியா மன்னராட்சியின் கீழ் ஒன்றுபட்டிருந்த நேரத்தில், அங்குள்ள பல்வேறு இன மக்களும் இணைந்து போராடுவதற்கான ஒரே இயக்கமாக லெனினின் இயக்கம் வளர்ந்திருந்தது..?
இந்தியாவில் அது போன்ற இயக்கத்தை கட்டி எழுப்புவது சாத்தியமா முதலில்...?
me: அத்தகைய ஒரு இயக்கத்தை நாம் இந்ஹியாவில் கட்ட முடியாமைக்கு என்ன காரணம்
அருணபாரதி: முல்லைப் பெரியாற்றை விட்டு கொடுக்க மறுக்கும் மலையாளிகளும், காவிரியை மறுக்கும் கர்நாடகமும், நமக்கு எதிரிகளல்ல.. அவர்களை தூண்டி விட்டு தேசிய இனங்களின் புரட்சிகர சக்திகளை இணைந்து விடாமல் தடுக்கும் இந்திய ஆரிய இனவெறி அரசே இதற்கு முதல் எதிரி..
மலையாளிகள் உள்ளிட்ட இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களும், தமிழர்களுக்கும் வேறுபாடு உள்ளது..
தமிழர்கள் இத்துணைக் கண்டத்தின் மூத்தக் குடிமக்கள்..
தமிழர் அல்லாத அனைத்து இனங்களும் ஆரிய இனத்துடன் சமரசம் செய்து கொண்ட இனக்குடும்பங்கள்..
இது அடிப்படை..
me: ம்ம்
அருணபாரதி: இந்திய அரசு ஆரியப் பார்ப்பனர்களின் தலைமையிலான அரசு..
ஆரியத்துடன் சமரசம் கொள்ளாத அரசுகள் மட்டுமே இந்தியாவை எதிர்ப்பது ஏன் என்று யோசிசத்துண்டா..?
தமிழர்கள் தமிழர் மரபினம்..
காசுமீரகள் தனித்த மரபினம்..
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மங்கோலிய மரபினம்..
me: தனிதனி இனமாக இருப்பதால் புரட்சி தனிதனியாத்தான் நடத்த முடியும் என்பது எப்படி சாத்தியம் இல்லை ஏனென்றால் தமிழ்நாட்டில் புரச்சி நடக்கும்போது இந்திய் அரசு அப்படியேதான் இருக்கும் அது எளிதாக தமிழ் நாட்டில் நடக்கும் புரட்சியை நசுக்கும் அல்லவா
அருணபாரதி: கண்டிப்பாக நசுக்கும்.. அப்பொழுது, நமக்காக கேரளமும், கர்நாடகமும் இணைந்து குரல் கொடுக்குமா அல்லது இந்திய அரசுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் நம்மை ஒடுக்குவார்களா..?
me: கேரளாவில் புரட்சிகர பாட்டாளிவர்க்கம் இருக்கிறதா?
அருணபாரதி: உருவாக்க வேண்டும்..
me: அவர்கள் தற்போதைய நிலவரப்படியும் தனியாக புரட்சி செய்யும்போதும் ஒடுக்கத்தான் செய்வார்கள்

