முல்லை பெரியாறு பிரச்சனை தேசிய இனப்பிரச்சனையா?

இல்லை இது ஒரு தேசிய இனப்பிரச்சனை இல்லை இது ஒரு காண்டிராக்ட் பிரச்சனை சரி இது ஒரு தேசிய இனப்பிரச்சனை என்றால் உண்மையான கம்யூனிஸ்டுகள் யார் பக்கம் நிற்கவேண்டும் .

முதலில் முல்லை பெரியாறு பிரச்சனைக்கு வருவோம் இதில் தமிழ்நாட்டின் பக்கம் நியாயம் இருக்கிறது ஏனெனில் 999 வருடங்களுக்கு போடப்பட்ட ஒரு ஒப்பந்தம் அதை இடையில் முறிக்க கேரளா முனைகிறது காரணம் பாதுகாப்பு பிரச்சனை என்கிறது மேலும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு சொன்ன தீர்ப்பையும் மதிக்க மறுக்கிறது இது ஒரு சட்டத்தை மீறிய செயல் .

அடுத்து கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அணைக்கு கீழே வசிக்கும் மக்களுக்கு பயத்தை ஊட்டி அரசியல் செய்கிறது

அடுத்து இதை ஒரு தேசிய இனப்பிரசனையாக கருதுபவர்களுக்கு அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட கேள்வியை எதிகொள்ள வேண்டும்

1.ஒரு தேசிய இனத்தின் எல்லைக்குள் இருக்கும் நீர் வளத்தை இன்னொரு தேசிய இனம் பயன்படுத்த போடப்பட்ட ஒரு ஒப்பந்தம் இரு தேசிய இனத்தின் ஒப்புதலின் பேரிலும் விருப்பத்தின் அடிப்ப்டையிலும் போடபட்டிருக்க வேண்டும்

2.ஆனால் பிரிட்டீஸ் ஏகாதிபத்தியம் போடும் எந்த ஒப்பந்தமும் போடசொன்னாலும் அதை கண்ணைமூடிக்கொண்டு கையெழுத்து போடும் நிலையில்தான் திருவிதாங்கூர் சமஸ்தானம் இருந்திருக்கும்

3.இந்த வகையில் பார்க்கும்போது இங்கே ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்பது கேரளாவாகவும் ஒடுக்கும் தேசிய இனம் என்பது தமிழ்நாடாகவும் வருகிறது இப்போது கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்படும் தேசிய இனத்தைதான் ஆதரிக்க வேண்டும்

எனவே இந்த விசயத்தை தேசிய இனப்பிரச்சனையாக பார்க்கமுடியாது

1.தேசிய இனங்களுக்குள் எந்த முரண்பாடும் தோன்றவில்லை ஆனால் தேசிய இன மோதலை உருவாக்கி குளிர்காய இந்த விசயத்தை பயன்படுத்துவது மார்க்சியத்திற்கு விரோதமானது

2.இன அடிப்படைவாதிகள் முதலில் இம்மாதிரி விசயத்தில் தேசிய வெறியை வளர்பார்கள் பிறகு மக்களிடையே கருத்து வேற்றுமை என்பது அழிக்கமுடியாத அளவு வரும்போது அதில் அரசியல் ஆதாயம் அடைவார்கள் (தேசிய இனவிடுதலைக்கு பிறகே அல்லது சோசலிசம் என்பதே தேசிய இன அடிப்ப்டையில் அடையப்படவேண்டும் என்று பேசுபவர்களே இவர்கள்)

3.இன்னொரு வகை இருக்கிறார்கள் இவரக்ள் ஓட்டு கட்சி அரசியல் வாதிகள் இவர்களுக்கு இம்மாதிரியான விசயங்கள் ஓட்டு அரசியலுக்கு பயன்படுவதால் ஊதி ஊதி பெரிசாக்கி கொண்டே இருப்பார்கள் இவர்களால் இந்த பிரச்சனை தீராது இந்த வகையறாவை சேர்ந்தவர்களே இன்று கேரளாவில் உக்கார்ந்து இருக்கும் போலி கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ் ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளும்



மற்றபடி இந்த காண்டிராக்ட் பிரச்சனையை காண்டிராக்ட் போட்ட இரண்டு கம்பெனிகள் தீர்த்துகொள்வதை போல தீர்த்துட்டா சரியாகிடும்

இதில் விளையாடுவது இரண்டு மாநிலமக்களுக்கும் பிரச்சனையானது

----------------

ஒருத்தர் எழுதி இருக்கார் படிங்க :

மிழகம் எப்போதும் தண்ணீருக்காக தவமிருக்க வேண்டும் என்பது தலைவிதி போலும். அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா வரிசையில் தற்போது கேரளமும் வரிந்துகொண்டு நிற்கிறது.

முல்லைப் பெரியாறு தீர்வுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு டிசம்பர் 5-தேதி இறுதி கட்ட கூட்டத்தை கூட்டப்பட வேண்டிய நிலையில், நீதியின் நியாமான பார்வையை தடுக்க முயல்கின்றது கேரளம், "அழுத பிள்ளை பால் குடிக்கும்," என அழிச்சாட்டியம் செய்கிறது.

