மாலா கொடுத்த பூரி



அவளை பற்றி நான் உங்களிடம் சொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை ;ஆனால் என் கெட்டகாலம் உங்களிடம் சொல்ல வேண்டியதாகி போனது.

அவள் பேர் மாலா . இந்த ஆபீசில் நான் மேனேசராக சேர்ந்ததும் மாலாவுக்கு “வதக்கென்று” இருந்திருக்கும் .







ஏற்கனவே மாலாவின் பொறுப்பில் ஆபீசை விட்டிருந்தார்களாம் ,அதனால மாலா வச்சதுதான் சட்டம்.

எல்லாரும் ஏனோ மாலாவிடம் வழிந்து வழிந்து பேசுவார்கள் . குட்டையா கருப்பா இருக்கும் அந்த பெண்ணிடம் அப்படி என்ன இருக்குன்னு நான் ஆச்சரியபட்டு நானும் வழிந்து பேச ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் பூரி சுட்டுவந்து கொடுத்தாள் மாலா? ”அய்யோ ஏன் மாலா உங்களுக்கு சிரமம்” .
”இல்ல சார் வீட்டில் அதிகமாகிடுச்சு அதான் உங்களுக்கு ரெண்டு எடுத்தாந்தேன்” என்றாள்.

வேலையில் படு சூட்டி என்று சொல்ல முடியாட்டினாலும்
”வாயில்” அவள் படுசுட்டு .

எதை கேட்டாலும் ஒரு தக்க பதில் வைத்திருப்பாள்.

மாலாவிடம் எனக்கு என்னபிடித்ததோ இல்லையோ அவளுடைய பேச்சு பிடித்து இருந்தது.
மிக அன்பாக பேசும் மாலா அந்த நிறுவனத்தின் சூட்சுமம் எல்லாம் சொல்லி கொடுத்தாள்.

ஒரு நாள் அவளுடைய பழைய மேனேசரை பற்றி புகழ்ந்து தள்ளி கொண்டு இருந்தாள் .

எனக்கு எப்போதுமே பழைய மேனேசர்களை காரணமில்லாமல் புகழ்வது அல்லது இகழ்வது புடிக்காது என சொல்லிவிட்டேன்.

அடுத்து நான் பழைய கம்பெனிகளில் என்னவெல்லாம் சாதித்தேன் என மாலாவிடம் ஓப்பனாக சொல்ல ஆரம்பித்தேன் .

நமக்குதான் சுயதம்பட்டம் பிடிக்குமே. அவளும் “ ஓ அப்படியாசார்
உங்களுக்கு திறமை அதிகம் சார்” என சும்மா பயங்கரமா புகழ ஆரம்பிச்சா.

ஒரு கட்டத்தில் வேலையே பார்க்காமல் . காலையில் ஒரு புகழ் மாலை
மாலையில் ஒரு புகழ் மாலை போட ஆரம்பித்தாள் மாலா.

“டக்கென்று ”எனது ஏழாம் அறிவு யோசனை செய்து ஆறாம் அறிவுகிட்ட சொன்னது .

வேலை செய்யாமல் ஏமாத்துகிறாள் மாலா கவனம் என்று.

சரின்னு சொல்லி ஒரு சில வேலைகளை சொல்ல ஆரம்பித்தேன் .
ஆனால் நான் வேலை சொல்வதை ஏதோ சுவற்றிடம் பேசுவது போல நடந்துகொள்ள ஆரம்பித்தாள் .
”சார் இந்த கம்பெனிய பொறுத்தவரை – அங்கிருப்பதை இங்க சொல்லனும் , இங்க இருப்பதை அங்க சொல்லனும் டைம் முடிஞ்சா வீட்டுக்கு போகனும், இதான் பாலிசி பாலோ பண்ணிக்கங்க ”என்றாள்.

நமக்கோ வேலையில் அக்கறை இல்லாமல் இருப்பது கொஞ்சமும் பிடிக்காத விசயமாச்சே.
கொஞ்சம் கொஞ்சமாக மாலாவை திருத்த பார்த்தேன் .
முதலில் ”குட்மார்னிங் சார்” சொல்வதை நிறுத்திய மாலா பிறகு
நான் ஒரு ஜீவன் இருப்பதையே கவனிக்காதபோல் வரவும் போகவும் ஆரம்பித்தாள் .

நமது ஈகோ   தலை தூக்க மாலாவுக்கு தொடர்ச்சியா வேலை கொடுக்க ஆரம்பித்தேன்.

ஆனால் பழைய நட்பின் பாதிப்பு கொஞ்சம் கூட இல்லாமல் மாலாவால் எப்படி நடமாட முடிகிறது என்று ஒரே வியப்பு எனக்கு.

வீட்டில் சொன்னால் “உங்களுக்கு இருக்கிற ஆள வச்சி வேல வாங்க தெரியலை” என்கிறாள் மனைவி 
மாலாவுடன் எனது நட்பை புதிபிக்கவோ பேசவோ ஆரம்பித்தால் மறுபடி
வேலை செய்யமாட்டாள் என்பதால் .

நான் முகமூடி அணிந்து கொண்டேன்.

எனது முகமூடி சரி என்கிறேன் நான் ,ஆனால் மாலா என்னை பற்றி
முசுடுன்னு சொல்லி கொண்டு திரிவதாக கேள்வி
ஆகவே நான் முசுடாக இருக்கவே விரும்புகிறேன்.

ஆனால் மாலா கொடுத்த பூரி இன்னும் வத்தி போகாமல் கும்முன்னே இருக்கு மனசில்.

---

இக்கதை பற்றிய குறிப்பு :

என்னோடு கட்சியில் நண்பராக ஒருத்தர் இருந்தார் அவர் நல்லா கதை எழுதுவார் , ஒரு சமயம் எனக்கும் அவருக்கும் உரசல் ஏற்பட்டது ; அதை கதைமூலம் காமிச்சிட்டார் . அப்போதிருந்து எனக்கும் கதைமூலம்
குறிப்பா சொல்லி புரியவைக்கனும்னு ரொம்ப நாள் ஆசை . அதான் இந்த கதை .


1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post