அருணபாரதி: ஒரு ஒடுக்கும் அரசு, தன்னிடமுள்ள அடிமை விலகிச் செல்ல முற்படும் போது ஒடுக்காமல், கம்யுட்டர் கீபோர்டையா சொடுக்கிக் கொண்டிருப்பான்..?
ஒடுக்குமுறைகளை வென்று தேசம் படைப்பது தானே பாட்டாளி வர்க்கத்தின் லட்சியம்..
me: கண்டிப்பா ஒடுக்குவான்
புரட்சிகர பாட்டாளி வர்க்கம் உருவானாலும் அது தமிழ் பாட்டாளி வர்கத்தை ஆதரிக்காது என்று எப்படி நீங்கள் முன் முடிவுடன் வருகிறீர்கள்?
அகில இந்திய அளவில் ஒரு புரட்சிகர கட்சியை கட்டாமல் இந்த ஒருங்கினைப்பை எப்படி செய்வது
அருணபாரதி: இந்தியா என்ற கட்டமைப்பை, ஆரியப் பார்ப்பனியபப் புனைவை, தேசியத்தை ஏற்றுக் கொண்ட எவரும் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுக்க மாட்டார்கள்..
இந்தியாவின் போலி விடுதலை எப்படி சாத்தியமானது..?
me: உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்ருதான் மார்க்ச் சொன்னார் உலக இனமே ஒன்று சேர் என சொல்லவில்லையே
அருணபாரதி: அய்யோ.. அய்யோ..
Workers of all Countries Unite..
இது தான் மார்க்சின் முழக்கம்..
me: போலி விடுதலையே இந்தியா பூராவும் குறிப்பிட்ட நிபந்தனையுடன் இந்தியவிடுஹலை எனும் ஒர்ரே குறிக்கோளுடன் மட்டுமே செய்யப்பட்டதை பார்க்கும் போது
அருணபாரதி: இதற்கு தமிழாக்கம், அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பது தான்..
me: இதை உணருகிறீர்களா
அருணபாரதி: மார்க்சின் முழக்கப்படி தமக்கான நாடுகள் உள்ள பாட்டாளி வர்க்கங்கள் இணைவது தான் சர்வதேசியம்..
me: மார்க்ஸ் இனபிரச்சனையை பேசி இருக்கிறாரா
அருணபாரதி: அதிகாரம் கொண்ட நாட்டை பெறாத, தமிழினம் உங்கள் சர்வதேசியத்தில் முதலில் இணைய முடியுமா என்று கூறுங்கள்..
me: பாட்டாளி வர்க்கமாக ஏன் இனைய முடியாது
சுரண்டபடுகிற வர்க்கமாக ஏன் ஒன்றிணைய கூடாது
அருணபாரதி: எங்கு இணைந்திருக்கிறது என்ற காட்டுங்கள் முதலில்..
me: ஏன் இனிமேல் ஒன்றினைக்க முடியாதா
அருணபாரதி: முடியும்...
me: நீங்கள் தான் சொன்னீங்க கேரளாவில் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கனுன் என்று
அதையும் நாம்தானே செய்யனும்
அப்படி இல்லவிட்டால் நடுவழியில் நிற்போம் அல்லவாஅருணபாரதி: ஒன்றிணைக்க முடியும்.. அதற்கான முதல் தேவை, அங்கு பாட்டாளி வர்க்கங்களை எழும்ப செய்வது...
கேரளாவில் அதற்கு வேலை செய்யுங்கள் யார் வேண்டாமெனத் தடுத்தது..?
அருணபாரதி: தமிழ்நாட்டில் மட்டும் அமைப்புக் கட்டிக் கொண்டு அதனை சொல்ல வேண்டாம்..
நாம் தான் அதனை செய்ய வேண்டும் என்று யார் சொன்னது..?
me: கேரளாவில் கட்டினால் என்ன அங்குள்ள கட்சியுடன் இணைத்து கொண்டால் என்ன
அருணபாரதி: முதலில் அந்தந்தப் பாட்டாளி வர்க்கம் பக்கத்துப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைவதற்கான விருப்பத்துடன் இருக்க வேண்டுமே..
கேரளாவில் அது போன்ற பாட்டாளி வர்க்கக் கட்சி, புரட்சிகரமானக் கட்சி எழுந்துவிட்டால், நாம் நிச்சயமாக அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வோம்..
me: ஒரு விசய்ம் என்னவென்றா ல்ஒரு விவாதம் செய்து ஒரு குறிப்பிட்ட நிபந்தனையில் நீங்களும் நாங்களுமே ஒன்ரினைய முடியவில்லை எனில் எப்படி அவர்களை இணைப்பது
எனக்கு என்னமோ தெளிபடுத்தல் ரொம்ப முக்கியமா படுது
அருணபாரதி: ஆனால், அவர்களும் முல்லைப் பெரியாறு எங்களுக்கெ என்று முழக்கமிட்டால் என்ன செய்வீர்கள் அய்யா..?
21:06 me: முல்லை பெரியாறு முல்லை பெரியாறு மொத்த பாட்டாளி வர்க்க புரட்சிக்கும் இதுஹான் முன் நிபந்தனையாகவும் குறுக்காகவும் நிர்கிறது
அருணபாரதி: தோழரே.. நாம் அதற்கான முயற்சிகளை எடுக்கலாமே தவிர.. இதனை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.. அவர்கள் தம் சொந்த தேசிய இனத்திற்கு விடுதலை தேவை என்று உணராத நிலையில், இது எப்படி சாத்தியமாகும்..?
21:07 முல்லைப் பெரியார் ஓர் அணை சிக்கலாக குறுக்கிப் பார்க்காதீர்..
ஓர் உரிமை சிக்கல்..
நமக்கான உரிமையை அவர்கள் மறுப்பதற்கான காரணம் தான் என்ன..?
ஏன் எதிர்க்கிறார்கள்..?
me: இன உரிமையை முன்னிலைப்படுஹ்தாமல் வர்க்க நிலையை முன்னிலைபடுத்தினால்
21:08 அருணபாரதி: முல்லைப் பெரியாற்றின் நீரால் பாசனம் செய்வது தமிழ்நாட்டு விவசாயப் பாட்டாளி வர்க்கம் அல்லாமல் டாடாவும், பிர்லாவுமா பாசனம் செய்கிறான்..? முதலில் இதை சொல்லுங்கள்..
me: வர்க்கமாக திரட்டுவதில் என்ன சிக்கல் இருந்தாலும் அதுவே முதலும் முடிவுமான ஒரு புரட்சியை நோக்கி கொண்டு செலுத்துமா இல்லையா
21:09 அருணபாரதி: நிச்சயமாக.. ஆனால், இணைவது என்ற பெயரில் எம தேசிய இனத்தின் உரிமைகளை எக்காரணம் கொண்டும் எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது..
me: சரிநாளை தொடருகிறேன்
அருணபாரதி: மகிழ்ச்சி..
விவாதம் நன்றாகவே இருந்தது..
நாளை எனக்கு வேலை இருக்குமென நினைக்கிறேன்..
21:10 நானே உங்களை தொடர்பு கொள்கிறேன்..
தொடர்ந்து பேசுவோம்..
me: எப்போ முடியுமோ அப்போ செய்யலாம் அவசரம் இல்லை
சரி
அருணபாரதி: மகிழ்ச்சி..



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

25 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post