குருட்டு இனவாதமும் நாம் தமிழர் இயக்கமும்

சிங்கள வாசக டீ சர்ட் போட்ட சிங்களவர்களுக்கு அடி

செய்தி:

சென்னை: சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கி்யிருந்தனர்.

அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சாலையில் சுற்றியுள்ளனர். இதைப் பார்த்த சிலர் அவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சமயத்தில் கிட்டத்தட்ட 50 பேர் திரண்டு வந்து அந்த சிங்களர்கள் தங்கியிருந்த விடுதிக்குள்ளும் புகுந்து சரமாரியாக தாக்கினர். இதில் சில சிங்களர்கள் காயமடைந்தனர்.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேரைப் பிடித்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் தாக்குதலைத் தொடர்ந்து சிங்களர்கள் பெரும் பீதியடைந்தனர். உடனடியாக அவர்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் இடமாற்றினர். அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Pasted from <http://mail.google.com/mail/?ui=2&view=bsp&ver=ohhl4rw8mbn4>

இலங்கையில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் நாள்தோறும் அநியாயமான முறையில் ஒரு தீமை நடக்கிறது அதுவும் யாழில் கேள்விக்கு இடமில்லாமல் கற்பழிப்பும் கொலையும் நடக்கிறது உண்மை பெளத்த மடாலயத்தில் உக்கார்ந்திருக்கும் பிட்சுக்களும் சிங்கள இனவெறிக்கு உடந்தை என்பதை நாம் மறுக்கவில்லை ஆனால் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் சிங்களர்களை டி சர்ட்டில் சிங்கள வாசங்கள் இருக்கிற ஒரே காரணத்தினால் இனவெறி தாக்குதல் நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்

இதை செய்து வரும் நாம் தமிழர் என்கிற கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மொத்தமா இனவெறி பாதையில் செல்கிறார்கள் இதற்கு முன் புத்த பிட்சுகள் தாக்கப்பட்டதும் அதற்கு முன்

ஜெயராம் என்கிற நடிகர் தாக்கப்பட்டதும் என இவர்களது வன்முறை சார்ந்த வன்முறையின் மேல் நம்பிக்கை கொண்டு குருட்டுதனமான இனவாதம் தொடர்கிறது .

தொடர்ந்து நமது அண்டை மாநிலங்களின் மேல் வளர்க்கப்படும் வெறுப்பும் அவதூறுமே தங்களது தத்துவத்தின் அடிப்படை என்று எண்ணி விட்டார்கள் தேசிய சுயநிர்ணய உரிமை என்பது மற்ற தேசிய இனங்களின் மீதான வெறுப்பை வளர்த்து விடுதல் அல்ல

இன்று இந்தியாவிலும் உலகம் பூராவும் நடந்து வருவது உலகமயமாக்கலின் கொடிய சுரண்டலே அதற்குள் இனபோராட்டங்கள் ஒடுக்கப்படும் போது இன விடுதலை தேசிய போராட்டம் என்பது உலகமயத்தின் முன்பு ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது

இங்கே வர்க்க ஒற்றுமையும் வர்க்க போராட்டமும் என்கிற ஒற்றை செயல் வழியை நோக்கி சமூகத்தின் சூழல் தள்ளும் போது இன்னும் தேசத்தின் நலன்கள் என்கிற முதலாளித்துவ கோரிக்கையை பிடித்து தொங்குபவர்கள் அப்பாவிகள்

அப்பாவித்தனம் என்பது வழிபறியை விட கேடானது -லெனின் (அரசும் புரட்சியும் )

ஈழ விடுதலை போராட்டத்தை தமிழர்களுக்கிடையே முறைபடி முழு வீச்சில் கொண்டு செல்ல இங்குள்ள கட்சிகளால் இயலாமல் போய்விட்டதாக கூறி களம் இறங்கிய சீமான் என்ன செய்கிறார் தேவர் குருபூசையிலும் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்ன் கூட்டங்களிலும்

கலந்து கொண்டு வருகிறார் தமிழன் என்கிற ஒரே புள்ளியில் இணைக்க ஏன் ஆதிக்க

சாதி புள்ளிக்கு போகவேண்டும் அதுவல்லவே சரியான பாதை மேலும் ஒடுக்கும் தமிழனும் ஒடுக்கப்படும் தமிழனும் ஒன்றல்ல முதலாளி தமிழனும் தொழிலாளி தமிழனும் ஒன்றல்ல

அப்படி எனின் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க என்ன தீர்வு போராட்டம்தான்

எந்த வகை போராட்டம் உலகத்தில் ஏகாதிபத்தியத்தை இந்திய ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கும் வர்க்க போராட்டத்தில் மட்டுமே இது முடியும்

அதை விடுத்து சிங்கள நாட்டில் இருந்து இங்கே வரும் ஓரிருவரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது அங்கே கம்பிவேலிக்குள் இருக்கும் தமிழனுக்கு உதவாது


-------------------------


In Sri Lanka, living in every now and everyday unfair method of a disadvantage, creating, and News on the question of lack of rape in the killing of tamils people is real Buddhist monasteries Sinhala racism is involved, we do not deny that, but from Sri Lanka, Tamil Nadu, to the Sinhala people and T-shirt and the letters only because of the racist attacks strongly condemn

Buddhist monks were attacked members of the party before .Before all, the actor Jayaram attacked.
Following their philosophy of hatred on the basis of our neighboring states that could be raised above the national self determination has cultivated a hatred of other nationalities are not vitutal
Today's heinous exploitation of globalization that is happening in India and around the world when ethinical struggle oppressed racial and national liberation struggle is nothing in front of Globalism

Here a single act of class unity and class struggle towards the direction of society and environment while pushing the interests of the bourgeois demand for the nation to hold them innocent Hanging

Mr. seeman who has very upset on eelam struggle take decision to fight with the help of caste support.

Why do I connect to the dominance of a single point

That point is not to go to achieve the right path and not suppressing tamilan oppressed worker tamilanum not same If so what is the solution to prevent this .



The struggle against world imperialism, in which imperialism and class struggle in India can only.

attack on a few people who came from srilanka will not help to the people who behind the fence with out help



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

11 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post