அன்னா ஹசாரேவின் மீதான அருந்ததி ராயின்விமர்சனம் சரியா ?

அருந்ததி ராயின் கட்டுரைக்கான சுட்டி :http://puyarparavai.blogspot.com/2011/08/blog-post_27.html

 

//அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில்

கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை

மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை -மத்தியத்துவப்படுத்த

காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத - அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம்//

 

காந்தி அதிகாரத்தை மைய்யப்படுத்துவதை எதிர்த்தார் ஆனால் அன்னாஹசாரே அதிகாரத்தை

மைய்யபடுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு சரியா இதற்கு நீங்கள் காந்தி எழுதி யங் இந்தியாவில் வெளிவந்த சில கட்டுரைகளை படித்தால் போது காந்தி ஒரு  கிராமத்தின் தேவைகளை அந்த மக்களின் உடல் உழைப்பின் மூலம் பெறுவதிலும் , பெரும்பாலும் நவீன உற்பத்தி கருவிகளின் மூலம் செய்யப்படும் உற்பத்தியானது பண்ட குவிப்பு , சுரண்டல் சொத்து சேர்ப்பு இவைகளில் கொண்டு போய் விடும் என கருதி நவீன உற்பத்தி முறைகள் உற்பத்தி உறவுகளுக்கு எதிராக வரலாற்று சக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முயன்றார் என்பதை காணலாம் அது காந்தியின் கொள்கையில் உள்ள குறைபாடே , ஆகவே காந்தியாக யாரும் இருக்க வேண்டியதில்லை அவரது புரிதல் தவறு மிக கேடனாது நவீன உற்பத்தி கருவிகள் இல்லை அது யார் கையில் இருக்கவேண்டும் என்பதே .இப்படி காந்தியை விமர்சனமின்றி இழுத்து அவரை அன்னா ஹசாரேவுடன் இணைத்து வைத்து விமர்சிப்பது அன்னா ஹசாரேவை எதிர்க்க விமர்சிக்க உதவாது

 

//கோகோ கோலாவில் இருந்தும், லேமென் பிரதர்ஸில் (Lehman Brothers) இருந்தும் தாரளமாய் நிதி

வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப்

பிரச்சாரத்தை முன்னின்று நடத்துபவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில், அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான நிறுவனங்க‌ளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய நிறுவனங்க‌ளும், பல சிறப்புப் பொருளாதார பகுதிகளைக் கட்டிய நிறுவனங்க‌ளும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல

கோடிக்கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்க‌ளும், ரியல் எஸ்டேட் நிறுவனங்க‌ளும்

அடக்கம். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில்

இருப்பவர்களாகவும் மற்றும் பலவித கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள்

அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்/

 

மிக சரியான சந்தேகம் ஏன் இவர்களுக்கு அன்னா ஹசாரேவுடன் கூட்டனி என்பதை கேட்கலாம்

ஊழல் ஒழிந்தால் அவர்களுக்கு அரசியல் வாதிகளுக்கு கமிசன் கொடுக்காமல் தனியார் மயம் செய்யலாம் என்கிற நோக்கம் இருக்கலாம் இந்த நோக்கத்துக்காக நாம் இந்த போராட்டத்தை நிராகரிக்க முடியாது . எந்த நோக்கத்துக்கு யார் ஊழலை அழிக்க முயன்றாலும் ஊழல் அழிவதும் ஊழலுக்கு சட்டபடியான ஒரு தடை இருப்பதும் நல்லதுதானே

 

மேலும் இந்த விசயத்தில் ஒட்டுமொத்த பொதுஜனங்களின் கருத்து குவிந்துள்ளதை மறுக்க முடியாது ஏனெனில் லஞ்சம் ஊழலால் பாதிக்கப்படாதவன் என்று யாரும் இல்லையே இங்கு

 

//முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன்

லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால்

கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர்,

ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு,

ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த

ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக்

கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய

ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும்

தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)//

 

அடுத்த ஒரு தவறான புரிதல் மாவோயிஸ்டுகளை போல அன்னாஹசாரே அரசாங்கத்தை தூக்கி எறிய

முயலவில்லை இருக்கிற அரசாங்கத்தின் திருத்தங்களை சட்டத்தின் மூலம் கொண்டு வரலாம் என நினைக்கும் நபர்களில் ஒருவர் என்பதால் அவரக்கு சமூக மாற்றம் கோரும் மாவோயிஸ்டுகளோ எந்த சம்பந்தமும் இல்லை

/அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு; அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து,

நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து

துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம்

சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாக, கணக்கில்

அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல்

பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும்.//

 

இப்படி செயல்படுதால் என்ன பிரச்சனை ஒரு அரசு செயல்படாமல் அல்லது வர்க்க நலன் சாந்து செயல்படும் போது அந்த வர்க்கத்தின் நலன்களுக்குள்ளேயேமோதல் எழலாம் அருந்ததிராயின் கூற்றுபடி அது ஆளும் வர்க்கத்துக்குள் உள்ள சண்டையாகவே இருக்கட்டும் பயன் பெற போவது நிச்சயம் ஆளும் வர்க்கமல்ல.

 

அரசு என்பது எப்போதுமே வர்க்க நலன் சார்ந்த அரசு அதில் பிரச்சனை வருகிறாதென்றால் ஆளும்

வர்க்கத்துக்குள் அடிதடி வருகிறதென்றால் அது ஊதி அணைக்கப்பட கூடாது

ஒரு பக்கம் இந்த அமைப்பை வைத்து சுரண்டுபவர்கள் இன்னொரு பக்கம் இந்த அமைப்பை பாதுகாப்பவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வரட்டும் இப்போது நாம் இந்த அமைப்பை பாதுகாப்பவர்கள் பக்கம் நிற்கவேண்டுமா வேண்டாமா?

 

(இது ஒருவேளை அன்னா ஹசாரே இன்னொரு ஆளும் வர்கத்தின் நலன் சார்ந்து இயங்கினால்)

 

//இந்த மசோதா பயன் தருமா, தராதா என்பது நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே

உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் ருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறித்தான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான

சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள்

இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி நியாயமாக இருக்கும்?//

 

ஊழல் என்பது நாம் பார்க்கும் விதத்திலேயே உள்ளது என்பது மிக மிக முக்கியமான கருத்து முதல் வாதம்

இதற்கு பதிலாக ஊழலாக பார்க்காதீர்கள் என ஒரே பதிலில் விடை கூறிவிடலாம் .

இவர் சொன்ன உதாரணத்தின் விடை இந்த சமூக அமைப்பு இருக்கும் வரை ஊழல் இருக்கும் என்பதாகும்

இதுதான் பிற்போக்குதனம் நாம் கையை கட்டி உக்கார்ந்து கொண்டு இந்த அமைப்பு தானாக மாறும் என இருக்க கூடாது

 

அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும் அதற்காகத்தான் அன்னாவின் பின் இளைஞர்கள் திரண்டுள்ளார்கள்

 

 

--

தியாகு

 

-

""

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பதறிவு

-வள்ளுவர்

வலைப்பூ:www.thiagu1973.blogspot.com

============================

 


18 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post