கர்னல் பென்னி குக்கினால் கி.பி.1895-ல் கட்டி முடிக்கப்பட்டு, தென் தமிழகத்தை வளமாக்கிய முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என கூக்கிரலிடுகிறது கேரளா. நில நடுக்கத்தினால் அணை உடைந்து, கேரளாவின் 4 மாவட்டங்கள் அழிந்துவிடும் என பொய் பிரசாரத்தில் உச்சாஸ்தாயில் உளருகிறது, அம்மாநில அரசு.

உலக வரலாற்றில் இதுவரை அணைகள் உடைந்தற்கு காரணம், பெரும் மழையினால் ஏற்படுகின்ற வெள்ளமும், கட்டுமான குறைபாடுகளுமே.

சமீபத்தில் வெளிவந்த 'டேம் 999' என்ற திரைப்படம், சீனாவின் ஹீய் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பான்கியோ அணை 1975-ல் உடைந்ததை பற்றி கூறினாலும், இதன் இயக்குநர் சோகன் ராயின் கருத்துக்கள், முல்லைப் பெரியாறு அணை உடையப் போவதாக குறிக்கின்றன. இது ஒரு பொய்ப் பிரசாரத்தின் தொழில் நுட்ப பரிமாண வளர்ச்சி. உண்மையில், இந்த பான்கியோ அணை உடைந்தற்குக் காரணம், சீனாவில் 1000 ஆண்டுகளில் ஏற்படாத ஒரு பெரும் மழையும், கட்டுமானத் தவறால் ஏற்பட்ட விரிசல்களும்தான்.

முல்லைப் பெரியாறு அணை 1994-ல் நவீன தொழில் நுட்பத்தால் மேம்படுத்தபட்டு மிகவும் உறுதியாக உள்ளது எனவும், ஒருவேளை அணை உடைந்தால், வெளியேரும் சுமார் 6 டிஎம்சி நீர் மலை பாதை வழியாக இடுக்கி அணையை அடையும். இதற்கும் சுமார் 4 மணி நேரம் பிடிக்கும் என ஆதாரங்களுடன் தமிழக முன்னாள் பொது பணியாளர் சங்கம் ஆணித்தரமாக கூறுகிறது.

மேலும், 1500 ஆண்டுகள் பழமையான கல்லணை நவீன தொழில் நுட்பத்தால் சீரமைக்கப்பட்டு இன்று வரை கம்பீரமாக நிற்ப‌தை எடுத்துரைக்கிற‌து.

இந்நிலையில், கேர‌ளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பின‌ர்க‌ள் க‌ட்சி வேறுபாடின்றி இப்பிரச்னையை முன்வைத்து நாடாளுமன்ற வாயிலில் த‌ர்ணா போர‌ட்ட‌ம் ந‌ட‌த்திய‌ போது, ஒரு கூட்ட‌ம் டெல்லி பாட்டியலா நீதி ம‌ன்ற‌த்தில் ஜாமீனுக்கு கையெழுத்திட‌வும், ம‌று கூட்ட‌ம் "அம்மா இன்றி அணுவும் அசையாது," என அமைதி காத்த‌து. எதிர்ப்புப் போர‌ட்ட‌த்தில் எஞ்சியது சில‌ பேர் ம‌ட்டுமே.

அணை உடைய‌ப்போகிற‌து என‌ கார‌ண‌ம் காட்டி, புதிய‌ அணை க‌ட்டுவோம் என‌ மார்தட்டி, முல்லைப் பெரியாறு ப‌குதியை முழுதாக‌ த‌ன் க‌ட்டுக்குள் கொண்டும் முய‌ற்சியை கேர‌ள‌ அர‌சு துவ‌ங்கி காய்க‌ளை ந‌க‌ர்த்துகிற‌து. உண்மையில் இது கேர‌ள‌ மின் உற்ப‌த்திக்காக‌வும், த‌மிழ‌க‌த்தை வ‌ஞ்சிக்க‌ வேண்டும் என் நோக்க‌மே த‌விர‌ வேறில்லை.

ஏறத்தாழ 10 ல‌ட்ச‌ம் த‌மிழ‌க‌ விவசாயிக‌ளின் வாழ்வார‌த்தை அழித்து, தென் த‌மிழ‌க‌த்தை மீண்டும் க‌ற்கால‌துக்கு அழைத்து செல்ல‌ முற்ப‌டும் கேர‌ளாவின் குறுகிய ம‌ன‌ப்பான்ம‌யை த‌மிழ‌க‌ம் த‌டுக்க‌ வேண்டும்.

மனிதத் த‌வ‌றினால் உடைய‌ப்போவ‌து அணைய‌ல்ல‌.. த‌மிழ‌க‌த்தின் எதிர்கால‌மும், இந்தியாவின் ஒற்றுமையும், இறையாண்மையும்தான்!

-----------------

இன வெறிவாதத்தை தூண்டும் ஒரு கட்டுரை :

http://123tamizhamutham.blogspot.com/2009/12/re_2792.html

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post