நாம் ஏன் தேர்தலை புறக்கணிக்க கூடாது

நாம் ஏன் தேர்தலை புறக்கணிக்க கூடாது

தேர்தல் பாதை திருடர் பாதை புரட்சி பாதையே எங்கள் பாதை

ஓட்டு போடாதே புரட்சி செய்

வசனமெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் அது ஒரு
கம்யூனிஸ்டு கட்சியோட நிலைபாடாக இருக்க இயலுமா
என்பதை ஆராய்ந்தால் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்

1.புரட்சிகர சூழல் நிலவாத போது பாராளுமன்ற அரசியலில் ஈடுபடுவது

2.புரட்சிகர சூழல் நிலவும் போது பாராளுமன்றத்தை தூக்கி எறிந்து விட்டு ரோட்டுக்கு வந்து போராடுவதும் தான் சரியானதாக இருக்கும்
  
   குறிப்பாக (ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கம் புரட்சிகர எழுச்சி பெற்றிருக்கும் தருணத்தில் டூமாவை புறக்கணித்தது. மாறாக, புரட்சிகர தாகவும் சோர்வுற்றிருந்த தருணத்தில் பாராளுமன்றத்தை பயன்படுத்தியது. )

 அதாவது மொத்தமாக எந்த சூழலையும் நாம் நமக்கு தகுந்தவாறு பயன்படுத்தி கொள்ள வேண்டுமே தவிர
சமயம் வரட்டும் என உக்கார்ந்து மோட்டுவளையை பார்த்து கொண்டு இருக்க கூடாது

    இதனால்தான் டூமாவில் ஒரு சில நேரம் பங்கேற்கவேண்டும் என்றும் சில நேரம் டூமா (பாராளு மன்றம் ) புறக்கணிக்க வேண்டும் என்றும் லெனின் குரல்
ஒழிப்பதை பார்க்கிறோம்

   சரி இந்த ஓட்டு அரசியலுக்குள் வந்து வேட்பாளராக
நின்றால் நமக்கு ஓட்டு கிடைக்குமா , ஜெயிக்க முடியுமா
மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா
என வரிசையாக கேள்விகளை இந்த தூய புரட்சியாளர்கள்
கேட்கிறார்கள்

    1.தோற்று போவது பற்றிய கவலை எதுக்குய்யா
கம்யூனிஸ்டுக்கு  தோற்கலாம் ஆனால் அந்த மேடையில் நின்று இந்த முதலாளித்துவ சமூகத்தை தோலுரிக்கல்லாம்
    2. பாராளு மன்றம் சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைத்தால் மக்கள் பிரச்சனையை பேசலாம்
    3.கிடைக்கவில்லையா இருக்கவே இருக்கு ரோடு அங்க நின்று பேசலாம்

       
   நமது நோக்கம் புரட்சியை நோக்கி மக்களை செலுத்துவதே என்றால் புரட்சியை காலத்தின் கையில் கொடுத்து விட்டு

   எந்த போராட்டம் நடந்தாலும் ஒதுங்கி இருந்து அதை விமர்சனம் செய்வதும்

   தேர்தல் நடந்தால் தூர இருந்து வேடிக்கை பார்ப்பதும்
என இருந்தால் இன்னும் ஆயிரம் வருடங்கள் நீங்கள் தூய கம்யூனிஸ்டாக இருக்கலாம்

   ஆனால் சாக்கடைக்குள் இறங்காமல் அதை சுத்தம் செய்ய இயலாது
     அய்யோ நம்ம சட்டை அழுக்காகிடுமேன்னு மேலேயே
உக்கார்ந்து இருந்தால்

   நீங்கள் எழுதுவது ஓம் நமச்சிவாய சிவாய நமக மாதிரியான மந்திரமே தவரி  நடைமுறைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை

    இந்த பாராளு மன்றத்துக்குள் உக்கார்ந்து அதை எக்ஸ்போஸ் செய்து காட்டவேண்டும் என்றுதான் லெனின் சொல்கிறார் அதே நேரத்தில் நம்ம சிபிஎம் சிபிஐ மாதிரி

பதவிக்காக கூட்டனி அமைத்து மழுங்கி போகவும் கூடாது
அவங்க அப்படி ஆகிட்டாங்கன்னு சொல்லிட்டு முழுசா ஒதுங்கி போகவும் கூடாது

    சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
   சிறிசா இருக்கையில் திருத்திகோ
   தவறு சிறிச இருக்கையில் திருத்திகோ

 லெனின் :

நீங்கள் ஒரு புதிய சமுதாயம் சமைக்க விரும்புகிறீர்கள். ஆயினும் திடநம்பிக்கையும் பற்றுதியும் கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்ட்டுகளாலான சிறந்த பாராளுமன்றக் குழு ஒன்றினைப் பிற்போக்குப் பாராளுமன்றத்தில் நிறுவிக் கொள்வதிலுள்ள சிரமங்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள்! இது சிறு பிள்ளைத்தனமானதல்லவா

 
 

   



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post