அணு உலைக்கு எதிரான சிபிஎம்மின் பம்மாத்து அரசியல்

அணு  உலைக்கு எதிரான சிபிஎம்மின் பம்மாத்து அரசியல்


கூடங்குளத்தில் அணு உலை திறப்பது கூடாது என உதயகுமார் தலைமையிலான மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது மார்க்சிஸ்ட் கட்சி என்ன சொல்லுது தெரியுமா

அணு உலைகளை எதிர்க்கிறோம் ஆனால் கூடங்குளத்தில் நிறுவ இருக்கும் அணு உலைகளை அல்லன்னு ஒரு போடு போட்டது இறக்குமதி அணு உலைகள் ஆகாது

அப்படின்னு இந்த கட்டுரை சொல்லுது

http://www.tncpim.org/content/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D
/கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகளை கொண்டு துவங்கப்பட உள்ள அணுமின் திட்டத்தை மூட வேண்டும் என்ற கருத்தை கட்சி ஏன் ஆதரிக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு அணு உலைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் வேறு மாதிரியான தன்மை கொண்டதாகும். அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பே ரஷ்யாவிலிருந்து இந்த இரண்டு அணு உலைகளும் வாங்கப்பட்டுவிட்டன. ஒட்டுமொத்த ரூ.15 ஆயிரம் கோடி செலவில் இரண்டு அணு உலைகளை நிறுவுவதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. இந்த இரண்டு அணு உலைகளையும் மூட வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமானதும் அல்ல. நாட்டு நலனுக்கும் உகந்ததும் அல்ல. ஜெய்தாப்பூர் மற்றும் இதர அணு உலை பூங்காக்கள் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேறுபட்ட நிலையை எடுப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர். இந்தியாவுக்கு அணு மின் திட்டமே கூடாது மற்றும் இந்தியாவில் அணு உலைகளை நிறுவக்கூடாது என்று வலியுறுத்துவோர் தரப்பிலிருந்து இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.//

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட கூடாது என்பது மட்டும்தான் நிலைபாடா ? அதுவே ரஸ்யாவுடன் அணுசக்தி ஒப்ந்தம் போடலாமா ?

ஏற்கனவே ஒப்பந்தம் போட பட்டுவிட்டால் விட்டு விடலாம் என்பதுதான் இவர்கள் நிலைபாடு

உண்மையில் இவர்களது கட்டுரையின் தலைப்புக்கும் உள்ளே இருக்கிற விசயங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை

அடுத்து இன்னொரு பல்டி

//1960ல் அமெரிக்கா அளித்த இரண்டு மின் உலைகளை கொண்டு இயங்கி வரும் தாராப்பூர் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து கடுமையான அச்சம் உள்ளது. புகுஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலைகளை விட இந்த அணு உலைகள் மிகவும் பழமையானவை. புகுஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலைகளின் அனுபவம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். புகுஷிமா விபத்திற்கு பிறகு இந்த அணு உலைகள் மூடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். //

நம்பிக்கை தெரிவித்தால் எல்லாம் நடந்துடுமா

அதாவது இந்த அறிக்கையில் எது இல்லைன்னா

1.அணு சக்தி உண்மையில் ஆபத்தானதா இல்லையா

2.அணுசக்தி ஆபத்தில்லாதது என்றால் கட்சி ஆதரிக்குதா இல்லையா

3.வெறும் நம்பிக்கை மட்டும் தெரிவிக்காமல் பாதுகாப்பற்ற அனு உலைகளுக்கு எதிராக என்ன செய்திருக்கிறார்கள்

4.அணுசக்தியை தவிர வேறு எந்த மூலத்தில் இருந்தும் தற்போதைய மின் நுகர்வை பூர்த்தி செய்ய முடியாத போது
//அணுசக்தியை முக்கிய திரட்சியாக கொண்ட அரசின் எரிசக்தித் திட்டத்தை நாங்கள் ஏற்பதற் கில்லை. வளர்ந்து வரும் இந்தியாவில் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி படுகைகளை அதிக அளவில் பயன்படுத்துவது, இயற்கை எரிவாயு சார்ந்த திட்டங்களை மேம்படுத்துவது மற்றும் சூரிய ஒளி பயன்பாட்டை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் அவசியமாகும். //

இப்படி ஒரு அறிக்கை ஏன்

5.மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்கிற வாதம் மட்டும் போதாது மேலும் மக்களின் பாதுகாப்பும் தற்போதைய மின் தேவையை பூர்த்தி செய்ய
அணு மின் திட்டத்தை விட்டால் வேறு வழி இல்லை என்பதையும் மார்க்சிஸ்டு கட்சி பேசனும் இல்லையா

ஒரு அறிக்கையில் எத்தனை குழப்பங்களுடன் பேசுகிறது சிபிம்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post